Tuesday, September 12, 2017

அதிமுக அதிகார மோதல்....

பன்னீரும் பழனிச்சாமியும் ராமலட்சுமணர்களாக இருக்க வேண்டும் : அதிமுகவினர் வாழ்த்து


பாஜகவிற்கு அடிமையான பின் இப்படித்தான் புத்தி போகும், போகட்டும்


ஆக தசரதன் யார்? கைகேயி யார்? கூனி யார்? என்று சொல்லாமல் சொல்கின்றார்கள்






பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது ரத்து: அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்


என்னது சசிகலா நியமணம் ரத்தா?


இனி தினகரன் கோஷ்டி சும்மா இருக்குமா?, நாஞ்சித் சம்பத் எல்லாம் இனி அந்த ஷெரில் மாதிரி ஆடுவார் பாருங்கள்




"சின்னம்மா ஜிமிக்கி கம்மல்
பழனிச்சாமி சுட்டுட்டு போயி..."







முதல்வரை மாற்ற முடியாவிட்டால் ஆட்சியையே கிள்ளி எறிவோம்:தினகரன்


எந்த முதல்வர் வந்தாலும் இதுதான் நிலை, ஆட்சியினை கிள்ளி எறியுங்கள், அப்படியே உங்களோடு சேர்த்து அந்த கட்சியினையே சேர்த்து கிள்ளி எறிய தமிழகமும் தயாராகத்தான் இருக்கின்றது






சி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்


அதாவது எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலையினை செப்பனிட சொல்லி அகற்றினார்களாம், இன்னும் நிறுவவில்லையாம் இதனால் திருமாவளவனுக்கு பெரும் வருத்தமாம்


அங்கிள் சைமன் பா.ரஞ்சித்தை மண் அள்ளிபோட்டு திட்டிகொண்டிருப்பதால் நாம் தமிழர் பெயர் தந்த ஆதித்தனார் பக்கம் இன்னும் வரவில்லை




ஆதித்தனார் சிலை விவகாரம் வந்துவிட்டதால் இனி நாடார் சங்கங்களுக்கு வேலை ரெடி..ரெடி ..ரெடி








No comments:

Post a Comment