லைக்கா தயாரிக்கும் படத்தினை இயக்க போகின்றார் சீமான்
லைக்கா நிறுவணம் ராஜபக்சேயுடன் நெருக்கமானது என முன்பு பல தகவல்களும் , சர்ச்சைகளும் வந்தது நினைவிருக்கலாம்.
லைக்கா சுபாஷ்கரனுக்கும் ராஜபக்சேக்கும் வியாபாரம் இருக்கலாம், ஆனால் சுபாஷ்கரன் ஒரு தமிழ்பிள்ளை என்பதற்காக அங்கிள் சைமன் இயக்க போகின்றார். எளிய பிள்ளைகளின் போராட்டம் இப்படித்தான் இருக்கும்.
சோனியா களத்தில் இல்லை, கலைஞரும் அமைதி அந்த நாசமாய் போன ராஜபக்சேவும் பதவியில் இல்லை. பின் அங்கிள் என்னத்தான் செய்யமுடியும்? யாரை திட்ட முடியும்?
ஆக தமிழகத்தில் நடந்துகொண்டிருந்த மாபெரும் புரட்சிக்கு சினிமா படபிடிப்பிற்காக கொஞ்சகாலம் விடுமுறை விடபட்டிருக்கின்றது.
ஆயிரம் பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் கத்திகொண்டிருந்த சீமான், இனி ஆயிரத்தி ஒன்றாவது பிரச்சினையாக ஆக்சன், கட் என கத்தபோகின்றார்.
சும்மாவே அந்த கத்து கத்தும் சீமான், நடிகரை எப்படியெல்லாம் கத்த வைப்பார்.
எதற்கும் அந்த நடிகர் தன் தொண்டையினை சில கோடிகளுக்கு இன்சூர் செய்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment