Friday, February 17, 2017

டில்லி சூனியம்...

பில்லி சூனியம் கேள்விபட்டிருப்போம், "டில்லி சூனியம்" என ஒன்று உண்டு, அது அடிக்கடி தமிழக அரசியல்வாதிகளுக்கு வைக்கபடும்


சமீபத்தில் அது பன்னீர் செல்வம் என்பவருக்கு வைக்கபட்டிருக்கின்றது, இனி பழனிச்சாமி என்பவருக்கான டில்லி சூனிய பூஜைகள் இப்பொழுது ஆரம்பமாகியிருக்கும்


ஒன்று அவர்களிடம் அடிமையாவது அல்லது அலறி அடித்து ஓடுவது என்பதை தவிர டெல்லி சூனியத்திற்கு யாரும் தப்பமுடியாது.




ஆனானபட்ட காமராஜரையே குழம்ப வைத்த டில்லி சூனியம் அது


தன்னை ஹீரோ என நம்பிய எம்ஜிஆர் அந்த சூனியத்தால் கடைசிகாலத்தில் அலறியே செத்தார், ஜெயா என்பவராலும் அந்த சூனியத்தை முழுவதுமாக எதிர்கொள்ளமுடியவில்லை


அது அப்பல்லோ வரை தெரிந்தது.


கலைஞர் எனும் அசாத்திய பிறவி மட்டுமே அந்த டெல்லி சூனியத்தையே, சூனியமாக ஆக்கி இருந்தது. எந்த ஏவலும் அவரிடம் பலிக்கவில்லை.


அந்த டெல்லி சூனியத்தை தன் ஏவலுக்கு கட்டுபட்ட குட்டிசாத்தானாக அவர் மாற்றியிருந்தார்


மற்றபடி யாருக்கும் அது சாத்தியமில்லை


அந்த டில்லி சூனியத்தால் சிங்கம் அடித்து அடைக்கபட்டிருக்கின்றது, பன்னீர் தெரு தெருவாக அலைகின்றார்


இப்பொழுது பழனிசாமி என்பவருக்கும் விபூதி தெளித்திருப்பார்கள், விரைவில் தெரிய வரும்


பில்லி சூனியத்தை விட மகா பொல்லாதது "டெல்லி சூனியம்"



No comments:

Post a Comment