அய்யா ராமதாஸ், சின்ன அய்யா பாகுபலி எல்லாம் எங்கய்யா போய் தொலைந்தீர்?
சினிமாவில் அமலா பால் சிகரெட் குடிக்கின்றார் அய்யா, அதுவும் மூக்கு வழியாக வேறு புகை விட்டு தொலைக்கின்றார். இந்த கவித்துவமான காட்சிக்கு ஒருவன் இசையும் அமைத்திருக்கின்றான்
ரஜினி சினிமாவில் சிகரெட் பிடித்து தமிழக இளைஞர்களை கெடுக்கின்றார் என என்னவெல்லாம் செய்தீர்கள்? அவர் படபெட்டியினை எல்லாம் தூக்கி அழிச்சாட்டியம் செய்யவில்லையா?
இப்பொழுது என்ன அமைதி? உத்தரவிட்டால் உங்கள் பாட்டாளி தொண்டர்கள் படபெட்டிக்கு பதிலாக அமலா பாலையே தூக்கிவிடுவார்கள் எனும் அச்சமா?
இப்பொழுது கேட்டால் சின்னய்யா கார் ஓட்டிகொண்டே என்ன சொல்வார் தெரியுமா?
"அப்பொழுது நான் மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தேன், அந்த பொறுப்பில் எச்சரித்தேன். இப்பொழுது என்னை மத்திய அமைச்சராக அமர்த்துங்கள் அமலா பாலை உண்டு இல்லை என ஆக்கிவிடுகின்றேன்"
ரஜினியினை புகைக்காகவும், குஷ்பூவினை கலாச்சாரம் என்ற பெயரிலும் என்ன கேள்வி எல்லாம் கேட்டீர்கள் அய்யா?
குஷ்பூ என்றாவது புகை பிடித்தோ அல்லது தரம் தாழ்ந்து நடித்தோ கண்டீரா? அவர்தான் தமிழ் கலாச்சாரத்தை கெடுக்கின்றார் என பொங்கியது ஏன்?
பொங்கியது உண்மையெனில் இப்பொழுது அமைதி ஏன்?
இந்த அமலா பாலை ஏன் விட்டுவிட்டீர்கள்?
டாக்டரையா? இந்த புகை விஷயத்தில் நீங்கள் ரஜினியினை மட்டும் எதிர்த்தது எல்லாம் நடிப்பா? சொல்லுங்க டாக்டர் சொல்லுங்க
அத்தனையும் நடிப்பா?
இது பெண்ணுரிமை என விட்டு விடுகின்றீர்களா?
ரஜினி ரசிகர்கள் என்பவர்கள் கொஞ்சமும் சிந்தனையில்லா கூட்டம், எல்லாம் மறந்துவிடுவார்கள்.
அவர்கள் சுய அறிவோடு இருந்திருந்தால் ரஜினி என்றோ அரசியலுக்கு வந்திருப்பார் அல்லது சினிமா விட்டே ஓடியிருப்பார். இந்த அப்பாவி மந்தையே அவரை இன்னும் பிடித்துகொண்டிருக்கின்றது.
மற்றபடி தங்கள் தலைவன் பட்ட அவமானம் எல்லாம் அவர்களுக்கு அவர்கள் தலைவரின் அரசியல் வாக்குறுதி போலவே மறந்துவிடும்
ஆனால் நாங்கள் வேறுமாதிரி, எங்கள் தலைவிக்கு இழைக்கபட்ட ஒவ்வொரு அநியாயத்திற்கும் நீதி கேட்டுகொண்டே இருப்போம்.
"சுந்தர குஷ்பூ சங்க ஆதரவு வன்னியருக்கு இல்லை".
ஒன்று அமலா பாலை கண்டியுங்கள், அல்லது குஷ்பூ மீது முன்பு தெரிவித்த கருத்துக்களுக்காக மன்னிப்பு கேளுங்கள்.
இல்லாவிட்டால் குஷ்பூ ரசிகர் மன்றம் சும்மா விடாது.
ஆக தமிழனுக்கு ஒரு நாடும், தலித்துக்களுக்கு ஒரு நாடும் கொடுக்காமல் தமிழக சிக்கல் தீராது போல
ஒருவன் திராவிட நாடு என்கின்றான், ஒருவன் தமிழ் தேசம் என்கின்றான், ஒருவன் தலித் தேசம் என்கின்றான், மொழிக்கொரு நாடும், சாதிக்கொரு நாடும் கேட்டு கொண்டிருக்கின்றார்கள்.
ஏகபட்ட தேசம் அமையும் போல, நாம் சும்மா இருந்தால் எப்படி? வாய்ப்பினை விட கூடாது.
நாம் குஷ்பூ ரசிகர்களை எல்லாம் சேர்த்து குஷ்பூ தேசம் அமைக்க கிளம்பிவிட வேண்டியதுதான்
No comments:
Post a Comment