Monday, September 18, 2017

கரியப்பா , மானெக்‌ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்




Image may contain: 2 people, people smiling, people standingமார்ஷ்ல் அர்ஜன் சிங், இந்த தேசத்திற்கு ஆற்றிய சேவை மகத்தானது.


1962ல் சீனாவிடம் இருந்து பின்வாங்கிய நிலையில், இந்தியா பலவீனபட்டுவிட்டதாக கருதிய பாகிஸ்தான் அமெரிக்க கருவிகள் துணையோடு 1965ல் நம்மீது படையெடுத்தது.


ஆனால் அமெரிக்காவே அலறும் வண்ணம் பாகிஸ்தானை பின்னி எடுத்து விரட்டியது இந்தியா, அந்தபோர் தொடர்ந்திருக்குமானால் முழு காஷ்மீரை அன்றே மீட்டிருப்போம். லால்பகதூர் சாஸ்திரியும் அத்திட்டத்தில்தான் இருந்தார்





ஆனால் தாஷ்கண்ட் அமைதிபேச்சில் அவர் முழு காஷ்மீரையும் கைபற்றும்வரை யுத்தம் நிற்காது என சொல்லிவிட்டு வெளியேறிய பின்புதான் இறந்தார், நிச்சயம் அவர் சாவு மர்மமானது.

அந்த 1965 போரில் இந்தியா வெற்றிமுகத்தில் நிற்க இந்திய விமானபடையும் அதன் தளபதியாக இருந்த அர்ஜன் சிங்கும் மகா முக்கிய காரணம்

உலகம் முழுக்க அவருக்கு ஒரு பிரம்மிப்பு இருந்தது, பாகிஸ்தானுக்கு அவர் என்றுமே வேப்பங்காயாக கசந்துகொண்டே இருந்தார்.

மிக் வகை விமானம் முதல் சுகோய் வரை கொண்டுவந்து இந்திய விமானபடையினை வலுவானதாக்கியதில் அர்ஜன் சிங்கிற்கு மகத்தான பங்கு உண்டு.

கரியப்பா , மானெக்ஷா வரிசையில் மறக்க முடியாதவர் அர்ஜன் சிங்.

அந்த தேசபக்தி மிக்க‌ சிங்கத்திற்கு வீர வணக்கம்

வந்தே மாதரம். ஜெய் ஹிந்த்.













 

No comments:

Post a Comment