Monday, September 11, 2017

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 03










Image may contain: 1 person








டூலான் நகரை மீட்க செல்லும் முன் மிக அழகான திட்டம் தயாரித்திருந்தான் நெப்போலியன்


அதவாது அந்த ஆங்கிலபடை, ஸ்பானிஷ் படை வந்திருப்பது பிரான்சினை ஆக்கிரமிக்க, குழப்பமான இந்த காலகட்டத்தில் அவர்கள் நாட்டை பிடிக்க வருகின்றார்கள். அவர்களை ஓட அடிக்காவிட்டால் அது ஆபத்து. அதே நேரம் சண்டை நடக்கும் பொழுது அவர்கள் உட்புகுந்துவிடவும் கூடாது, யுத்தம் திசைமாறும்


கிட்டதட்ட இலங்கை திரிகோணமலை துறைமுகம் போன்ற அமைப்புள்ள இடம் அது. மூன்றுபக்கம் நிலம் ஒரு பக்கம் கடல் என்ற அமைப்பு.


புரட்சிபடைகளிடம் பேசியிருந்த நெப்போலியன் அவர்களை இரு பக்கம் நிற்க செய்தான் , அதாவது அவர்கள் தரையிறங்கினால் இவர்கள் தாக்க வேண்டும், அவர்கள் நுழைய முற்படாதவரை புரட்சி படை தாக்காது


ஒரு பக்கம் நெப்போலியன் தாக்குவான் என்பது திட்டம்


(அவனுக்கு கொடுக்கபட்ட மிக குறைவான படையில் அவனுக்கு வேறு எதுவும் சாத்தியமில்லை. நெப்போலியன் காலத்தில் துப்பாக்கியும், பீரங்கியும் பிராதனம்


துப்பாக்கி என்றால் நம்ம ஊர் ஏட்டையா தூக்கிவருவார் அல்லவா, அப்படி ரகம். அன்று அதுதான் அதி நவீனம்..)


இந்த ஏற்பாட்டில் களமிறங்கினான், அந்த நுழைவாயில் பக்கம் ஒரு குன்று இருப்பதையும் கவனித்தான்


பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே, ஆமென் என சொல்லிவிட்டு யுத்தம் தொடக்கினான் நெப்போலியன், அவனின் முதல் யுத்தம் அது.


போரின் போக்கு அவனுக்கு தோல்வி முகத்தை காட்டியது, சட்டென உத்தரவிட்டான் , அந்த குன்றை கைபற்றி பீரங்கிகளை அதில் நிறுத்தி சுடுங்கள்


தரையில் நாம் மோதிகொண்டிருக்க, இவன் ஏன் மலைஏறுகின்றான் என குழம்பியது பிரிட்டிஷ் படை, குன்றை கைபற்றும் முயற்சியினை அது தடுக்கவில்லை, இவன் என்ன சின்னபையன் எனும் எகத்தாளம் அது.


ஆனால் அக்குன்றில் இருந்து பிரென்ஞ் படை தாக்குதலை தொடங்கியதும் வெற்றிமுகம் நெப்போலியனுக்கு தென்பட்டது. பிரிட்டிஷ் படைகளுக்கு சுற்றி ஆப்படித்திருந்தான் அவன், எங்கும் அவைகளால் நகர முடியவில்லை, பக்கவாட்டில் தப்ப முயன்றால் புரட்சிபடை கவனித்துகொண்டது.


பிரிட்டிஷ் படை எவ்வளவோ முயன்றும் அவர்களின் வியூகத்த்தை உடைத்தான் நெப்போலியன் , வேறு வழியின்றி அவை பின் வாங்கின‌


அவை பின் வாங்கவும் ஓட அடித்தான் நெப்போலியன், கோட்டையும் துறைமுகமும் அவன் வசமாயிற்று, பிரிட்டிஷ் கப்பல்கள் அலறிஅடித்து ஓடின‌


அதுவரை அப்படி ஒரு வெற்றியினை பிரான்ஸ் பெறவில்லை, மிக குழப்பமான காலகட்டத்திலும் பிரான்ஸ் பெற்ற வெற்றி பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. பிரான்ஸ் மக்கள் அவனை கொண்டாடினர்.


(இன்றும் இந்த சம்பவம் வீடியோ கேம்களிலும், இன்னபிற விளையாட்டுக்களிலும் உண்டு, விளையாடி பார்த்தால் மிக சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்கின்றார்கள், அவன் எப்படிபட்ட வித்தகன் என்பது அதனை விளையாடினால் புரியும் படி அது அமைக்கபட்டிருக்கின்றது என்கின்றார்கள்


கேண்டி கிராஸ், புளூவெல் என அலைவதால் இம்மாதிரி ஆட்டமெல்லாம் இருப்பது பலருக்கு தெரியவில்லை)


24 வயது நெப்போலியன் அவர்களுக்கு பெரும் நம்பிக்கையாய் தென்பட்டான்.


ஒருவன் வளரும் பொழுது அவனுக்கு மேல் இருப்பவனுக்கு வயிறு எரிவது மானிட குணம். தனக்கு கீழ் இருக்கும் ஒருவனுக்கு பெயரும் புகழும் கிடைப்பதை எந்த அதிகாரியும் விரும்புவதில்லை, சில விதிவிலக்குகளை தவிர‌


நெப்போலியனின் வெற்றி ராணுவ அதிகாரிகளுக்கு கடும் பொறாமையினையும் எரிச்சலையும் ஏற்படுத்தியது. எப்படியாவது அவனை முடக்கவேண்டும் என திட்டமிட்டனர்


எப்படி வென்றான்? இந்த குன்றை பிடித்தா? அட அது இத்தனை நாளும் இங்குதானே இருந்தது, நமக்கு ஏன் இந்த திட்டம் தோன்றவே இல்லை என அவர்களே மனதிற்குள் அழுதுகொண்டிருந்தார்கள்.


உண்மை அதுதான் அக்குன்றின் மேல் நின்றால் யுத்தம் முடிப்பது வெகு எளிது, யாருக்கும் தோன்றா சிந்தனை அவனுக்கு தோன்றிற்று. அவன் யுத்தம் என்பது பூகோள தொடர்புடையது, கொஞ்சம் அறிவியில் தொடர்புடையது வெறும் ஆயுதம் மட்டுமல்ல என நம்பியவன் மிக கணக்காக திட்டமிட்டான், வென்றான்


எப்படியாவது நெப்போலியனை முடக்கி தங்கள் காலுக்கு கீழே வைக்கவேண்டும் என எண்ணியவர்களுக்கு அந்த தகவல் கிடைத்தது.


அதாவது புரட்சிபடைகளின் ஒத்துழைப்புடனேதான் அவன் வென்றான் எனும் தகவல் அது , துள்ளி எழுந்தார்கள்


"நீ நாட்டில் குழப்பம் விளைவிக்கும் புரட்சிபடையோடு இணைந்தா பிரிட்டிசாரை விரட்டினாய்? இது தேசதுரோகம்" என பொங்கினார்கள்


"இது பிரான்ஸ், புரட்சிபடையினரும் பிரான்ஸின் நலனுக்கே போராடுபவர்கள். அவர்கள் வகைவேறு ஆனால் நோக்கம் ஒன்று , நானும் பிரான்ஸை மனமார நேசிப்பவன், பொது எதிரியான பிரிட்டிசாரை விரட்ட, பிரான்ஸ் குடிமக்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு?" என வாதிட்டான் நெப்போலியன்.


அவனை முடக்குவது என முடிவெடுத்துவிட்டு அல்லவா விசாரிக்கின்றார்கள், பின் அவன் என்ன நியாயம் சொல்லி எடுபடும்


நீ புரட்சியாளரோடு தொடர்பு வைத்ததற்காக உன்னை சிறையில் அடைக்கின்றோம் என அவனை சிறையிட்டார்கள்


கொஞ்சம் புத்தகங்களோடு சிறைபுகுந்தான் நெப்போலியன், அவன் மனமெல்லாம் கேள்விகள், குழப்பங்கள், தாங்கணா துயரம், பெரும் மனஸ்தாபம்


நான் என்ன செய்தேன்? யாராலும் மீட்கமுடியாத அந்த டுலான் நகரை பிரான்ஸுக்காக மீட்டேன், அதற்கு பிரான்ஸ் மக்களை சேர்த்துகொண்டேன், இது ஏன் இவர்களுக்கு பொறுக்கவில்லை, இதுவா புரட்சி? இதற்கு மன்னரே பரவாயில்லையே என நொந்தான்


ஆனால் உணர்ச்சிகளை வெளிகாட்டி கொள்ளாமல் வாசிப்பிலே இருந்தான், ஆழ்ந்த வாசிப்பு


10ம் நாள் அவன் சிறையில் இருந்தபொழுது, வெண்டி எனும் நகர் பக்கம் பெரும் கலவரம் வெடித்தது, கட்டுகடங்காமல் சென்று கொண்டிருந்தது நிலை


நெப்போலியன் வந்தால் எளிதில் அடக்கிவிடுவான் என கிசுகிசுத்து கொண்டிருந்தார்கள் காவலர்கள்


அதிகாரிகளும் அதனைய யோசித்தனர், அவனை அனுப்ப வேண்டிய நிலை, ஆனால் அதே நெப்போலியனாக அனுப்பகூடாது அவனுக்கு கெத்து வந்திவிடும்


நாமெல்லாம் 50 வயதிலும் செய்ய முடியாத சாதனையினை 24 வயதில் செய்துவிட்டவன் அவன், அவனை எச்சரிக்கையாக கையாளாவிட்டால் நம்மை துப்பாக்கி பிடித்து வாயில் காவலனாக நிறுத்திவிடுவான்


என்ன செய்யலாம்?


ம்ம் கடந்த முறை அவனை பெரும் படைக்கு தலைவனாக அனுப்பியதுதான் பிரச்சினை, இனி அவனை சாதாரண தலைவனாக அனுப்பலாம். களம் கண்டுவிட்டால் அவன் உள்ளே ஒரு சக்தி புகுந்துவிடும், அவன் உத்தரவுகளுக்கு நாம் கூட பணியலாம் ஆனால் வெற்றி என்பது நாம் ஈட்டியதாகவே இருக்கும்


ஆம் , அதுதான் முடிவு அவன் பதவியினை பறித்து, தரமிறக்கம் செய்து அனுப்பலாம் என முடிவெடுத்தார்கள்


நெப்போலியனுக்கு செய்தி சென்றது.


எவ்வளவு பெரும் காரியத்தை செய்தவன் நான், என்னை தரமிறக்கம் செய்தார்களா? பிரான்சுக்காக நான் செய்த மகத்தான காரியத்திற்கு இதுதான் பரிசா?


முடியாது, செல்லமாட்டேன் நீங்களே கலவரத்தை அடக்குங்கள், மீறினால் சிறை என்றால் சிக்கல் இல்லை, நான் ஏற்கனவே அங்குதான் இருக்கின்றேன் என சொல்லிவிட்டான்


குழம்பி நின்றனர் அதிகாரிகள்


வாமணன் வருவான்...




 

No comments:

Post a Comment