Tuesday, February 28, 2017

செய்திகள் அங்கும் இங்கும்...

தனுஷுடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி சுசித்திரா கணவனை பிரிகின்றார்


ஏற்கெனவே அமலாபால், விஜய் ஜோடி பிரிவிற்கு தனுஷ் தான் காரணம் என்று கூறப்பட்டது. தற்போது சுசித்ராவின் வாழ்க்கையில் தனுஷ் விளையாடியதால் தான் இப்படியொரு விவாகரத்து சம்பவம் நடக்கப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சிம்புவினை மிக மிக நல்லவராக்க தனுஷ் ஒருவரே போதும் போலிருக்கின்றது





சிம்பு பலபேரினை விட்டு பிரிந்தாரே அன்றி, அவர் யாரையும் பிரித்ததாக செய்தி இல்லை





இந்திய அணியினை எப்படி வீழ்த்தினோம் என ஆஸ்திரேலிய கேப்டன் சொல்லி கொண்டிருக்கின்றார்


அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை


எனக்கென்னமோ ஆஸ்திரேலியர்கள் கையில் இந்திய வீரர்கள் "சொப்பன சுந்தரி"யுடன் இருந்த படம் சிக்கியிருக்கலாம் என தோன்றுகின்றது





அப்படிபட்ட ஆட்டத்தைத்தான் இந்திய அணி ஆடியது.





திருவாரூரை சேர்ந்த ஸ்ரீமகரிஷி என்ற சாமியாரிடம் ஜெயா ஆவி பேசி பரபரப்பு தகவல்களை சொன்னதாம், பன்னீர் செல்வத்தை சந்திக்க அந்த சாமியார் வந்திருக்கின்றாராம்


அடிக்கடி ஆவிகள் பேசுகின்றன, மாநிலம் சுடுகாடாக மாறிவிட்டது என்பதை இனி நம்பத்தான் வேண்டும் போலிருக்கின்றது


இனி எல்லா ஆவிகளும் பேசும்,




அது என்னவோ ஜெயா ஆவி பன்னீரிடமும், சாமியாரிடம் மட்டும் பேசுகின்றது


நம்மிடம் ஒரு ஆவியும் பேசுவதில்லை, இந்த சில்க் ஸ்மிதா ஆவியாவது வந்து பேசுமா என எதிர்பார்த்திருக்கின்றேன்..








இன்று கிறிஸ்தவர்களின் சாம்பல் புதன்

https://youtu.be/m3L3c23MfC0


அதாகபட்டது கிறிஸ்து இயேசு சிலுவலையில் அறையபட்ட வெள்ளிக்கு முன்பாக 40 நாள் விரதம் இருப்பது கிறிஸ்தவ சம்பிரதாயம், ஏன் என்றால் கிறிஸ்து நம் பாவங்களுக்காக இறந்தார், அதனால் இந்த 40 நாளாவது நமது பாவங்களை நினைத்து மன்னிப்பு கேட்டுவிடலாம், என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மரபு


அடுத்தால் செய்யபோகும் பாவத்திற்கு அடுத்த வருடம் 40 நாட்கள்


மற்ற கிறிஸ்தவர்களில் சிலர் அனுசரிப்பார்கள், சிலர் பைபிளை படித்து, கரைத்து, உலுக்கி , கொட்டி பார்த்துவிட்டு பைபிளில் இதெல்லாம் இல்லை என சொல்லிவிட்டு சென்றுவிடுவார்கள்


சரி இதற்கு ஏன் சாம்பல் பூசி தொடங்கவேண்டும்?


அக்காலத்தில் ஒருவனுக்கு தன் பாவம் பற்றி நினைவுக்கு வந்து, அட நாமும் மண்ணாய், சாம்பலாய் அழிய போகின்றவர்கள் அல்லவா? பின் ஏன் இப்படி இருக்கவேண்டும்.


சாம்பலை பூசி நான் அழிய கூடியவன் என்பதனையும், என் பாவ வாழ்வு சாம்பலை போலாகிவிட்டது என்பதையும் உலகிற்கு சொல்வது ஆசிய சம்பிரதாயம்


ஆசியா முழுக்க இது பரவியிருந்தது, அதுவும் மேற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதிகம்


யூத மதம் இந்த வழக்கத்தை எடுத்துகொண்டது, அதில் பலர் சாம்பல் பூசி மனம் திரும்பியதை பார்க்கமுடியும். யூத நூல் என்றால் கிறிஸ்தவர்களின் பழைய ஏற்பாடு, அதில் ஏராள சம்பவம் உண்டு


கிறிஸ்தவம் யூத தொடர்ச்சி என்பதால் கிறிஸ்து சொல்லாமலே அந்த சம்பிரதாயமும் இங்கு கலந்துவிட்டது, இயேசு மனம் திரும்புங்கள் என சொன்னாரே அன்றி, சாம்பல் பூசி விரதம் இருங்கள் என சொன்னதே இல்லை


பிற்காலத்தில் கிறிஸ்தவம் யூதரில் இருந்து உதித்த காரணத்தால் அதில் இந்த சாம்பல் பூசும் சம்பிரதாயம் இடம்பெற்றுவிட்டது


Image may contain: one or more people and close-up


கத்தோலிக்க ஆலயங்களில் இன்று எல்லா கிறிஸ்தவர் நெற்றியிலும் "மண்ணால் உண்டாக்கபட்ட நீ மண்ணிற்கே திரும்புவாய்" என சொல்லி சாம்பல் பூசுவார்கள்


சிலருக்கு "மண்ணாய் போ" என திருவாக்கு அருளும் பாதிரியும் உண்டு.


மண்ணாய் போகும் உடலுக்கு நெற்றியில் மண் பூசினால் என்ன ஏன் சாம்பல் பூசவேண்டும் என ஒருபயலும் கேட்க மாட்டான் என்பது அவர்களின் கூடுதல் வசதி


நேற்று இரவே அக்கப்போரினை தொடங்கியாயிற்று, சாம்பலை பூசி கொண்டு அவர்கள் பாவங்களை நினைக்க தொடங்கிவிட்டார்களாம், மனம் திரும்பவேண்டுமாம், உலகம் சமீபத்தில் அழியுமாம் (2000 ஆண்டுகளாக அதனைத்தான் சொல்கின்றார்கள் என்பது வேறு விஷயம்) என ஏக அழிச்சாட்டியம்


வருடத்தில் ஒருமுறை நெற்றியில் சாம்பலை பூசிவிட்டு இவ்வளவு அட்டகாசம்


கிறிஸ்தவ போதிப்பின் படி உடல் மண்ணுக்கு போக கூடியது, அப்படி சொல்லிவிட்டு மண்ணுக்கு பதிலாய் சாம்பல் பூசுவது ஏன்?


தலை நிறைய மண்ணை அல்லவா கொட்டிவிட வேண்டும், சாம்பல் ஏன்?


அக்காலத்தில் உடலை எரித்தார்கள், இப்படி மிஞ்சுவதுதான் வாழ்வு என ஞானம் பெற்றார்கள். ஆதியில் இருந்த இந்து ஞானம் அது, இன்று வரை நிலைபெற்றிருக்கும் இந்து தத்துவம் அது.


(யூதர் உடலை புதைகவே செய்வார்கள் எனினும் இந்த சாம்பலை பூசும் தத்துவத்தை அது எடுத்துகொண்டார்கள் )


இந்த உடல் அழிய கூடியது, சாம்பலாய் போக கூடியது, இந்த நினைவு எக்காலமும் ஒரு மனிதனிடம் இருக்கவேண்டும் என்ற தத்துவத்திலே சாம்பல் பூசபடுகின்றது


அந்த தத்துவத்திலே இந்துக்கள் அனுதினமும் விபூதியினை நெற்றியில் பூசிகொள்கின்றார்கள்


எல்லா இந்து ஆலயங்களும் விபூதி கொடுக்கும் தத்துவமும் இதுவே, காலை எழுந்து குளித்து இந்துக்கள் நெற்றிநிறைய விபூதி பூசும் தத்துவமும் அதுவே


"நீறு இல்லா நெற்றி பாழ்" என சொல்லியே வைத்திருக்கின்றார்கள்


அதுவும் மூன்று கோடுகளை இட்டு, படைத்தல் காத்தல் அழித்தல் எனும் முத்தொழிலை செய்பவன் மூவொரு இறைவன் என தியானித்து அவர்கள்முன் மனிதன் வெறும் சாம்பல் எனும் இந்து தத்துவம் அவ்வளவு உயர்வானது


கிறிஸ்தவர்களுக்கோ ஒரு நாள் தான் அந்த தத்துவம் நினைவுக்கு வருகின்றது, அவர்களுக்கோ எந்நாளும் எந்நேரமும் நினைவில் இருக்கின்றது


Image may contain: one or more people


உறுதியாக சொல்லலாம் இந்த விபூதி தத்துவத்தில் இந்துக்கள் உலகிற்கே வழிகாட்டியவர்கள், காட்டிகொண்டிருப்பவர்கள். ஆதி கால அந்த ஆசிய தத்துவத்தை இன்றுவரை கடைபிடித்து வரும் மதம் அது


அனுதினமும் சாம்பலை நெற்றியில் பூசி வாரத்தின் எல்லா நாட்களையும் அனுசரிக்கும் மதத்தவர்கள் அவர்கள்


ஆக கிறிஸ்தவம் மட்டும்தான் இதனை சொல்கிறது என ஒருவன் சொல்வானானால் அவனை பரிதாபமாகவே பார்க்கமுடியும்


உலகின் பெரும் மானிட தத்துவ குறியீட்டினை இந்துக்கள் அனுதினமும் அனுசரிக்க, ஒரு நாள் மட்டும் கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் தினம் இன்று


இந்த விபூதி புதன் எவ்வளவு பெரும் விஷயம் தெரியுமா? என கடும் பிரார்த்தனை செய்து , நெற்றியில் சாம்பலை பூசும் கிறிஸ்தவர்களை நல்ல இந்துக்கள் அர்த்தமுள்ள புன்னகையுடன் கடந்து செல்வார்கள்


ஐரோப்பாவில் ஆப்ரிக்காவில் இந்த விபூதி புதனை அனுசரிப்பதில் அர்த்தம் உண்டு,


ஆன்மீக பூமியான இந்தியாவில் அதுவும் சுற்றிலும் எல்லோரும் விபூதியும் பட்டையுமாக அலையும் நாட்டில் வருடத்தில் ஒருநாள் சாம்பல் பூசிகொள்வதில் பெருமைபடவோ, அர்த்தபடவோ ஒன்றுமே இல்லை


இந்த விபூதி தத்துவத்தில் இந்து மதம் ஒரு படி அல்ல பல கிலோ மீட்டர் உயர‌ நிற்கின்றது.








 





 

ஹைட்ரோ கார்பன் திட்டம்...




ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடிக்கின்றது


தமிழகம் என்னவோ பூமியினை தோண்டாத மாநிலம் என்பது போலவும், முதன் முறையாக தோண்டபோகின்றார்கள் என்பது போல பெரும் குரல்கள்


ஆபத்தான திட்டங்களை என்றோ கொண்டுவந்தாகிவிட்டது, கல்பாக்கமும், கூடங்குளமும் ஒரு வகை உறங்கும் எரிமலைகள்.


இந்த செயற்கை எரிமலைகளால் வாழ்விழந்த மீணவர்கள் எண்ணிக்கை என்ன?


நெய்வேலி சுரங்கங்கள் பிரசித்தி பெற்றவை, அது ஒரு விவசாய கிணற்றில் இருந்தேதான் தொடங்கபட்டது என்பதும் வரலாறு, சுற்றுபக்கம் அத்தனை விவசாய நிலங்களையும் அது வளைத்தது, ஆனால் இன்றுவரை இயங்கிகொண்டுதான் இருக்கின்றது.


மீத்தேன் திட்டத்தால் நிலத்தடி நீர் பாதிக்கும் என சொல்லிகொள்கின்றார்கள், ஏற்கனவே கல்குவாரிகள் எனும் பெயரில், கிரானைட் குவாரிகள் எனும் பெயரில் எத்தனை பெரும் பள்ளங்களை உருவாக்கி, அதில் சுற்றுபுற நிலத்தடி நீர் பாதிக்கபட்டிருக்கின்றது என்பது தமிழகத்தின் பல இடங்களில் தெரிகின்றது


1000 கிணறுகளுக்கான நீரை ஒரு கல்குவாரியின் அதள பாதாள பள்ளம் உறிஞ்சி கொண்டு வீணாக்குகின்றது


அதே டெல்டா பகுதியில் நரிமணம் உட்பட்ட பகுதிகளில் நெடுங்காலமாக எரிவாயு உற்பத்தி செய்யபட்டுகொண்டுதான் இருக்கின்றது


அதே டெல்டாவின் பெரும் பகுதிகளில் இந்த உற்பத்தி நடந்துகொண்டுதான் இருக்கின்றது


ஆக இவை புதிதல்ல‌


ஆனால் புதிதாக அனுமதிக்கபட்டிருக்கும் இடங்கள் மக்களின் வாழ்வாதாரமாக இருந்தால், அவர்களுக்கு சோறுபோடும் இடமாக இருந்தால் அதனை தவிர்க்கலாம்


மத்திய அமைச்சரும், இன்னும் பொறுப்பானவர்களும் அதனைத்தான் சொல்கின்றார்கள்,


டெல்டா பகுதி காக்கபடவேண்டும் சரி, ஆனால் கல்குவாரிகளால், தேரிகாட்டு மணல் குவாரிகளால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா?


அவற்றினால் வாழ்வாதாரம் கெட்டவர்கள், நிலத்தடி நீரினை குடிநீர் கம்பெனிகளும், குவாரிகளும் உறிஞ்சுவதால் தெருவுக்கு வந்த விவசாயிகள் தமிழகத்தில் ஏராளம் உண்டு


அதுவும் பள்ளிகளுக்கு நீச்சல் குளத்திற்காக பெரும் போர்வெல் அமைத்து அக்கம் பக்கம் விவசாயிகளை நடுரோட்டில் நிறுத்தும் கொடுமைகளும் உண்டு


தொழிற்ச்சாலை எனும் பெயரில் ரசாயாண‌ கழிவு நீரை பூமிக்கடியில் அனுப்பி அக்கம்பக்கம் இருக்கும் விவசாயிகளை எல்லாம் அழிக்கும் கொடுமைகளும் இங்கும் உண்டு


ஆக மீத்தேன் மட்டும் விவசாயிகளை அழிப்பது போலவும், மற்ற இம்மாதிரியான திட்டங்களை கண்டுகொள்ள கூடாது என்பது எப்படி சரி?


மணல் கொள்ளை, கனிம மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, கல்குவாரி இன்னபிற தொழிற்ச்சாலை, வியாபார குடிநீர் என எத்தனை காரியங்களால் விவசாயம் அழிகின்றது?


அதனை எல்லாம் பேசாமல் மீத்தேன் மட்டும் அழித்துவிடும் என்றால் , அதனை மட்டும் தடுக்கவேண்டும் என்றால், மற்ற பகுதியில் இருப்பவர்கள் எல்லாம் ஏமாளிகளா?


இன்று நெடுவாசலில் கத்தும் அரசியல்வாதிகளில் ஒருவனாவது இதனை பேசியிருப்பான்?


டெல்டாவில் வாழ்பவன் மட்டும்தான் விவசாயி, மற்ற பகுதியில் வாழ்பவன் எல்லாம் சும்மா வெம்போக்காக நிலத்தினை பார்த்துகொண்டிருக்கின்றானா?


தடுத்தால் எல்லாவற்றையும் தடுக்கவேண்டும் அல்லவா?


செய்கின்றார்களா? அல்லது செய்வார்களா?


மக்களை பாதிக்காத, அவர்களின் வாழ்வாதாரத்தை கெடுக்காத வகையில் சில காரியங்களை செய்யலாம்.


இது பொறுப்பான அதிகாரிகள், மிக பொறுப்பாக செயல்படவேண்டிய விஷயம், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்


இதில் சிலர் மத்திய அரசை எதிர்த்தும், தனி நாடுதான் தீர்வு எனவும் பேசிகொண்டிருக்கின்றான்


இந்தியா எனும் நாட்டில் இருப்பதால் இவ்வளவு தூரமாவது பேசமுடிகின்றது, தனிநாடு என சென்றோமானால் வல்லாதிக்க நாடுகள் அடிக்கும் அடியில் ஈராக் போலவோ, லிபியா போலவோ ஆகிவிடுவோம்


அவர்கள் மீத்தேனை அள்ள வந்தால் நிலமை அவ்வளவு மோசமாக செல்லும், சின்னஞ்சிறு தமிழ்நாடு அந்த வல்லூறுகளுக்கு தப்பமுடியாது, இது உலக யதார்த்தம்


நசுக்கி விடுவார்கள்


ஆக இதற்கெல்லாம் தனிநாடு என்பவனை அந்த மீத்தேன் குழியிலே தள்ளுவது நாட்டிற்கு நலம்


ஏற்கனவே எரிவாயு எடுக்கும் பகுதியில் சில புதிய இடங்களை அனுமதித்திருக்கின்றார்கள், அது மக்களுக்கு இடைஞ்சல் என்றால் அது நிறுத்தபடட்டும்


சரி, இதில் மோடி ஓழிக என்றெல்லாம் கோஷங்கள் வருகின்றன, ஆனால் முதல்வர் பழனிச்சாமி என்பவர் பற்றி சத்தமே இல்லை


அப்படி ஒரு முதல்வர் இருப்பதையே தமிழகம் மறந்துவிட்டது போல‌


என்ன தமிழகமோ, இதுவே கலைஞர் முதல்வர் என்றால் மத்திய அரசின் திட்டத்திற்கு நடவடிக்கைக்கு எல்லாம் அவரே பொறுப்பு, டெல்லிக்கு ஜார்ஜ் புஷ் வர, ராஜபக்சே வர‌ கலைஞர் எப்படி அனுமதிக்கலாம் எனும் அளவிற்கு பொங்குவார்கள்


ஆனால் அவரை தவிர வேறு யாராவது முதல்வர் என்றால் அவ்வளவுதான், பாயினை விரித்து படுத்துகொண்டு மத்திய அரசு ஒழிக என சொல்லிவிட்டு தூங்கிவிடுவார்கள்


நாட்டின் இயக்கத்திற்கு சில காரியங்கள் நிச்சயம் தேவை, ஆனால் அவை மக்களை பாதிக்காதவாறு இருப்பது மிக அவசியம்


போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம் என மத்திய அமைச்சர்கள் சொல்வது நல்ல விஷயம்


நல்லது நடக்கட்டும், நாடு செழிக்கட்டும்




 

 



 

Monday, February 27, 2017

உடன் பிறப்பே....



Image may contain: 1 person, sunglasses and glasses



உடன்பிறப்பே


மது குடித்த மந்தியாக, கல் பட்ட கரடியாக‌ சிலர் புலம்பி திரிவதை கண்டிருப்பாய், அவர்கள் பொய்யிலே அரசியல் நடத்துபவர்கள், பசப்பு முகங்களிலே பாஷானம் கொடுப்பவர்கள் என தெரிந்தது தான்,


ஆனால் பச்சை பொய்களை கொஞ்சமும் அச்சமின்றி , கூச்சமின்றி சொல்ல‌ வந்து விட்டார்கள் பார்த்தாயா?


ஒருவர் திமுக தான் ஜெயா சாவுக்கு காரணம் என்கின்றார், இன்னொருவர் தமிழகம் வாழ இக்கழகம் அழியவேண்டும் என்கின்றார்.


வயிறு நிரம்பிய நரிகள் ஊளையிடத்தான் செய்யும், அதுவும் கூவத்தூரில் பெரும் விருந்தில் வயிறு பெருத்த நரிகளின் ஊளை அப்படித்தான் இருக்கும், அதன் இயல்பு அப்படி.


ஆனால் கழக வரலாறு என்ன?


திமு கழகத்திற்கு என்றுமே உருவாக்க மட்டுமே தெரியுமன்றி ஒரு காலமும் அதற்கு யாரையும் அழிக்க தெரியாது, அதன் வரலாற்று ஏடுகளை புரட்டிபார்த்தால், அது ம.கோ ராமசந்திரன், பண்ருட்டி ராமசந்திரன் முதல் இதோ இன்று அதிமுகவினை தாங்கி நிற்கும் நடராஜன் வரை இக்கழகம் தான் உருவாக்கியது


சாதாரண கலிங்கபட்டி கோப்பால் சாமி என்பவரை ஒரு பிம்பமாக வடிவமைத்ததே இந்த கழகம் தான்


அப்படிபட்ட இந்த அரும் கழகத்தினை எதிர்த்து சுயநலம் பிடித்த சிலர் சென்று சிலர் அரசியல் தற்கொலை செய்வார்களே ஓழிய , கழகம் யாரையும் வெறுத்ததுமில்லை , எதிரியாக நினைத்ததுமில்லை, அப்படி நினைத்து அழித்தொழிக்கும் அவசியமுமில்லை


ஆனால் ஜெயாவின் ஊழலை கழகம் எதிர்த்தது, ஜெயா என்று அல்ல, யார் ஊழல் செய்தாலும் இக்கழகம் ஆதரிக்காது. அந்த கொடும் ஊழலை, அரசாங்க பதவியின் துஷ்பிரயோக சொத்துகுவிப்பனை இக்கழகம் கண்டித்து வழக்கு நடத்தியது


அநியாயம், அக்கிரமம், ஊழல் இவற்றிற்காகத்தான் திமுக போராடியதே தவிர, ஜெயலலிதா எனும் தனி மனிதருக்காக அல்ல,


இன்னமும் அவர்கள் ஜெயா தண்டனைக்கு திமுக காரணம் என கருதினால், அந்த ஊழலின் பிம்பம், அதாவது கழகம் எந்த ஊழலை , கொடும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதோ அந்த அநியாயத்தின் மொத்த உருவம் ஜெயலலிதா என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள் என பொருள்


ஊழலை திமுக எதிர்த்தது, அதனால் ஜெயா காலமானார் என சொல்வார்களானால், அந்த ஊழலின் உருவமாகவே ஜெயா இருந்தார் என்பதே அவர்கள் நிலைப்பாடு என உலகம் கருதாதா?


திமுக ஊழலை கொலை செய்யும், அக்கிரமத்தை, சுரண்டலை கொலை செய்யுமே அன்றி, வேறு எதனையும் கொல்லாது.


உடன்பிறப்பே, நாம் தமிழகத்தினை சுரண்டினோம் என்கின்றன சில பதர்கள்


பெரியார் தன் சொத்துக்களை எல்லாம் பொதுசேவைக்கு வழங்கினார், அண்ணா தன் படைப்புகளையும், தன் காஞ்சிபுரம் வீட்டினை நாட்டிற்கு கொடுத்தார்


அவர்களை பார்த்து வளர்ந்த நான் என் திருகுவளை குடும்ப வீட்டையும் சொந்த ஊருக்கு கொடுத்தேன், 1940களிலே நான் வாங்கிய இந்த கோபாலபுரம் வீட்டையும் எனக்கு பின் மக்களுக்காக வழங்கிவிட்டேன்


கோபாலபுரம் வீடு மிக சிறியதுதான், ஆனால் தமிழக வரலாற்றில் அதற்குரிய இடத்தோடு விலைபேசினால் அது கோஹினூர் வைரத்தோடும் அதிக விலைக்கு போகும் என்பது உன்க்கு தெரியாததல்ல‌


எத்தனை தலைவர்கள் சந்தித்துகொண்ட வீடு அது?, எத்தனை பெரும் முடிவுகள் எடுக்கபட்ட வீடு? அதிமுகவின் இன்றைய தலைவர்கள் எத்தனை நாள் காவலாக கிடந்த வீடு அது.


அதன் பெருமை தமிழருக்கு தெரியும், வரலாறு அறிந்தவருக்கு தெரியும். அதனையே நான் நாட்டிற்கே கொடுத்துவிட்டேன்


இதனிடையே நான் எழுதி சம்பாதித்த பலவற்றை மக்களுக்கே கொடுத்ததெல்லாம் வரலாறு சொல்லும்


ஆனால் போயஸ் வீடு இன்று யார் கையில் உள்ளது, கங்கை அமரன் அனுதினமும் கங்கை நதிபோலவே கண்ணீர் வடித்து அழும் அந்த சிறுதாவூர் பங்களா யார் கையில் உள்ளது?


கண்ணுக்கு தெரிந்த நிலங்களையே எல்லையின்றி வளைக்கும் வல்லூறுகள், கண்ணுக்கு தெரியா மலையுச்சியில் கட்டியிருக்கும் கொடநாடு மாளிகை யாருக்கு?


இவை எல்லாம் மக்களுக்கு வருமா? சொல் உடன்பிறப்பே


கையில் இருப்பது கைபிடியானாலும் தமிழக்த்திற்கு என மகிழ்வோடு அள்ளிவீசுபவர்கள் நாம்


மூட்டை கட்டியும், கண்டெய்னரில் கடத்தியும் விளையாடும் அவர்கள் தமிழகத்திற்கு எதனை விட்டு சென்றார்கள்?


அவர்கள் மனம் கடுகை விட அவ்வளவு சிறியது, அவர்கள் சுயநலமோ இமயத்தை விட பெரியது


ஆக சொந்த சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கு கொடுத்த பெரியார், அண்ணா அவர்கள் வரிசையில் நான் போன்றவர்கள் எல்லாம் எங்கே?


ஊரையே வளைத்துபோட்டு சுகவாழ்வு வாழ்ந்துகொண்டும், இன்னும் வேண்டும் வேண்டும் என நீர் குடிக்கும் வறண்ட நிலமாக‌ , எவ்வளவு எரிந்தாலும் அடங்கா பேராசை தீயாக வெறியோடு அலையும் அவர்கள் எங்கே?


ஒப்பிட முடியுமா உடன்பிறப்பே?


இந்த சுயநல‌ பேராசைகாரங்கள் தான் நம்மை பழிக்கின்றனவாம், நம்மை அழிக்க துடிக்கின்றதாம்


இந்த கும்பல் வெளியில் நடமாட விட கூடாத கொடிய கும்பல், போயஸ் தோட்டம் என்பது பேராசை கொடியவர்களின் கூடாரம், தமிழகத்தை சுரண்டும் திட்டம் அங்கேதான் அரங்கேறியிருக்கின்றது என உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் இவர்கள் அழிச்சாட்டியம் கண்டாயா?


கட்சி கணக்கு கேட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சி, கணக்கு வழக்கு இல்லாமல் சொத்துசேர்த்து அதற்கு கணக்கு காட்டமுடியாமல் வீழ்ந்த கதை யாருக்கு தெரியாது


இவர்கள் நம்மை அழித்துவிடுவார்களாம், சொல்லிகொள்கின்றார்கள்


கழகம் எனும் சூரியனை நெருங்க இந்த வல்லூறுகளால் முடியுமா? இதுவரை இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என அவர்கள் அறியவில்லை என்பதை தவிர என்ன சொல்லி அவர்களை பரிதாபமாக பார்க்க இயலும்?


இந்த பேராசை, சுயநல கும்பலின் அந்திம காலத்தில், முடிவு தீ வைக்கபட்ட காலத்தில் இந்த அழிவு காலங்களில், தீயில் சிக்கிய பன்றியாக ஓலமிட்டுத்தான் தீர்வார்கள், கத்தட்டும்


புராணத்தில் வரும் ராவணனின் அழிவுக்கு யார் காரணம்? சேதுவில் பாலம் கட்டியவனா காரணம்?


துரியோதனின் அழிவுக்கு யார் காரணம்?


மதுரையிலே நீதி தவறி அழிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் சாவுக்கு யார் காரணம்?


அவரவர் செய்த வினைகள் அல்லவா அவர்களை கொன்றது.


உன்னைபோலவே தமிழக மக்களும் உண்மையினை அறிந்தவர்கள் என்பதாலும், என்றுமே நாம் சத்தியத்தை, தர்மத்தை நம்புபவர்கள் என்பதாலும் உறுதியாக சொல்கின்றேன்


வெற்றி நமதே, நாளை மட்டுமல்ல, இனி எல்லா நாட்களும் நமக்கான நாட்களே













பிரான்சில் டிரோன் கண்காணிப்பினை தடுக்க கழுகுகள் பயன்படுத்தபடும், காவல்துறை அறிவிப்பு


ஈராக்கில் நாய்கள் மீது வெடிகுண்டு பொருத்தி தாக்குதல்


பீட்டா என்றொரு அமைப்பு உண்டல்லவா? அது எங்கே மல்லாக்க கிடக்கின்றது என தெரியவில்லை








நெடுவாசல் சென்று போராட்டத்தில் பேசினார் சீமான் : செய்தி


நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் : இன்னொரு செய்தி


இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.







 






 


 

ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடியாது





சங்கரரும், ராமனுஜரும், விவேகானந்தரும், ரமண மகரிஷியும், கிருபானந்தவாரியார் போன்றவர்கள் இந்துமதத்தை பரப்பியது எல்லாம் சுத்த வேஸ்ட்


இந்து மதம் என்பது ஜக்கி ஸ்டைலிலும், நித்தி ஸ்டைலிலும் பரப்பபட வேண்டும் என்கின்றார் ஜெயமோகன்


மனிதருக்கு முற்றிவிட்டது என்பதை தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை





கிறிஸ்தவ ஊழியங்கள் அப்படி நடக்கும்பொழுது, எங்களை போன்றவர்கள் இப்படித்தான் கிளம்புவோம் என சொல்ல வருகின்றார்

அந்த கோஷ்டிகளை எப்படி கிறிஸ்தவர்கள் என உண்மை கிறிஸ்தவர்கள் ஒரு காலமும் ஒப்புகொள்ள போவதில்லையோ அப்படி ஜக்கியினையும் நல்ல இந்துக்கள் ஏற்றுகொள்ளபோவதில்லை

தினகரனின் கிறிஸ்து பெயரான‌ கொள்ளைக்கும், அன்னை தெரசாவின் தொண்டுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு

அப்படியே விவேகானந்தர் போன்ற ஞானிகளுக்கும், ஜக்கி போன்ற அரைவேக்காடுகளுக்கும் வித்தியாசம் உண்டு

ஜக்கி ஒரு காலமும் விவேகானந்தராகவோ, ரமணராகவோ ஆக முடியாது

அப்படி ஜெயமோகனும் சுஜாதா ஆகவே முடியாது




 

 



 

எழுத்தாளர் சுஜாதா : நினைவு நாள்



Image may contain: 1 person





தோற்றம் : 03-03-1935  :: மறைவு:  27-02- 2008



ஜனரஞ்சகமான எழுத்து என்றால் என்ன? அதனை தமிழில் எழுதுவது எப்படி என தமிழகம் அறிந்துகொள்ளட்டும்.." என‌ உலகிற்கு சொல்ல , இறைவன் அனுப்பிய எழுத்தாளன் சுஜாதா ரங்கராஜன் நினைவு நாள் இன்று


உலகின் எந்த துறையினை எடுத்தாலும் அதன் அடி ஆழம் வரை எழுதும் அறிவு அவருக்கு இருந்தது


ஆன்மீகம் முதல் விஞ்ஞானம் வரை, சங்க இலக்கியம் முதல் விண்வெளி வரை, கண மருத்துவம் முதல் கணிணி வரை, வரலாறு முதல் ரோபோக்கள் வரை





முந்தைய நாள் ஆழ்வார்கள் பெருமையினை அழகிய தமிழில் பேசிவிட்டு, மறுநாள் காலையில் சினிமா விவாதங்களில் பங்கெடுத்துவிட்டு, மாலையே கணிப்பொறியில் தமிழை கொண்டுவருவது எப்படி என அவர் பேசியபொழுது இப்படியும் ஒரு மனிதன் சாத்தியமா என்றெல்லாம் வியந்த காலங்கள் உண்டு

எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார் அவர், அதனை சுவைபட சொல்லும் அழகும் இருந்தது

தொல்காப்பியன், ஆழ்வார்கள், சாக்ரடீஸ், ஐன்ஸ்டீன், பாரதி, புதுமை பித்தன் என எல்லாமும் கலந்த அப்படி ஒரு எழுத்தாளன் இனி தமிழுலக்கிற்கு சாத்தியமே இல்லை

கண்ணதாசனும், சீனிவாச ராமனுஜனும் கலந்த கலவை அவர்

பிறவி அறிவு அவரிடம் அப்படி இருந்திருக்கின்றது

தமிழுலகம் மறக்கவே முடியாத மாமனிதன், தமிழர் அறிவின் பெரும் அடையாளம்

நல்ல எழுத்து எது? எப்படி எழுதவேண்டும் என்பதற்கு நவீன காலத்தில் அவரே இலக்கணம்.

அவர் எழுதிய காலங்கள் தமிழ் எழுத்துலகின் பொற்காலம், படிக்க படிக்க அப்படி ஒரு சுகமும் , திருப்தியும் மகிழ்வும் கொடுத்த எழுத்துக்கள் அவை

மனிதர் எல்லாவற்றையும் ரசித்திருக்கின்றார், அதுவும் முழுக்க முழுக்க ரசித்திருக்கின்றார் என்பது மட்டும் உண்மை

அந்த ரசனையினை எழுத்தில் கொடுத்தார்.

பூமியின் எல்லா பக்கங்களையும், மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும், விஞ்ஞானத்தின் எல்லா புத்தகங்களையும் , சமூகத்தின் எல்லா நகர்வுகளையும் கவனித்திருக்கின்றார்

இவரை பெற்றதில் தமிழுலகம் பெரும் மகிழ்வு அடைகின்றது, அன்னாரின் நினைவுநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த‌ அஞ்சலிகள்.

தமிழருக்கு பல்சுவை விஞ்ஞான‌ "எழுத்தறிவித்த இறைவன்" நிச்சயம் அவர்தான்.










 

Sunday, February 26, 2017

டெல்லியில் எடப்பாடி , சென்னையில் சிஆர் சரஸ்வதி இன்னும் பிற...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார்.


காத்து கிடந்து கண்ணீர் விட ஒருநாள், தினகரன் கும்பல் எடுக்கும் வகுப்பில் கைகட்டி பாடம் கற்க மறுநாள்,


பிரதமரை சந்திக்க மூன்றாம் நாள்




இப்படி 3 நாட்கள் கண்டிப்பாக தேவை..






டெல்லிக்கு செல்லும் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி சூனியம் பலிக்காமல் இருக்க பழனியாண்டவர் உதவட்டும்


எல்லா அடிமைகளும் நல்ல அடிமைகள்தான் தமிழகத்திலே, அவர் முழுக்க முழுக்க கெட்டவர் ஆவது டெல்லி சூனியத்திலே


பழனிச்சாமிக்கு எப்படி விபூதி அடிக்கபோகின்றார்கள் என்பது விரைவில் தெரியும்




ஆனால் நிச்சயம் அடிப்பார்கள், இவர் வேறு 3 நாள் இருக்கபோகின்றாராம்


எப்படி எல்லாம் குங்கும குளியலும், வேப்பிலையும் அடிக்க போகின்றார்களோ?







 ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்


யாராவது அந்த 122 அடிமைகள் பற்றி இந்த ஐ.நா கூட்டத்தில் குரலெழுப்ப கூடாதா?

இந்த நூற்றாண்டின் ஆகபெரும் மனித உரிமை மீறல் அவர்கள் மீதுதான் நிகழ்த்தபட்டது..


எம் எல் ஏக்களாக இருந்தும் அவர்கள் எருமை மாட்டினை போல நடத்தபட்டதை குறித்து யார் ஐ.நாவில் பேசபோகின்றார்கள்?





ஜெயலலிதாவின் சொத்துக்கள் எல்லாம் அவர் சினிமாவில் சம்பாதித்தது : சி.ஆர் சரஸ்வதி


அடேய், சினிமாவில் அப்படி சம்பாதிக்க முடியுமென்றால் மனோரமா அம்பானி ஆகியிருக்கமாட்டாரா?


சினிமாவில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமென்றால் பில்கேட்ஸ் முதல் வாரன் பெப்பெட் வரை மேக் அப் போட்டுகொண்டு குத்தாட்டம் ஆட வந்திருக்கமாட்டார்களா?




அவ்வளவு ஏன்? குஷ்பூ உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியிருக்க மாட்டாரா?


டெல்லி நீதிபதிகள் தலையில் அடித்து தீர்ப்பு சொன்னபின்னும் அம்மணிக்கு எவ்வளவு பேச்சு?


நீதிமன்ற அவமதிப்பு என்பது இதுவே தான்..






 நாட்டுக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவை - மோடி


அதனால்தான் நமது பிரதமர் பாபா ராம்தேவ், ஜக்கி சாமியார் ஆசிரமத்தில் சென்று விஞ்ஞானிகளை தேடுகின்றார்

விஞ்ஞானிகள் அங்குதான் உருவாகின்றார்கள் என்பது அவர் நம்பிக்கை




 


தமிழகத்தில் பாஜக....




இப்பொழுதெல்லாம் தமிழக பாஜகவினர் நிறைய பேசுகின்றார்கள், முன்பு அடங்கிகிடந்த அவர்களிடம் பெரும் மாற்றம் தெரிகின்றது


ஜெயா மறைந்து அதிமுக அரசினை தன் இஷ்டம் போல குட்டிகரணம் அடிக்க வைக்க மத்திய அரசு தொடங்கிய பின்னரே இவர்களின் பேச்சு 200% அதிகரித்திருக்கின்றது, மாநில அரசினை ஆள்வது மத்திய பிஜேபி என்பது அவர்களின் பேச்சிலே தெரிகின்றது


மீத்தேன் எனும் பழைய கள்ளை, ஹைட்ரோ கார்பன் எனும் புது மொந்தையில் பாஜக நுழைக்கின்றது, திட்டம் அதே தான்


இதில் பொன்னார், தமிழிசை, எச்.ராசா என வழக்கமானவர்கள் புதிய உற்சாகத்துடன் எட்டுகட்டையில் கச்சேரி நடத்துகின்றனர்


இல.கணேசன் நாட்டிற்காக ஒரு மாநிலத்தையே தியாகம் செய்யலாம் என மனுநீதி பேசிகொண்டிருக்கின்றார்


முன்பு கூடங்குள பிரச்சினையிலும் இதனையே சொன்னார், மாநிலத்திற்காக ஒரு மாவட்டத்தை இழக்கலாம் என்றார்


பின் நியூட்ரினோ பிரச்சினையிலும், கெயில் பிரச்சினையிலும் இதே பொன்மொழிதான் உதிர்த்தார்


இணையம் கடற்கரை சர்ச்சையிலும் இதே தான் உதிர்க்கபட்டது


அதாவது முன்பு மாநிலத்திற்காக ஒரு மாவட்டம் இழந்தால் என்ன? என கேட்டவர்கள். எல்லா மாவட்டங்களும் பாதிக்கபட்ட நிலையில் நாட்டிற்காக மாநிலத்தை இழந்தால் என்ன என கேட்கும் அளவிற்கு சென்றுவிட்டார்கள்


எப்படி?


இங்கு கேள்வி கேட்க யாருமில்லை, எதிர்கட்சி என் சட்டையினை கிழித்துவிட்டார்கள் என அழுதுகொண்டிருக்கின்றது


ஆளும் கட்சி என ஒன்று உண்டு, ஆனால் அது அடித்து கட்டபட்டு , இல்லை கிட்டதட்ட கொல்லபட்டு எகிப்து மம்மி போல ஆக்கபடுவிட்டது


அந்த பொம்மையினை அரியணையில் வைத்துகொண்டு மத்திய அரசு ஆளுகின்றது, அக்கட்சியினர் மம்மி மம்மி என அழுவதன் அர்த்தம் இதுதான், புரியவேண்டியவர்களுக்கு புரியும்


ஆக மனுநீதி ஆட்சியினை தமிழகத்தில் நடத்த ஆரம்பித்துவிட்டார்கள், அதனடிப்படையில் நாடு வளம்பெற ஒரு மாநிலம் பலிகொடுக்கபட்டால் என்ன என கேட்க தொடங்கிவிட்டார்கள்


மனுநீதி சொன்னது இருக்கட்டும், ஜனநாயக நீதி என ஒன்று உண்டு


பல்லின மக்கள் வாழும் நாட்டில் பல கட்சிகள் இருக்கும், அதில் எந்தகட்சி நாட்டை குட்டிசுவராக்குகின்றதோ, அதனை பலிகொடுப்பது குற்றமல்ல‌


நாட்டின் அமைதிக்கும், வளப்பத்திற்கும் ஒரு கட்சியினை பலிகொடுக்கலாம்


தமிழகத்தை பொறுத்தவரை அது பாஜக என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை


பெரியார் இம்மாநிலத்தில் பெரும் நெருப்பினை மூட்டினார், அண்ணா அதனை ஆட்சி ஜோதியாக மாற்றினார்


கலைஞரின் 1975 வரை பெரும் அநீதிகள் இம்மண்ணில் மத்திய அரசால் இழைக்கமுடியவில்லை, கச்சதீவு இந்த அளவு சிக்கல் இல்லை


என்று அந்த ராமசந்திரன் டெல்லியால் உருவாக்கபட்டு அரியணை ஏறினாரோ அன்றுமுதல் எல்லா அட்டகாசங்களும் தமிழகத்தில் தொடங்கின‌


அதுவரை டெல்லியினை எதிர்த்து நின்ற திமுக பின் மகோராவுடனும் , ஜெயுடனும் மல்லுகட்டுவதிலே தன் காலத்தை கடத்தியது


அதாவது மாநில நலனை விட்டு, தன் நலனை காக்கும் கட்டாயத்திற்கு அக்கட்சி தள்ளபட்டது.
இப்படி திமுக பலகீனமான நேரத்தில்தான், கல்பாக்கம், கூடங்குள அணுவுலை முதல் இன்னும் பல நாசகார திட்டங்கள் எல்லாம் அதிமுக காலத்தில்தான் உருவானது


அப்படி டெல்லியின் கைப்பாவையாகவே அக்கட்சி இருந்தது


இன்று ஜெயா வீழ்த்தப்ட்டு அக்கட்சி இன்று பாஜகவின் மாநில கிளையாகவே ஆகிவிட்டது


கலைஞரும் ஓய்ந்துவிட்டார்,


இனி நம்மை கேட்க யாருமில்லை என மெதுவாக தன் தலையினை தூக்கி அந்த கும்பல் முணகி பார்த்தது, பின் உறுமி பார்க்கின்றது


இந்த மாநிலம் அடங்கிவிட்டது, இங்கு நமக்கு எதிரி யாருமில்லை என அது சிந்திக்க தொடங்கி பேசவும் வந்துவிட்டது


வரலாறுகளை புரட்டினால் ஒன்று விளங்கும்


இம்மாநிலம் அந்த கும்பல் தலையெடுக்கும் பொழுதெல்லாம் அதற்கு பதிலடி கொடுத்தே வந்திருக்கின்றது


அது பிரமணன் அல்லாதோர் சங்கம், நீதிகட்சி, சுய மரியாதை கட்சி, திராவிட கட்சி என காலத்திற்கு ஏற்ப தன் எதிர்ப்பினை காட்டியே வந்திருக்கின்றது


திராவிட கட்சிகள் மட்டுமே அவற்றின் எதிரி என்பதல்ல, காரணம் காலத்தை பொறுத்து எதிர்ப்புகள் அமையும், அப்படி அந்த காலத்தில் உருவானது திராவிட கட்சி


இனி அக்கும்பலை எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வருமானால் இன்னொரு கட்சியோ, இல்லை மக்கள் சக்தியோ நிச்சயம் எழும்பும்


காலமே அதனை செய்யும்


இவர்கள் இப்படி மாநிலத்தை பலிகொடுக்கலாம் என பேச பேச, இன்னொரு பெரும் புரட்சி வெடிக்கும் என்பதே உண்மை


தமிழகத்தின் வரலாறு அதனைத்தான் சொல்கின்றது, இங்கு இருக்கும் எதார்த்தம் அப்படியானது


ஒருநாளும் வடக்கத்திய கும்பல் இங்கு பெரும் அழிச்சாட்டியம் செய்ய முடியாது. இது காந்திக்கு புரிந்தது, நேருவிற்கு புரிந்தது


இந்திராவிற்கும், ராஜிவிற்கும் கடைசிகாலங்களில் புரிந்தது


இந்த பாஜக என்பது இப்பொழுதுதான் களத்திற்கு வந்திருக்கின்றது, இனி அதற்கும் விரைவில் புரியும்




 

 



 

ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை





ஜெயா மறைவுக்கு திமுகவே காரணம்: தம்பிதுரை, திமுகவினை அழிக்காமல் விடகூடாது : விஜயபாஸ்கர்


அட பதர்களா, ஜெயாவின் மீது முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணியன் சாமி உங்கள் அருகிலே இருக்கின்றார் அவரை ஒரு வார்த்தை சொன்னீர்களா?


பாஜக ஆட்சியின் மிக சரியாக சசிகலா முதல்வராகும் பொழுது கத்தி வீசியிருக்கின்றார்கள் அது பற்றி ஒரு வார்த்தை?





பன்னீரையும், தீபாவினையும் கொம்பு சீவும் பாஜக பற்றி ஒரு வார்த்தை?

இன்று மறைமுகமாக உங்களை கட்டி வைத்து கதற கதற அடிக்கும் மத்திய அரசு பற்றி ஒரே ஒரு வார்த்தை??

இப்படி மத்திய அரசு பற்றி ஒரு வார்த்தை சொல்லாமல் , திமுக பற்றியே நீங்கள் அழுதுகொண்டிருக்க உங்களுக்கு சொல்லி கொடுத்தது யார்?

ஜெயா மறைவுக்கு திமுக காரணமா?

கொள்ளையடித்த தண்டனைக்கு ஜெயா தண்டிக்கபட்டிருக்கின்றார், அந்த நியாயத்திற்கு போராடியது திமுக என்றால் உங்கள் பாஷையில் அது கொலையா?

நியாயத்தினை கேட்பது கொலை என்றால் அது உங்களை பொறுத்தவரை கொலையாகவே இருந்து தொலையட்டும்..

சரி இவ்வளவு பேசும் தம்பிதுரை, ஜெயா மரணத்திற்கு என்ன காரணம் என டெல்லி எம்ய்ஸ் டாக்டர்களிடம் கேட்க தயாரா? அவர்களிடமும் ஒரு அறிக்கை உண்டு

அதை கேட்கவே மாட்டார், மாறாக கள் குடித்த கரடியாக சகலமும் திமுக என கத்திகொண்டே இருப்பார், இது முற்றிவிட்ட வியாதி

இவ்வளவு நடந்தபின்னும் திமுகவினை சாடினால்தான் அரசியல் செய்யமுடியும் என்பதை நம்பினால்...அந்தோ பரிதாபம்.




 

 



 

அரசியலில் எல்லாம் சாத்தியம்....




சில மர்ம காரியங்கள் நடக்க ஆரம்பிக்கின்றன, சில விஷயங்கள் புகைகின்றன, இந்த புகையினை அப்படியே முகர்ந்து பார்த்தால் சில விஷயங்கள் புரியலாம்


தீபக் என்பவர் கொந்தளிக்கின்றார், ஆனால் தீபா அவரை சந்தேகமாக பார்க்கின்றார்


களத்தில் நடராஜன் பகிரங்கமாக குதித்தபின் இன்னும் களம் வித்தியாசமாகின்றது


பழனிச்சாமி ஒரு மாதிரி முணுமுணுக்கின்றார், அவருக்கு சிக்கல் என சில தகவல்கள் வருமாறு பார்த்துகொள்ளபடுகின்றன, அதே நேரம் தினகரன் எல்லோரும் கட்சிக்கு வரவேண்டும் என அறிவிப்பு செய்கின்றார்


சசிகலா புஷ்பா போன்றோர் இன்னும் ஒதுங்கியே இருப்பதும் கவனிக்கதக்கது


தினகரன் அழைப்பு விடுத்த இரு நாட்களில் பன்னீரின் வசனங்கள் மாறுகின்றது, ஒரு அதிரடியான வசனங்களும் இல்லை. ஏதோ சொல்லவந்தவர் கூட தடுமாறி நிறுத்திகொண்டார்


தீபா கட்சி என அறிவித்தபின் அது இன்னும் சூடுபிடிக்கின்றது,


பன்னீரின் பேச்சுக்கள் இன்னும் மாறுகின்றதை கவனிக்கலாம்.


ஜெயாபடம் தொடர்பாக ஸ்டாலினை கண்டிக்கின்றார், அதிமுகவினை ஸ்டாலினால் அழிக்கமுடியாது என்கின்றார், அதாவது சசிகலா, தினகரன் சொன்னதையே பன்னீரும் சொல்கின்றார்


அதாவது  பன்னீர் அவர்களோடு நெருங்குகின்றார்


வியூகங்கள் எங்கோ நன்றாக வகுக்கபடுகின்றன, மறுபடியும் பன்னீரை முதல்வராக்கி கட்சியினை வலுவாக்கும் முயற்சிகள் நடப்பது புரிந்துகொள்ள முடிகின்றது


பன்னீர் விரைவில் அங்கு சென்று சரண்டராகலாம், அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன‌


அரசியலில் எல்லாம் சாத்தியம்....










கிரிகெட்

ஸ்டீவ் கீபே சுழலில் இந்திய அணி சிக்கி படுதோல்வி

இந்த கீபேயின் பயிற்சியாளர் ராம் என்பவர் தமிழராம், ஆக ஒரு தமிழனின் மறைமுக உழைப்பில் இந்திய அணி வீழ்த்தபட்டிருக்கின்றது

அப்படி இந்தியாவிற்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் கொம்பினை சீவிய தமிழர் ஒருவேளை அங்கிள் சைமனின் கட்சிக்காரராக இருப்பாரோ?




 

 



 

Saturday, February 25, 2017

ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம்....





ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம் இவற்றை பற்றி பேசிகொண்டிருப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்திருக்கின்றார்


பவுலர் பந்து வீசும்பொழுது இதோ ஸ்டம்ப் என பேட்ஸ்மேன் ஒதுங்கிகொண்டால் எப்படி இருக்கும்? அப்படி பெரும் வாய்ப்ப்பு கொடுத்திருக்கின்றார்.


ஜெயா விவகாரத்தில் இன்றுவரை இருக்கும் மர்மம் அவர் அப்பல்லோவில் இருந்தபொழுது ஏன் படமோ, வீடியோவோ இல்லை என்பது





அதுவும் ஜெயாவினை யாரும் சந்திக்கவில்லை என்பதும் உண்மை, ஆனானபட்ட ஆளுநர் கூட தள்ளி இருந்து கண்ணாடி துவாரம் வழியாக ஜெயாவினை பார்த்தார் என்பதுதான் இதுவரை உள்ள செய்திகள்.

அப்பல்லோவும் எங்களிடம் சிசிடிவி இல்லை, ஸ்கேன், எக்ஸ்ரே தவிர எந்த கருவியும் எங்களிடம் இல்லை என சொல்லியிருக்கின்றது, லண்டன் டாக்டர் பீலேயும் லண்டன் மகாராணி படம் முன் சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக அதனையே சொன்னார்

இப்படியாக அந்த சர்ச்சைகளில் படமும், வீடியோவும் கிடையவே கிடையாது என அவர்கள் சத்தியம் செய்து சாதித்துகொண்டிருக்க, திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக சறுக்கியிருக்கின்றார்

அதாவது இவர் ஜெயாவினை அனுதினமும் பார்த்தாராம். இவர்களிடம் ஜெயா நிறைய விவாதித்தாராம், அதுவும் ஒரு நாளைக்கு 10 தடவை சந்தித்தாராம்.

அதனை விட பெரும் சர்ச்சை , அதனை எல்லாம் போட்டோ, வீடியோ எல்லாமும் எடுக்கபட்டிருக்கின்றதாம்

எப்படி வாய்ப்பினை கொடுத்திருக்கின்றார் பார்த்தீர்களா?

நல்ல எதிர்கட்சி தலைவர்களும், வாய்ப்பு கிடைத்தால் அடித்து ஆடும் எதிர்கட்சிகள் இந்நிலையில் அடித்து ஆடலாம்

பெரும் பரபரப்பான விஷயமாக இதனை கொண்டு வரலாம்

ஒரு அமைச்சர் இப்படி பேசுகின்றார், அப்பல்லோ அப்படி பேசுகின்றது என சரசரவென அடித்து நொறுக்கலாம்

கலைஞர் போன்றோர் இருந்தால் அப்படி செய்வார்கள்.

இப்போதுள்ள எதிர்கட்சிகளுக்கு இப்படி ஆடும் எண்ணமெல்லாம் இல்லை, இவர்கள் வேறு மாதிரி

பேட்ஸ்மேன் ஸ்டம்பை காட்டி நின்றாலும், நான் புறவாசல் வழியாக விக்கெட் எடுக்கமாட்டேன் என அம்பையரிடம் சொல்லிவிட்டு, பேட்ஸ்மேனை ஸ்டெம்பை மறைக்க சொல்வார்கள்

பின் எப்படி ஆட்டம் சுவாரஸ்யமாகும்?




 

 



 

டிரம்புக்கு மெலீனா போனால் என்ன அடுத்தது கெலினா...



Image may contain: 1 person, smiling, close-up



மற்ற நாட்டுக்காரர்களை எல்லாம் கிளம்புங்கள், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என டிரம்ப் சூறாவளியாக கிளம்பும் வேளையில் அவரின் மனைவியும் கிளம்புவாரா? என்ற சர்ச்சை வந்துள்ளது


அதாவது டிரம்ப் பெரும் தொழிலதிபர், பெண்கள் விஷயத்தில் மன்னன் சாலமோன், தசரதன் வகையறா. நல்ல ரசிகன், அவர் தோட்டத்தில் நடமாடும் ரோஜாக்கள் நிறைய உண்டு, அதில் சிலவற்றை தன் கையில் ஏந்திகொள்வார்.


சுருக்கமாக சொன்னால் நம்ம ஊர் ஜெமினி கணேசன் பாணி





அப்படி டிரம்பின் தற்போதைய மனைவி மெலீனா சொல்வீனிய நாட்டினை சேர்ந்தவர், மாடலங் பிழைப்பிற்காக அமெரிக்கா சென்றவர் டிரம்பின் கண்ணில் பட்டு பின் அவர் மனைவியர் வரிசையில் இடம்பெற்றார்

அம்மணி, கிரீன் கார்டு மற்றும் குடியுரிமையில் அவரின் வருமானம் குறித்து தெரியபடுத்தவில்லை, விசாவில் வந்த காலத்தில் பெரும் பணம் குவிந்திருக்கின்றது எப்படி? (இது அவர்களுக்கு தெரியாதா? ஆனால் சட்டம்  ), என சர்ச்சைகள் வெடிக்கின்றன‌

அமெரிக்க சட்டபடி இது பெரும் குடிநுழைவு குற்றமாம்

டிரம்ப் என்ன செய்யபோகின்றார்?, வால்டர் வெற்றிவேல் சத்யராஜ், தங்கபதக்கம் சிவாஜி போல சட்டமா? உறவா? என பெரும் குழப்பத்தில் இருக்கின்றார் என செய்திகள் சொல்கின்றன‌.

மனிதரோ கொஞ்சமும் அசந்ததாக தெரியவில்லை

அவருக்கு மெலீனா போனால் என்ன அடுத்தது கெலினா...

"மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல இரண்டல்ல வண்ண மீன்கள்...."












நடராஜன் சுய உருவம்.





சசிகலா இருவார காலமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிகொண்டிருந்தார், அவரின் உருவம் பகிரங்கமாக தெரியதொடங்கியதற்குள் அவரை சிறையில் அடைத்துவிட்டார்கள்


இல்லைஎன்றால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் அவர் முச்சத்தியம் போல வந்திருக்கும்


இப்பொழுது நடராஜன் முறை வந்திருக்கின்றது





பதற்றத்தில் மனிதர் பொங்கி தன் சுய உருவத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார், நிறைய பேசுகின்றார்

நன்றாக தெரிகின்றது, அவர் பதற்றத்தில் இருக்கின்றார். பெரும் சொத்து தன் கையினை விட்டு போகும் நிலையில் ஒரு மனிதன் எப்படி பதறுவானோ அப்படி ஒரு பதற்றம் அவரிடம் வந்துவிட்டது

நிறைய பேசுகின்றார்., அதில் தன்னையறியாமல் சிக்குகின்றார்

"ஜெயா அரசிலை விட்டு ஒதுங்குகின்றேன் என எழுதிய கடித்தத்தை கைபற்றி, அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது தான்" என பேசியிருக்கின்றார்

அதாவது ஜெயலலிதா ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகி எழுதிய கடித்ததை , ஜெயாவிற்கு தெரியாமலே இவர் படித்து , ஜெயாவினை வலிய அரசியலில் தள்ளியிருக்கின்றார்

இதனால் தமிழகம் என்ன உணர்கின்றது

"அடேய்.. தமிழகத்தை கெடுத்த படுபாவி நீதானா? நீ தான் இவளவு சிக்கலுக்கும் காரணமா?" என புருவத்தினை உயர்த்துகின்றது

இன்னும் ஜெயாவிற்கு உதவினேன் என சொல்லி எத்தனை ரகசியங்களை, அதாவது தமிழகத்திற்கு தான் செய்த துரோகங்களை நடராஜன் சொல்லபோகின்றாரோ தெரியாது

விரைவில் சொல்லலாம்

ஆனால் அதற்குள் சொகுசுகார் உட்பட்ட வழக்கில் இவரும் உள்ளே சென்று சசிகலா போல் அமைதியாகிவிட கூடாதே?




 

 



 

உதயமானது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை...

https://youtu.be/wLActdnkFlg




யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கும் ஜனநாயக நாடு இது, பிரபல ரவுடிகள் கூட கட்சி நடத்துவார்கள்


அப்படிபட்ட நாட்டில் ஜெயலலிதாவின் உறவொன்று கட்சி தொடங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என ஒன்றை தொடங்கியிருக்கின்றார் அம்மணி, நிச்சயம் இது ஆட்சியினை எல்லாம் பிடிக்காது, ஆனால் வோட்டுகளை சிதறடிக்கும்





தமிழனுக்கு பெரும் சென்டிமெண்ட் உண்டு, எம்ஜிஆருக்கு மட்டும் ஒரு வாரிசு இருந்திருந்தால் இன்று நாமெல்லாம் வடகொரியர்கள் போல அமர்ந்துவிட வேண்டியதுதான்

எம்ஜிஆருக்கும், ஜெயாவிற்கும் அப்படி இல்லை என்பது இன்னொரு கோணம், ஆனால் தீபா ஜெயாபோலவே இருப்பது ஒரு வகை சென்டிமென்டினை தமிழகத்தில் ஏற்படுத்தலாம், காலம் காட்டும்

எப்படியோ அதிமுகவில் இப்பொழுது கட்டு உடைக்கபட்டிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் எல்லோரும் பேசுகின்றார்கள், வாய் திறந்து பேசுகின்றார்கள்

முன்பெல்லாம் கட்சியினை விட்டு எங்கே செல்வது என வருத்தத்தில் இருந்தார்கள். இப்பொழுது அப்படி அல்ல அதிமுக பிடிக்காவிட்டால் பன்னீர் அல்லது தீபா என ஓடி ஓடி
விளையாடலாம்

எங்கு சென்றாலும் எம்ஜிஆர் ஏக்கம், அம்மா கனவு என கொள்கை மாறாமல் பேசலாம் என்பது கூடுதல் வசதி

என்ன? அதிமுகவில் இருந்தால் பன்னீர், தீபாவோடு திமுகவினை திட்டவேண்டும், ஆனால் இக்கோஷ்டியில் இருந்தால் சசிகலாவினை மட்டும் திட்டிகொள்ளலாம்

இன்னும் ஒரு கட்சி உதயமாகிவிட்டது, இதன் கொடையாளி யார்? தீபாவிற்கு செலவழிப்பது யார்? என்றெல்லாம் யாரும் கேட்க முடியாது இது அரசியல்

அங்கிள் சைமனே கட்சி தொடங்கும்பொழுது, தீபா தொடங்க என்ன?

ஆம், அங்கிள் சைமன் உங்களிடம் ஒரு கேள்வி

கன்னட ஜெயகுமாருக்கு பிறந்த கன்னடச்சியான தீபா, இது என் அத்தாச்சியின் கட்சி, அதற்கு நானே அட்சாச்சி என வந்து தமிழகத்தில் கட்சியே தொடங்கியிருக்கின்றார்

ஆண்டாண்டு காலம் நம்மோடு வாழ்ந்த வம்சத்தி வந்தவர்களைவே வந்தேறி, வடுகர் தெலுங்கர் என்றெல்லாம் சீறிய நீங்கள், இந்த கன்னட தீபாவினை எதிர்காதது ஏன்?

ஆக அங்கிள் சைமனுக்கு தெலுங்கர்கள் என்றால்தான் எதிரிகள், அவர்களுடன் போர் நடத்துவார்

ஆனால் கன்னடர்கள் என்றால் தமிழர்களில் ஒருவர் என அமைதியாகிவிடுவார் பொலும்..

ஒரு கன்னட சாமியார் தமிழகத்தில் ஆசிரமம் தொடங்கி கல்லா கட்டுகின்றார், ஒரு கன்னட பெண் அரசியல் கட்சி தொடங்கி இருக்கின்றார்

இதிலெல்லாம் அங்கிள் சைமனின் தமிழ் முழக்கம் கேட்காது

ஏன் கேட்காது? அவர் அப்படித்தான்..

தீபா தான் அடுத்த ஜெயா என களம்புகுந்துவிட்டார், தமிழகமோ அப்படியானால் அடுத்த சசிகலா யார்? என தேட ஆரம்பித்துவிட்டது.




 

 



 

ஆதி யோகி சிவன் சிலை திறப்பு

https://youtu.be/6l6AoBQ2_20



ஜக்கி ஆசிரமத்தில் சிலைதிறப்புடன் சிவராத்திரி : பாலிவுட் நடிகைகளுடன் முதல்வர் மோடி, கிரண்பேடி பங்கேற்பு


தமிழகம் அணுவுலை முதல் ஹைட்ரோகார்பன் பிரச்சினை வரை பாதிக்கபட்டிருக்கும் நிலையில் ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமர் , எந்த அரசியல் நெருக்கடியிலும் தமிழக பக்கம் வராத பிரதமர் எதற்கு வந்திருக்கின்றார் பார்த்தீர்களா?


விவேகானந்தர் பாறை என அவர்கள் கால் வைத்தபொழுதே தமிழகம் காத்த அமைதி இன்று இந்நிலைக்கு இழுத்து செல்கின்றது


ஆயிரம் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய பிரதமர் ஒரு ஆசிரமத்திற்கு வருவது என்பதும், பாண்டிச்சேரி கவர்ணர் கிரண்பேடி அங்கு ஆட்டம்போடுவதும் எதனை காட்டுகின்றது?


இந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக மதவாத சக்திகளின் பிடியில் சிக்குகின்றது, ஒரு சர்ச்சை சாமியாரே பாரத பிரதமரை தன் இடத்திற்கு வரவைக்க முடிகின்றது.


பதஞ்சலி குழுமம் பாரத பிரதமரை யோகாவிற்கான மார்கெட்டிங் மேனேஜராக நியத்த்து உலகெல்லாம் மார்கெட்டிங் செய்யு அளவிற்கு நிலை மோசம்..


இந்த நூற்றாண்டின் பெரும் விஞ்ஞானிகளும், பெரும் அறிவியல் கண்டுபிடித்தவன் எவனும் யோகா செய்ததாக எங்கும் காணமுடியாது


பெரும் வெற்றிகளை குவித்த நெப்போலியன் போன்றவர்கள், கிளைவ் போன்றவர்கள், மோசே தயான் போன்றவர்கள் யோகாவினால் சாதித்ததாக எங்கும் இல்லை


ஆனால் இந்த கும்பல் யோகா, யோகா என ஒப்பாரி வைத்துகொண்டே இருக்கின்றது


விரைவில் ஈரான், ஆப்கன் இன்னும் பல நாடுகளை மதவாதிகள் ஆள்வதினை போல இந்தியாவின் நிலையும் மாறலாம்


மாறினால் என்னாகும்? நாசமாய் போகும். நேற்று கூட 30 பேரை பலிகொடுத்த பாகிஸ்தானே சாட்சி


புத்த மதத்தால் தன் வாழ்விழந்த பர்மாவும், இலங்கையும் இன்னும் ஏராள நாடுகளும் சாட்சி


ஐரோப்பாவினை ஆட்டிவைத்த போப் எனும் பெரும் மத சக்தியினை ஐரோப்பிய நாடுகள் தூக்கி எறிந்தபின்புதான் அவை பெரும் வளர்ச்சி கண்டன‌


திருச்சபை, மர்ம சாமியார் எல்லோரையும் அடித்து விரட்டிதான் ரஷ்யா எழும்பியது. புத்த மதத்தினை தூக்கி எறிந்தபின்புதான் மாவோவால் சீனாவினை உயர்த்த முடிந்தது


அப்படி மத கட்டுப்பாட்டை உதறிய நாடுகள் உருப்படும் என்பதும், அதில் சிக்கிய நாடுகள் நாசமாய் போகும் என்பதும் வரலாறு காட்டிய உதாரணங்கள்


இந்தியா அந்நிலையில் சிக்கிவிட கூடாது என்பதுதான் அதன் தேசப்பற்றாளர்களின் நம்பிக்கை


பிரதமரின் நேற்றைய பெரும் தவறு இனி பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கலாம்


மண் திருடன், கல் திருடன் இன்னும் பல கொள்ளையர்களுக்கு இனி புத்தி இப்படி போகலாம்


ஓஓ..எவ்வளவும் சுரண்டிவிட்டு சிவனுக்கோ கிருஷ்ணனுக்கோ ஒரு சிலைவைத்துவிட்டால் போதும், பிரதமரே திறக்க வருவார், கவர்ணர் கதவு திறப்பார்


இவ்வளவுதானா இந்தியா?


இனி எல்லா இயற்கை கொள்ளையர்கள் ஏரியாவிலும் இனி ஏதாவது ஒரு இந்து தெய்வத்தின் சிலை இருக்கலாம், அவர்களோடு பிரதமரும் கவர்ணரும் கைதட்டலாம்


ஏதாவது ஒரு கவர்ணர் குத்தாட்டம் போடுவார்கள், சில நடிகைகள் ஆடுவார்கள், முதல்வர்கள் விசிலடிப்பார்கள்


விரைவில் இம்மாதிரி கூத்துக்கள் மதுரை கிரானைட் குவாரிகள், திருச்செந்தூர் கடலோரங்களில் இடம்பெறலாம்


இனி இந்து தெய்வங்களை கொள்ளையர்கள் கட்டிவைக்கும் கோயில்களில் வழிபடும் ஒரு விபரீத நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுகொண்டிருப்பதுதான் வேதனை...


அரசியலும், மதமும் ஒரு காலமும் கலக்க கூடாது, கலந்துவிட்டால் அது அழிவினை தவிர ஏதும் கொடுக்காது என்பதுதான் உலக சரித்திரம் சொல்லிகொண்டிருக்கின்றட்து


அந்த சரித்திரத்தை படித்த பின்னும் இந்திய தரித்திரம் தொடர‌வேண்டும் என சிலர் கிளம்புவதுதான் வேதனை..


மிக புனிதமான இந்துமதத்தை, அதன் அருமைகளை எல்லாம் ஜக்கி போன்ற சாமியாரா அரசியல்வாதிகளோடு விளக்கவேண்டும்?


பால் தினகரன் எல்லாம் கிறிஸ்துவினை போதிப்பதை போல இதுவும் மிக மிக கொடுமையானது









Image may contain: 1 person, standing





 










 







Friday, February 24, 2017

சின்ன சின்ன செய்திகள் ...

தமிழகத்திலும் ஒரு நாள் பாஜக அரசு மலரும்: மத்திய அமைச்சர் ஹர்சவர்தன்


விவரம் தெரியாத அமைச்சராக இருப்பார் போலும்


இப்பொழுது மறைமுகமாக நடந்துகொண்டிருப்பது யார் ஆட்சி? என கூட தெரியாமல் இவர் மத்திய அமைச்சரா?,




மனிதர் மிகவும் அப்பாவி போல‌






முதல் இன்னிங்க்ஸில் 105 ரன்களுக்கு இந்திய அணி அதிர்ச்சி ஆல் அவுட்.


இதில் என்ன அதிர்ச்சி, முன்பே சொன்னதுதான்


வங்கதேசத்திடம் வென்றுவிட்ட மதப்பில் ஆஸ்திரேலியாவுடன் மோதினால் இப்படித்தான் ஆகும்..







 

ஜெ பிறந்த நாள்: செய்திகள் , நிகழ்வுகள்

போயஸ் வீடு எங்களுக்கே: ஜெ. அண்ணன் மகன் தீபக் திடீர் போர்க்கொடி


அது இவரின் அத்தை வீடு என்பதே இவருக்கு நேற்று இரவில்தான் தெரிந்திருக்கின்றது


இனி அத்தையின் சொத்துக்கள் எங்கிருக்கின்றது என தெரிய எத்தனை ஓளி ஆண்டுகள் ஆகுமோ?




ஆனாலும் இவ்வளவு வேகம் கூடாது மிஸ்டர் தீபக்..






ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடவடிக்கையை தொடங்கிய போது தன் முதல்வர் பதவி சிக்கலானது : பன்னீர் செல்வம்


இதுவாய்யா ரகசியம், ஊரெல்லாம் தெரிந்ததன் பெயர் ரகசியமா?


இதற்கா தமிழகம் காலையிலிருந்து காத்திருந்தது?,




இதனையா மா.பா பாண்டியராஜன் பெரிதாக சொல்லிகொண்டிருந்தார்?


மிஸ்டர் பாண்டியராஜன், ரகசியம் என்றால் என்ன என்றாவது தெரியுமா?






பன்னீர் செல்வம் அந்த ரகசியத்தை வெளியிடுவார், இந்த ரகசியத்தை வெளியிடுவார், அது வெளிவந்தால் தமிழகம் அலறும், புரண்டு படுக்கும் என்றேல்லாம் காலையிலிருந்தே சொல்லிகொண்டிருக்கின்றார்கள்


ஒரு ரகசியமும் வெளிவந்ததாக தெரியவில்லை, வரவும் வராது.


சொல்லிவிட்டால் அது என்ன ரகசியம், சொல்லாமல் இருக்கும் வரைதான் ரகசியம். இது பன்னீருக்கு தெரியாதா?




ஆக அம்மாவின் நூற்றாண்டு விழாவிலும் இப்படித்தான் ரகசியம் பற்றி பேசிகொண்டிருப்பார்கள்....






பாத்திமா பாபு உங்கள் கட்சியில் இணைந்ததா பெரும் ரகசியம்?


இதனையா ரகசியம் என சொல்லிகொண்டிருந்தார்கள்?


கடன் வாங்கி வந்தாவது அந்த பாண்டியராஜனை கட்டி வைத்து, விஜயகாந்த் படங்களை பார்க்கவைத்து கதறவைக்க வேண்டும்.




பாத்திமா பாபுவினையா இவ்வளவு கஷ்டபட்டு கொண்டுவந்தீர்கள்?


அதற்கு ரகசியம் வேறு காக்க வேண்டுமா?











எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ : இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்கர்

https://youtu.be/blKBeQL1cqk

’எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ : இந்தியரை சுட்டுக் கொன்ற அமெரிக்கர்

நீண்டகாலமாக இருந்த வெறுப்புதான் அது,


அமெரிக்கா என்பது வெள்ளையர்களுக்கான தேசமென்றும், ஆப்ரிக்கர்களை போல மற்றவர்கள் எல்லாம் அங்கு அடிமைகள் என்றும் மனதார அவர்கொளுக்கொரு வன்மம் உண்டு




அவ்வப்போது அடக்கிவைக்கபட்ட இந்த வன்மம், டிரம்ப் இனவாதம் பேசி ஆட்சிக்கு வரும்பொழுதே தெரிந்தது


மிக அழகான தங்கள் நாட்டை ஆசியர்களும், ஆப்ரிக்கர்களும் அசிங்கபடுத்துகின்றார்கள் என்ற எண்ணம் அவர்களுக்குள் எரிந்துகொண்டே இருந்தது


அவர்களோடு சரிக்கு சமமாக வாழ்வதெல்லாம் சாத்தியமில்லை, அவர்கள் மனப்பான்மை வேறு,


வியாபாரத்திற்காக ஜனநாயகம், சமத்துவம் அது, இது என பொய் சொல்லிகொண்டிருப்பார்கள்


ஆண்டாண்டு காலமாக தங்களோடு வாழும், அந்த அமெரிக்காவினையே சொர்க்கபுரியாக மாற்ற விலங்காய் உழைத்த கறுப்பர்களையே சக அமெரிக்கனாக ஏற்க தயங்கும் இனம் அது


இந்தியனை எல்லாம் எப்படி ஏற்றுகொள்வார்கள்??



ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று..



Image may contain: 1 person, selfie and close-up


முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று


எம்ஜிஆர் தான் சினிமாவில் திரட்டிய மக்கள் சக்தியினை அவரிடமே விட்டுசென்றார். ஜெயா கட்சியினை சிரமபட்டு வளர்த்தவரோ அதற்காக போராடியவரோ அல்ல‌


உருப்படியான ஒரு மக்கள் நல போராட்டத்தை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட அவர் நடத்தியதில்லை..


எங்கிருந்தோ வந்த அவருக்கு கட்சி சிக்கிகொண்டது,
இந்திராவும், ராஜிவும் அவருக்கு கைதூக்கி விடும் அளவிற்கு அவர் ஜாதகத்தில் கட்டம் இருந்தது.


அதுவும் ராஜிவ் செத்து அந்த அனுதாபத்தில் அவர் முதல்வராகும் அளவிற்கு விதி அவருக்கு ஒத்துழைத்தது


அதன் பின்னும் அவரின் பிறவிபலன் அவருக்கு வாய்ப்புகளை கொடுத்துகொண்டே இருந்தது, கிட்டதட்ட மகாராணி ஸ்தானத்திற்கு உயர்ந்தார் ஜெயலலிதா


இல்லை உயர்த்தபட்டார்


ம் என்றால் சிறைவாசம் , ஏன் என்றால் வனவாசம் எனும் அளவிற்கு அவருக்கு காலம் அவரை சக்தியாக்கி வைத்திருந்தது


ஏராளமான சர்ச்சைகளுக்கு சொந்தகாரியானார், ஆனால் எந்த இடத்திலும் அதனை பற்றி பேசியதில்லை. நான் அப்படித்தான் என்பது போல அவரின் தோரணை இருந்தது.


அவர் யாரையும் தேடி சென்றதாக தெரியாது, எல்லோரும் அவரை தேடித்தான் சென்று வணங்கி நின்றார்கள், அப்படியும் காலம் இருந்தது


காலம் தமிழக மக்களின் அறியாமையில் அவருக்கு வாய்ப்பளித்தது


இப்படி எல்லாம் பெரும் உயரத்தில் பெரும் ராணிக்கு நிகரான வாழ்வினை வாழ்ந்தார் ஜெயா, பிரச்சாரத்திற்கு இந்த சிறிய தமிழகத்தில் ஹெலிகாப்டரில் பறந்த முதல் மற்றும் கடைசியான கட்சி தலைவி அவர்தான்


வாழ ஒரு காலம் உண்டென்றால் அடிவாங்க ஒரு காலம் உண்டல்லவா?


சொத்துகுவிப்பு வழக்கில் அவரால் தப்ப இயலவில்லை, குமாரசாமி வடிவில் விதி வெளியில் விட்டாலும், அவர் மகிழ்ச்சியடையவில்லை


பெரும் எண்ணிக்கை எம்பிக்களை பெற்று பிரதமராகிவிட்டால் தன் வழக்குகளை இந்திரா ஸ்டைலில் புதைத்துவிடலாம் எனும் கனவும் மோடி வடிவில் தகர்ந்தது


அதன்பின் ஜெயலலிதாவிடம் உற்சாகம் குறைந்தது, அதாவது அவர் ஜாதகம் தென்னிந்தியாவில் பலித்தது, வட இந்தியாவில் முடியவில்லை


தொடர்ந்து இரண்டாம் முறை முதல்வரானாலும் அவர் பெரும்பாலும் வெளிவரவில்லை, இந்நிலையில்தான் அவரின் எம்பி சசிகலா புஷ்பா என்னை ஜெயலலிதா அடித்தார் என பாராளுமன்றத்தில் அழுதார்


அதன் பின் காட்சிகள் மாறின, இதனை எதிர்பார்க்காத ஜெயலலிதா குழம்பினார், குழப்பத்திலே அப்பல்லோவில் அனுமதிகபட்டார்


அதன் பின் அப்பல்லோ டாக்டர்களை தவிர யாரும் ஜெயாவினை பார்க்கவில்லை, அவர்களுக்கு அடுத்து பார்த்தது லண்டன் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள்


அங்கே வாழ்வு முடிந்து வெளிவந்தார் ஜெயா.


கட்சி ஆடியது, அவருக்கு பின் யார் என்ற குழப்பம் கட்சியில் ஒடிகொண்டிருக்கும் பொழுதே தீர்ப்பு வந்தது


அவர் கல்லறை இப்பொழுது ஒரு குற்றவாளியின் கல்லறை என அடையாளபடுத்தபடுகின்றது


அவர் நெடுநாள் சிறைவாசம் பெற்று, ஆட்சி நீங்கும் நிலைக்கும் அவர் விதி ஒப்புகொள்ளவில்லை, காப்பாற்றி இருக்கின்றது


ஜெயலலிதா எங்கும் தன் உணர்ச்சிகளை காட்டுபவர் அல்ல, கண்ணீரோ கத்தலோ பொதுஇடத்த்தில் அவரிடம் இருக்காது, எல்லா அவமானங்களையும், நக்கல்களையும் மனதில்தான் வாங்கிகொண்டிருப்பார்


எம்ஜிஆர் சமாதியில் அடித்து சத்தியம் செய்தார், கோபத்தில் சிரித்தார், ஒரு மாதிரி பேசினார் என எங்காவது ஜெயா வாழ்வில் பார்க்க முடியுமா?


அப்படியே பாறைபோல முகபாவம் இருக்கும், உதடுகள் மட்டும் அசையும்


மொத்தத்தில் கிட்டதட்ட 25 ஆண்டுகாலம் தமிழக அரசியலை ஆட்டுவிக்க அன்றொரு ஆன்மா இந்த பூமிக்கு வந்த நாள் இது


முதலில் எம்ஜிஆரும், பின் சசிகலா குடும்பமும் அதன் பின் அதிமுகவினர் அனைவரும் வணங்குவதற்காகவே அவதரித்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று, மற்றபடி ஒன்றுமில்லை


எம்.என் ராஜம் போல, சரோஜா தேவி போல, சச்சு போல ஒரு நடிகையாக வாழ்ந்திருக்கவேண்டிய ஜெயாவினை, இன்று மிஞ்சி போனால் கே.ஆர் விஜயா போல டிவி தொடர் நடிகையாக வாழ்ந்திருக்க வேண்டிய அவரை...


பெரும் மகாராணி ஆக்குவதற்கு தமிழக பாமர நிலை அப்படி ஒத்துழைத்திருக்கின்றது என்பதுதான் ஆச்சரியம்..


ஜெயாவின் பிறந்தநாளில் அவரை அல்ல, அவரை கொண்டாடிய தமிழக அறியாமையினைத்தான் நினைக்க வேண்டி இருக்கின்றது













 


 

Thursday, February 23, 2017

மோடி முதல் குஷ்பு வரை....


என்னை கழுதை என விமர்சிக்கின்றார்கள் , ஆனால் நான் கழுதையாக அல்லும் பகலும் உழைப்பேன்: மோடி


யாருக்கு மிஸ்டர் மோடி? ஜக்கி போன்ற சாமியார்களுக்கா?






நிதி அமைச்சரானார் ஜெயகுமார்


கூவத்தூர் கொண்டாட்டத்தின் போது அப்போதைய மீன்வளதுறை அமைச்சரான இவர்தான் ரிசார்ட்டின் மீன் "நிதி"யினை ஏற்றிருந்தார் என செய்திகள் சொன்னது


மீனுக்கு "நிதி" கொடுத்தவரை "நிதி "அமைச்சராகவே நியமித்துவிட்டார்கள்.




அவ்வளவு சுவையான மீன்களை கொடுத்திருப்பாரோ???


இப்பொழுது எமக்கு ஒரு சந்தேகம்


முன்பு மீன்வளதுறை அமைச்சராக இருந்தார் கட்சிக்காரர்களுக்கு மீனாக கொடுத்தார்


இப்பொழுது நிதியமைச்சராக இருக்கின்றார், அப்படியானால் இனி..


சே.. சே.. கண்டதையும் யோசிக்க கூடாது










கூடங்குளத்தில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி நிறுத்தம்


உலகின் எல்லா அணுவுலைகளும் வருடத்தில் 10 நாள் நிறுத்தபட்டால், இந்த கூடன்குள அணுவுலை வருடத்தில் 10 நாள் மட்டும் இயங்குகின்றது


இப்படி அணைத்து போட்டு விளையாட அது ஒன்றும் சமையலறை அடுப்பு அல்ல, அது அணுவுலை , ஓழுங்காக இயங்கும் பட்சத்தில் இப்படி எல்லாம் அடிக்கடி நிறுத்தமுடியாது என்பது அணு அறிவியல்





ஆக கைவிடபட்ட கட்டிடங்களில் சிலர் பாய்விரித்து சரக்கடித்து , வாயில் துண்டு பீடியுடன் சீட்டாடுவது போல அங்கு என்னவோ ஆடிகொண்டிருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை.

அப்பல்லோ மருத்துவமனை நிகழ்வு மட்டுமல்ல, இந்த கூடன்குள அணுவுலையும் மகா மர்மமானது

இன்னும் என்னென்ன மர்மங்கள் தமிழகத்தில் இருக்கின்றதோ, மிக மிக மர்மமான மாநிலமாக தமிழகம் மாறிகொண்டிருகின்றது





 மராட்டிய உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவு, குஷ்பூ பிரச்சாரம் செய்தும் வெற்றி கிட்டவில்லை


பிரபலமானவர்களுக்கு சொந்த ஊரில் மரியாதை இருக்காது என்பதை பரமன் இயேசுகிறிஸ்து அன்றே சொல்லியிருக்கின்றார்.


ஆக குஷ்பூ வருத்தபட அவசியமே இல்லை..








தீபாவின் சகோதரர் தீபன் போர்க்கொடி





சசிகலா குடும்பத்திற்கு எதிராக தீபாவின் சகோதரர் தீபன் போர்க்கொடி, பன்னீர் செல்வம் அணிக்கு தாவுகின்றார்


முன்பே இன்னொரு தீபனும் சசிகலாவிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்,


இப்படி சொன்னால் புரியும், "முதல் மரியாதை" படத்தில் ஒருவர் புல்லாங்குழல் கையுமாக வருவார் அல்லவா? அவரே தான். ஜாணகி அம்மாள் உறவினர்





எம்ஜிஆர் அடக்க தினத்தில் ஜெயாவிற்கும் "முதல் மரியாதை" செய்தவர் அவர்தான். ஜெயலலிதாவினையே எம்ஜிஆர் உடலிருந்த வாகனத்தில் இருந்து கீழே தள்ளிய தீபன் அவர்

ஆக தீபா, தீபன், முதல் மரியாதை தீபன் என பல தீபங்கள் பன்னீர் அணிக்கு தாவுவதால் அது இனி புரட்சி "தீப" கட்சி என அழைக்கபட வாய்ப்புகள் உண்டு




 

 



 

அறிவுகொழுந்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி





Image may contain: text

 அமைச்சரே, அந்த வ.உ.சி, பகத்சிங் பெயர்களை எல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள்?


காந்தி சிறையில் இருந்ததற்கும், ஆட்டோ சங்கர் சிறையில் இருந்ததற்கும் வித்தியாசம் தெரியாதவெரல்லாம் தமிழக அமைச்சர் :)


பால்வளதுறை அமைச்சரிடம் அவர் பாணியில் கேட்டால்தான் புரியும்




அண்ணே... பாலும் கலயத்தில்தான் இருக்கும், கள்ளும் கலயத்தில்தான் இருக்கும்,


கலயத்தில் இருந்ததால் இரண்டும் ஒன்றாகுமா? ...










அதிமுகவில் தனி நபரோ, குடும்பத்தினரோ ஆதிக்கம் செலுத்தமாட்டார்கள் : டிடிவி தினகரன்


அன்று நான் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என ஜெயலலிதா சொன்னதை போலவே இதுவும் பெரும் காமெடி






என்னை உயர்த்திய இந்த சமூகத்துக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும்: விஷால்


நடிப்பதை நிறுத்தி சினிமாவினை விட்டு சென்றுவிடுங்கள், அதனை விட இந்த சமூகத்திற்கு நீங்கள் ஏதும் நல்லது செய்துவிட முடியாது.




















கமலஹாசனும் விடமாட்டார்....





Image may contain: 1 person, close-up


 கமலஹாசன் மீது இந்து அமைப்புக்களுக்கு என்றுமே பெரும் கோபம் உண்டு, காரணம் அவர் அடிக்கடி பெரியார் வழி


ஒரு தைரியம் மிக்க கலைஞனாக அவர் அடிக்கடி அவர்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அடிப்பார், இதனால் இவர் மீதான பார்ப்பன கும்பல் இவரை ஒரு கோடாரி காம்பாகவும், ஒரு குட்டிசாத்தானகவுமே கருதிற்று


முன்பு அடக்கிவைக்கபட்டிருந்த அவ்விஷயம் இன்று புகைய தொடங்குகின்றது விரைவில் பற்றி எரியலாம்





அந்த மனிதனுக்குத்தான் எத்தனை எதிர்ப்புகள்

அவர் பெரியார் வழியானதால் பிராமண எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கை இல்லாததால் எல்லா மதங்களிடமிருந்தும் எதிர்ப்பு

இன்று ஐ எஸ் தீவிரவாதிகள் மயிலாப்பூரில் இருக்கின்றான், மதுரையில் இருக்கின்றான் என செய்திகள் வருகின்றன. இதனை அவர் விஸ்வரூபத்தில் சொன்னால் பொங்கிவிட்டார்கள்

வஞ்சகத்தால் வீழ்த்தபடும் கதையினை படமாக எடுத்தால் கிருஷ்ணசாமிக்கு பொறுக்கவில்லை, அதில் துளியும் சாதி துவேஷமில்லை

உண்மையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது கி.சாமி கும்பல் அல்ல, முக்குலத்து சங்கங்கள்தான் பொங்கியிருக்கவேண்டும்.

ஏன் அதே கமலஹாசன் மீணவனாக, சப்பாணியாக நடிக்கும்பொழுது கி.சாமி எங்கிருந்தாரோ தெரியாது

இப்படித்தான் பலர் எங்கிருப்பார்கள் என்றே தெரியாது, ஆனால் கமலஹாசன் என்ன செய்கிறார் என பார்த்துகொண்டே இருப்பார்கள்

வாய்ப்பு கிடைத்துவிட்டால் கிளம்பிவிடுவார்கள்

இப்பொழுது சு.சாமி தொடங்கி வைக்க, இந்து அமைப்புகள் பிண்ணணி பாட தொடங்கிவிட்டன, அவரை வம்புக்கு இழுக்கின்றார்கள்

கமலஹாசனும் விடமாட்டார்.

எம் ஆர் ராதாவிற்கு பின் அவர் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு தைரியமாக தான் கொண்ட கொள்கையில் நின்று அதனை தன் படைப்புகளில் எல்லாம் கொடுத்து வருபவர்

இன்றைய தேதியில் பெரியாரின் பாதிப்புகளோடு ஒரு திரைகலைஞன் உண்டென்றால் அது கமலஹாசன் மட்டுமே என்பதுதான் இந்த ஆண்டிமடங்களுக்கு எரிச்சல், வேறு ஒன்றுமல்ல‌

இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அவர் அஞ்சப்போவதில்லை




 

 



 

மீண்டும் மீண்டும் மீத்தேன்...

இப்பொழுது மீண்டும் மீத்தேன் எடுக்க ஹைட்ரோ கார்பன் திட்டம் என அறிவித்திருப்பது மோடியின் அரசு


தற்போது தமிழக ஆட்சியிலிருப்பது அம்மா கனவுகண்ட, சசிகலா வழிகாட்ட அமைந்திருக்கும் பழனிச்சாமி அரசு


ஆனாலும் இதற்கு காரணம் கலைஞர், ஸ்டாலின் என சொல்பவன் சொல்லிகொண்டுதான் இருக்கின்றான்




மீத்தேன் கம்பெனிகளோடு இவர்களையும் விரட்டவேண்டும்..


ஒரு பயலும் சசிகலா வழிக்காட்டுதால் அமைந்திருக்க்கும் பழனிச்சாமி அரசு இந்த திட்டத்தை பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்கின்றது என கேட்கவில்லை


மாநில அரசை மீறி எப்படி மத்திய அரசு அனுமதித்திருக்கமுடியும்?


இன்றைய பழனிச்சாமியினை கேட்கமாட்டார்களாம், என்றோ இருந்த கலைஞரை சாடிகொண்டே இருப்பார்களாம்