Thursday, September 21, 2017

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு

இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள்.


கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள்.


அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள்.




ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள்.


ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து வருகின்றார்கள்?


அது அதிமுகவோ, திமுகவோ இரண்டும் அப்படித்தான்.


சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இதோ இந்த இந்த சுயநல வழக்கிற்கு அள்ளி செலவழிப்பவர்கள், நீட் காவேரி உட்பட தமிழக‌ பொதுநல வழக்கில் ஒரு பைசா செலவழிப்பதில்லை.


ஏன் நீட் தேர்வில் அனிதாவிற்காக இந்த கபில் சிபலை திமுக வைத்து வாதாட கூடாதா? பால் நரிமனை அமர்த்தியிருக்க முடியாதா?


அனிதா செத்தவுடன் அள்ளி கொடுப்பவர்கள், அவள் தரப்பு நியாயத்தை வைக்க நல்ல வழக்கறிஞரை அமர்த்தினார்களா என்றால் இல்லை, ஏன் என்றால் அப்படித்தான்


ஆனால் அனிதா செத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்ததும் இவர்களே..


இதோ காவேரி வழக்கு நடக்கின்றது, யாரோ ஒரு வண்டு முருகன் உளறிகொண்டிருக்கின்றார்.


ஆனால் கபில் சிபல் திமுக சார்பாக உள்ளூர் பிரச்சினைக்கு சென்னையில் ஆஜராகின்றார்.


இதனை சொன்னால் நீ பக்தாள், நீ ஆரிய அடிவருடி, நீ திராவிட எதிரி, தமிழின துரோகி என பல பட்டம் சூட்ட பொங்கிகொண்டு வருவார்கள்.



No comments:

Post a Comment