Monday, September 18, 2017

அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது

நாங்கள் சிவசேனை மற்றும் பாஜகவின் தயாரிப்பேதான், அதனை நிரூபித்துகொண்டே இருப்போம் என செய்துகாட்டுபவர்களில் அங்கிள் சைமனின் அடிப்பொடிகளை அசைக்க முடியாது


அவ்வப்போது நிரூபிப்பார்கள், இப்பொழுது பெரியார் பக்கம் வந்துவிட்டார்கள்


அதாவது பெரியார் ஈழவிடுதலைக்கு உதவவில்லை, குமரி பிரிவினைக்கு உதவவில்லை, சென்னை போராட்டத்திற்கு உதவவில்லை , அதனால் அவர் தமிழின துரோகி என சொல்ல ஆரம்பித்தாயிற்று




தமிழக அமைப்பின் சாதிக்கு சற்றும் குறையாதது யாழ்பாண சாதிவெறி, இது பெரியாருக்கு தெரியாதது அல்ல, அதனால்தான் யாழ்பாண வர்க்கம் இங்கு ஆதரவு கேட்டபொழுது அவர் அமைதிகாத்தார்.


கேரள தமிழருக்கு பெரியார் குரல் எழுப்பவில்லை என சொல்பவர்கள், வைக்கம் போராட்டத்தினை அவர் நடத்தியதையும், அது பெரும் வெற்றிபெற்று மக்களுக்கு உரிமை கிடைத்த கதை எல்லாம் மறைக்கின்றார்கள்


வைக்கம் போராட்டத்திற்காக அவர் சிறை சென்ற கதை எல்லாம் மறந்துவிடுகின்றது.


பெரியாரை பற்றி புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும், ஆம் அவர் தமிழ் வெறியர் அல்ல, தாழகிடந்த மக்கள் தென்னகம் எங்கும் எங்கெல்லாம் அடங்கி கிடந்தார்களோ அவர்களை எல்ல்லாம் சிந்திக்க செய்தார்


வாசிக்கும் பழக்கம் முதல், கேள்வி கேட்கும் பழக்கம் வரை அவர் தொடங்கி வைத்தார்


அந்த மனிதன் தென்னகத்து மக்களுக்கு பொதுவாக வாழ்ந்தான், அவன் மூட்டிய தீ அப்படி எரிந்தது. பெரியாரின் திராவிட கொள்கையினை தகர்க்கத்தான் மொழிவாரி பிரிவினை செய்தது டெல்லி.


அதாவது இனத்தால் திராவிடனானாலும், மொழியால் பிரிக்கலாம் என சொல்லி அடித்தார்கள்.


இந்த சூழ்ச்சியில் சிக்க விரும்பாத பெரியார் சில விஷயங்களில் அமைதி காத்தார், அது குமரியோ, சென்னையோ சர்ச்சை வரும்பொழுதெல்லாம் அது திராவிடத்தில்தானே இருக்கின்றது என அவர் சொன்னது இப்படித்தான்


அப்படி தனக்கு எதிராக தொடுக்கபட்ட ஆயுதத்தை அவர் அப்படி கையாண்டார்.


இதனை புரிந்துகொள்ள கொஞ்சம் அறிவு வேண்டும், அங்கிளின் தும்பிகளிடம் அதனை எதிர்பார்த்தால் எப்படி?


இம்மானுவேல் சேகரனுக்கும் அஞ்சலி, பசும்பொன் தேவருக்கும் அஞ்சலி, பச்சை தமிழன் காமராஜரும் வாழ்க, காரணம் எல்லோரும் தமிழர் ஹிஹிஹீஹ்ஹி என சொல்லிகொண்டிருக்கும் கும்பலிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?


"ஆமாம், நாங்கள் பாஜக தயாரிப்பேதான், அதனால்தான் யார் இலங்கை சென்றாலும் கத்துவோம். மோடியும் தமிழிசையும் சென்றால் கத்தமாட்டோம்.


புலி காசி ஆனந்தன் ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கட்டி தழுவினாலும் சும்மா இருப்போம்.


எங்களுக்கு தேவை காங்கிரஸ் எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு என பகிரங்கமாக சொல்லுங்கள், அதனை விட்டு விட்டு ஏன் இப்படி சுற்றி வளைக்கின்றீர்கள்?"



No comments:

Post a Comment