Wednesday, September 27, 2017

வுளை திட்டினதால் தான் மூத்திரப்பை

பெரியாரும் கலைஞரும் கடவுளை திட்டினதால் தான் மூத்திரப்பையோட இருக்கிறார்கள் , அண்ணாவிற்கு புற்றுநோய் வந்தது என பல ஆன்மீகவாதிகள் வாய்வலிக்க சொல்லி திருப்தியடைகின்றார்கள்
ஆன்மீகம் பேசிய ரமணருக்கு கூடத்தான் புற்றுநோய் வந்தது, இன்னும் ஏராளமான சந்நியாசிகள் இளவயது நோயிலே இறந்தார்கள்.
விவேகானந்தர் சாகும்பொழுது என்ன வயது? அவர் ஆத்தீகம் பேசி செத்தாரா?
சங்கரரும், திருஞான சம்பந்தரும் கூடத்தான் சிறுவயதிலே மரித்தார்கள்.
முத்துராமலிங்க தேவரை விட பெரும் முருக பக்தனை காட்டிவிட முடியுமா? அவர் என்ன நூறாண்டு வாழ்ந்தாரா?
ஒவ்வொருவனும் ஒரு நோக்கத்திற்காக இறைவனால் படைக்கபடுகின்றான், அந்த நோக்கம் நிறைவேறியதும் அவன் வாழ்வு முடிகின்றது.
அந்த தத்துவத்தில்தான் உலகம் இயங்கி கொண்டிருக்கின்றது
இதில் ஆன்மீகம் பேசியதால் வாழ்ந்தான் என்றோ, நாத்திகம் பேசியதால் செத்தான் என்றோ சொல்வதற்கொன்றுமில்லை
விருப்பு, வெறுப்புக்களை கடந்தவர் கடவுள், அவரை புரிந்துகொள்ள மிகசிறிய மானிட மூளைக்கு ஒருநாளும் சக்தி வராது.

No comments:

Post a Comment