Wednesday, September 27, 2017

தீபா மீண்டும் திருமணமா?

ஜோதிடர் அறிவுரையால் முதல்வர் கனவு: மாதவனுடன் தீபா மீண்டும் திருமணமா? : செய்தி
அதாவது தமிழகத்திற்கு கிட்டதட்ட 50 ஆண்டுகாலம் உழைத்துவிட்டு, பல தியாகங்கள் செய்த தீபா என்பவர் நான் ஏன் இன்னும் முதலமைச்சராக முடியவில்லை என்ற விரக்தியில் ஜோதிடரை அணுகினாராம்
அந்த ஜோதிடரோ, உங்கள் மக்கட் பணியில் ஒரு குறைவுமில்லை, மணாளனை பிரிந்த ஜாதக தோஷமே காரணம். அதனால் ஜெயா சமாதி முன் திருமணம் மட்டும் செய்தால் தோஷம் தீரும். நீர் நிச்ச்சயம் முதல்வராவாய் என சொல்லிவிட்டாராம்.
அப்படியே ஜெயா சமாதி முன் இருவரும் திருமணம் செய்ததாக செய்திகள் வருகின்றன.
( சாந்தி முகூர்த்தமும் அந்த சமாதி முன் நடந்ததா என்பது பற்றி ஒரு செய்தியுமில்லை..)
இன்னும் என்னென்ன கூத்துக்களை இந்த தியாக தம்பதிகள் செய்யுமோ தெரியாது.
இந்த‌ தீபா, அந்த சசிகலா குடும்பத்தில் யாரையாவது வேலைக்காரியாக அமர்த்தினால் கூட பிரயோசனம் உண்டு, அத்தை கண்ட வித்தை அதுதான்.
ஏம்மா தீபா, ஜெயா எப்படி செத்தார் என எல்லோரும் விசாரித்துகொண்டிருக்க, ஜெயா போல எப்படி ஆட்சியினை பிடிப்பது நீங்கள் ஜோசியம் பார்த்துகொண்டிருக்கின்றீரா?
இதுதான் அத்தை எப்பொழுது சாவாள், சாவிகொத்து எப்பொழுது கைக்கு வரும் என்பதோ?

No comments:

Post a Comment