Wednesday, September 27, 2017

வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம்

"நாட்டுமக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, வெளிநாடுகளில் ஒவ்வொருவருக்கும் ரூ.15லட்சம் போடும் அளவிற்கு கறுப்பு பணம் பதுக்கப்பட்டுள்ளது அதனை மீட்டு வருவோம் என்றே பிரதமர் மோடி கூறினார்" : தமிழிசை
அப்படியே இருக்கட்டும் அக்கா, அந்த மொத்த கருப்பு பணத்தையும் மீட்டாரா இல்லையா?
மக்கள் அவர் சொன்னதை நம்பி வாக்களித்தார்கள்? அவர் செய்திருக்க வேண்டுமா இல்லையா? இவ்வளவிற்கு அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துகொண்டே இருக்கின்றார், பணம் தான் வரவில்லை.
வெளிநாட்டு பணத்தை மீட்பேன் என சொல்லிவிட்டு, உள்நாட்டில் கலர் கலராக, தினுசு தினுசாக நோட்டடித்து விளையாடி கொண்டிருந்தால் எப்படி?
அம்மணி நீங்கள் ஒரு மருத்துவர், உங்களிடம் நோயாளி வந்தால் உயிர் காப்பது உங்கள் கடமை, ஆனால் உடலில் ஊசி குத்தாமல் கலர் கலராக கோலம் போட்டு விளையாடினால் நோயாளியின் சொந்த பந்தங்கள் சும்மா விடுமா?

No comments:

Post a Comment