Wednesday, September 27, 2017

பணமதிப்பு இழப்பு

பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டியால் தான் இந்திய பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது : யஷ்வந்த் சின்கா
சொல்லியிருப்பவர் யார்? பாஜகவின் மூத்த தலைவர்.
ஒரு பக்கம் புதிய "இந்தியா பிறந்திருக்கின்றது" என மோடி சொல்ல, இன்னொரு பக்கம் இவரோ, நன்றாக‌ இருந்த "இந்தியா செத்து கொண்டிருக்கின்றது" என சொல்லிகொண்டிருக்கின்றார்.
பாஜகவின் மூத்த தலைவரே தங்கள் ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதை ஒப்புகொள்கின்றார்.
எல்லா அரசும் தேர்தல் நெருங்கும்
நேரத்தில், "இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்" என கேட்பார்கள்,
யஷ்வந்த் சின்ஹாவோ "இது எங்கள் வேதனை, இனி எங்களுக்கு வாக்கு அளிக்காதீர்கள்.." என்பதனை சொல்லிகொண்டிருக்கின்றார், நல்ல மனிதர்.

No comments:

Post a Comment