Tuesday, September 12, 2017

அனிதா பற்றி வரும் செய்திகளில் பல நெருடல்கள்

அனிதா பற்றி வரும் செய்திகள் பல நெருடல்களை ஏற்படுத்துகின்றன‌


அவர் அண்ணனே சொல்கின்றார், "பொறியியல் கலந்தாய்வு சென்றோம், கால்நடை மருத்துவ கலந்தாய்வு சென்றோம் அதெல்லாம் சென்றுவிட்டுத்தான் திமுக பிரமுகர் உதவியுடன் உச்சநீதி மன்றம் சென்றோம்" என்கின்றார்.


டெல்லி சென்ற விமான செலவு, வழக்கு செலவு பற்றியெல்லாம் அவர் ஒன்றும் சொல்லவில்லை


ஆக மருத்துவம் அனிதாவின் ஒரே கனவு என்பது அடிபட்டு போகின்றது, மருத்துவம் தவிர வேறு படிக்கவும் அனிதாவிற்கு விருப்பம் இருந்திருக்கின்றது என்பது தெரிகின்றது, உச்ச நீதிமன்றம் தீர்பு விவகாரமாக இருந்தால் அடுத்து இன்ன படிக்கவேண்டும் என்ற மாற்றுதிட்டமும் இருந்திருக்கின்றது.


அவ்வளவு முன் தயாரிப்பில் இருந்த பெண் திடீரென செத்ததுதான் சோகம்.


இதில் தமிழக அரசின் உதவி தொகையினை மறுத்த அனிதா குடும்பம் திமுக உட்பட எல்லா உதவிகளையும் ஏற்றதும், நடிகர்களின் நிதியினை ஏற்றதும் அடுத்த மர்மம்


ஒரு சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன.


மாதம் ஒரு தமிழக ராணுவ வீரன் எல்லையில் சாகின்றான், அவ்வப்போது விவசாயி சாகின்றான், ஏதோ புஷ்பாகாரம் நிகழ்ச்சிக்கு எங்கோ கோவில் குளத்தை அவசரமாக நிரப்புகின்றார்களாம், காரணம் சங்கராச்சாரி போன்றவர்கள் வருவார்களாம்


ஆனால் விவசாயி குளத்தை பற்றி யாருக்கும் அக்கறையில்லை


நேற்று கூட தமிழக வீரன் செத்திருக்கின்றான், யாராவது ஒரு கட்சியினர் / அல்லது நடிகன் சந்தித்து 10 பைசா நிதி கொடுத்திருப்பார்கள்??

No comments:

Post a Comment