Thursday, September 21, 2017

வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4



Image may contain: 1 personசிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை


தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும்


என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது.


அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும் முடியவில்லை, மொத்த ஐரோப்பா சேர்ந்தாலும் நடக்கவில்லை


அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள், அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி


அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன, அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு அனுப்பினார்கள், ஏதோ கிளர்க் வேலை போல பார்த்துகொண்டிருந்தான்


அது ஒப்புக்கு சப்பான வேலை, அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான்


உண்மையில் அவன் மிக மிக ரசனைக்காரன், நிறைய வாசித்ததால் அவனுக்கு எழுத்து கலையும் அட்டகாசமாக வந்தது. ஊரில் வேறு ஒரு பெண்ணை ஒருதலையாக சுற்றிகொண்டிருந்தான். அதனை பின்புலமாக கொண்டு காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிமுடித்தான்.


ஒரு போர்வீரனுக்கும் அவன் காதலிக்கும் நடக்கும் காதல் கதை அது, ஆச்சரியமாக அது பின்னாளில் அவனுக்கே நடந்தது


தன் வாழ்வின் பின்னாளைய சம்பவத்தை அன்றே கனவாக கொண்டிருந்தான் போலும்.


துருக்கியின் கான்ஸ்டாண்டி நோபிளில் அவன் பணி செவ்வனே முடிந்து பாரீஸ் திரும்பினான்.


ஆனால் அந்த அதிகாரிகளின் கோபம் அப்படியே இருந்தது, வெண்டி செல்ல மறுத்த காரணத்தால் அவனை சஸ்பெண்ட் செய்தார்கள்.


வேலை போன விரக்க்திக்கு உள்ளானான், அவன் மனநெருக்கடி அதிகரித்தது.


பிரான்ஸுக்காய் யுத்தம் நடத்தினேன், பிரென்ஞ் மக்களை கூட்டு சேர்த்தேன் அதற்கு ஏன் என்னை குறிவைத்து அடிக்க்கின்றார்கள் என நொந்துகொண்டான்.


பிரான்சில் கலவரங்கள் அதிகரிக்க தொடங்கின, பாரீஸ் வரை வன்முறை பரவிற்று. அடக்க முடியாமல் அதிகார வர்க்கம் தவித்தது.


அந்த அதிகாரிகளில் பால் பேரஸ் என்றொருவர் இருந்தார், நெப்போலியனின் தீரமிகு யுத்தத்தை நேரில் பார்த்தவர், அவன் அனாசயமாக கலவரங்களை கட்டுபடுத்துவதை கண்ணார கண்டவர்.


அவர் தன் அதிகாரிகளுக்கு யோசனை சொன்னார், பாரீஸ் எரிந்துகொண்டிருக்கின்றது, ஈகோ பார்க்க நேரமில்லை. நெப்போலியனால் இக்கலவரங்களை எளிதில் அடக்க முடியும், அவனால் முடியாவிட்டால் எவனாலும் முடியாது.


அதிகாரிகளும் யோசித்தனர், நெப்போலியனுக்கு அழைப்பு விடுக்கபட்டது, வந்து நின்றான்


"உன் திறமை மீது எப்பொழுதுமே எங்களுக்கு நம்பிக்கை உண்டு, ஏற்கனவே புரட்சியாளர்களுடன் சேர்ந்தாய் என்ற கருப்பு புள்ளியில்தான் உன் தகுதி குறைந்தது.


இதோ உனக்கான வாய்ப்பு, அந்த புரட்சியாளர்களே பாரீஸ் தெருக்களில் அட்டகாசம் செய்கின்றார்கள், இவர்களை அடக்க உன்னை அனுப்புகின்றோம், அடக்கினால் நீ குற்றமற்றவன் என்பதை ஒப்புகொள்கின்றோம்"


நிமிர்ந்து பார்த்தான் நெப்போலியன், என் பதவியில் என்னை அமர்த்தினால் செல்வேன் என்றான்


அது என்ன பதவி? அதனை விட பெரும் பதவியாக இந்த கலவர தடுப்பு படைக்கு உன்னை தளபதியாக நியமிக்கின்றோம் என்றார்கள்.


கிளம்பினான் நெப்போலியன், படைகளை தயார் செய்தான். தன் குதிரையில் தாவி ஏறினான்


பாரீஸ் தெருக்களை படிபடியாக கைபற்றினான், அவன் பக்கமும் இழப்பு இருந்தது ஆனால் அசரவில்லை


நெப்போலியன் வந்தபின் அரசபடைகளின் கை ஓங்கியது. அட்டகாசமாக முன்னேறினான். அவனது வியூகத்தில் எதிரிபடை திணறியது.


அந்த யுத்தத்தை 2 நாட்களில் முடித்து கலவரத்தை அடக்கினான். வெற்றி வீரனானான்


பெரும் ரத்த ஆறுடன் பிரான்சின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தவன் அவனே. அந்த பெருமிததத்துடன் அரசு இயக்கும் டைரக்டர் குழு முன் நின்றான்


அக்குழு அவனை பிரென்ஞ் படையின் தளபதியாக உயர்த்தியது. 24 வயதில் பிரெஞ்ச் தளபதியாக அவன் பொறுப்பேற்றபொழுது பிரான்சே அவனை வித்தியாசமாக நோக்கியது, இந்த சிறுவயதில் எப்படி அவனால் முடிந்தது?


பதவிக்கு வந்ததும் யார் தனக்கு உதவினார்கள் என விசாரித்தான், பால் பேரசின் பெயர் அடிபட்டது.


ஆனால் பால் பேரஸ் யுத்ததில் கொல்லபட்டிருந்தார், எனினும் அவர் வீட்டை பார்க்க கிளம்பினான்


அந்த வீட்டில்தான் நெப்போலியனின் எதிர்காலம் இருக்கின்றது, அவன் வாழ்வு அங்குதான் மறுஜென்மம் எடுக்க போகின்றது என்பது அவனுக்கு தெரியாது.


வீட்டிற்கு சென்ற நெப்போலியன் அந்த பால் பேரஸ் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்த்தான்


இரு குழந்தைகளோடு அவள் நின்றுகொண்டிருந்தாள்.


அவள் தான் ஜோசபைன். பால் பேரஸின் மனைவி.


அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே உறைந்து போய் நின்றான் நெப்போலியன். அந்த பெரு வீரனின் மனம் அவளை கண்டதும் காதலில் விழுந்தது.


அவள் ஒன்றும் அப்படி பிரமாதமான அழகி அல்ல, ஆப்ரிக்க வம்ச கலப்பு, பல்வரிசை வேறு கோணல். அழகு என்றெல்லாம் சொல்லமுடியாது.


குஷ்பூ வீட்டு வாசல் திருஷ்டி பொம்மைக்கு கூட அவளை வைக்க முடியாது, ஆனால் குஷ்பூ இல்லா அக்காலத்தில் அவளே நெப்போலியனுக்கு அழகியாக தெரிந்தாள்


இந்த யழவு காதல் அப்படித்தான், அவரவர் கண்ணிற்கு அவரவர் அழகு. அது முன் ஜென்ம தொடர்போ, ஜாதக அம்சமோ, மன்மத பாணமோ எதுவொ ஒன்று.


அழகில்லாத ஒருவர் இன்னொருவர் கண்ணுக்கு பெரும் அழகியாக தெரிவதெல்லாம் விதிப்பயன்.


ஜோசப்பின் பூர்வீகம் ஆப்ரிக்கா, அவளின் பாட்டி மாந்தீரிகம் மற்றும் ஜாதகத்தில் பி.எச்டி முடித்த நிபுணர்


ஜோசபினுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார், நீ ஒரு நாளில் நாட்டிற்கே மகா ராணியாவாவாய். நிச்சயம் நடக்கும்


ஆனால் ஒரு ராணுவ அதிகாரி மனைவியாய் வாழ்ந்தவள் ஜோசபின், இனி அவரும் இல்லை. விதவை வாழ்வு


இனி அந்த ஜாதகம் எல்லாம் பலிக்குமா? எல்லாம் சும்மா. 4 வீடுகளில் பாத்திரம் தேய்த்து இந்த பிள்ளைகளை வளர்க்க வேண்டியதுதான் என நினைத்துகொண்டு நெப்போலியன் முன்னால் நின்றாள்.


விதி தள்ளி இருந்து புன்னகைத்தது, அது ஜாதக பிரகாரம் வழி போட்டு கொடுத்தது


கண்களால் பேசினான் நெப்போலியன், அவனின் குறிப்பறிந்தாள் ஜோசப்பின்


வீடு திரும்பிய நெப்போலியன் செய்த முதல் காரியம் தனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை வேண்டாம் என சொன்னது


அவன் நினைவெல்லாம் ஜோசபின் நிறைந்திருந்தாள், அவனுக்கு வயது24 அவளுக்கு வயது ஏறகுறைய 30.


காதலுக்கு ஜாதி, மதம், இனம் மட்டுமல்ல, வயதுமில்லை என சொல்லிகொண்டிருந்தான் நெப்போலியன்.


அவன் ஏகபத்தினி விரதன் எல்லாம் அல்ல, தீராத விளையாட்டு பிள்ளை அதில் சந்தேகமே இல்லை. அவன் குதிரையில் யுத்தகாலம் தவிர பெண்கள் அமர்ந்தே இருந்தார்கள்.


ஆனால் ஜோசபினை பார்த்த மாத்திரத்தில் கட்டுண்டு கிடந்தான்.


கடிதங்கள் எனும் பெயரில் அழியா காவியங்களை அவன் அவளுக்கு எழுத தொடங்கினான். ஒவ்வொரு கடிதமும் ஒரு ரோஜாவுடன் அவள் வீட்டுக்கு வர தொடங்கியது.


வாமணன் வருவான் ...













 

No comments:

Post a Comment