Wednesday, February 22, 2017

திமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது: வைகோ

திமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு பெரும் ஆதரவு பெருகுகின்றது, கட்சி சார்பின்றி தமிழகம் முழுக்க மக்கள் குவிகின்றார்கள்


அடுத்த கட்சியினரும், காங்கிரஸ் போன்ற பெரும் கட்சியினரும் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர்


பெரும் மக்கள் எழுச்சிபோல தோன்றுகின்றது




அதிமுக பெரும் அமைதி, அங்கு பேச யாருமில்லை என்பதால் குழம்பி தவித்து, இறுதியாக வைகோவிற்கு சிக்னல் காட்டியிருக்கின்றார்கள்


வைகோ என்ன பேசுகின்றார் தெரியுமா?


"அதிமுகவினை யாரும் அழிக்க நான் விடமாட்டேன்"


அதாவது நானே அதிமுகவினை அழித்துவிடுவேன், இன்னொருவர் எதற்கு என பேசிகொண்டிருக்கின்றார்,


ஏற்கனவே மதிமுக, தேமுதிக, காந்திய மக்கள் இயக்கம், விடுதலை புலிகள் போன்ற கட்சிகளை அடையாளம் தெரியாமல் அழித்த அனுபவம் அவருக்கு உண்டு என்பதால் வேலை சுலபம்.


அதுவும் திமுகவிற்கு பெருகும் ஆதரவினை கண்டு மனம் வெறுத்து, கள்குடித்த குரங்கு பெத்தடின் ஊசி போட்டுகொண்டதை போல மனிதர் அழிச்சாட்டியம் செய்கின்றார்







அண்ணா உருவாக்கிய திமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது: வைகோ


அண்ணா திமுக அழிவுபாதையினை நோக்கி செல்கிறது என்பதை எப்படி சாமார்த்தியமாக சொல்கின்றார் பார்த்தீர்களா?


அண்ணா உருவாக்கிய திமுக அப்படியே இருக்கின்றது, இருக்கும்


அதனை விட்டு பிரிந்த பிரிவினை கிளைகள்தான் நலிந்துகொண்டிருக்கின்றன, அதில் மதிமுக என்பது மண்ணோடு மண்ணாகிவிட்டது


அதிமுக என்பது அதலபாதாளத்தை நோக்கி செல்கின்றது


தமிழக நிலவரங்களை கவனித்து வரும் கழுதைக்கு கூட தெரியும், ஒரு கட்சியின் முன்னாள் தலைவர் குற்றவாளி, இந்நாள் தலைவர் சிறையில், ஆதரவு எம் எல் ஏக்கள் தொகுதிக்குள் செல்லமுடியா நிலை


இப்படி ஒரு எதிர்ப்பு தமிழக வரலாற்றில் எந்த கட்சிக்காவது இருந்ததா?


இந்நிலையில் அக்கட்சியினை விட்டுவிட்டு திமுக அழிகிறது என சொன்னால் இவர் எப்படிபட்ட முற்றியநிலையில் இருக்கவேண்டும்?


நாம் கண்ணில் காணும் நிகழ்வினையே இப்படி சொல்லும் இந்த நபர், நாம் காணாத ஈழம் பற்றி என்ன கதை எல்லாம் இட்டு கட்டி சொல்லியிருப்பார்?


அவர் ராசி நமக்கு தெரியும், இவர் யாரையெல்லாம் ஆதரித்தாரோ அவர்கள் எல்லோருக்கும் கெட்ட காலம், சிலர் பிரபாகரன் போல செத்தே போவார்கள்


இவர் யாரையெல்லாம் எதிர்த்து சாபமிடுகின்றாரோ அவர்கள் வாழ்வாங்கு வாழ்வார்கள்


இப்பொழுது கவனமாக இருக்கவேண்டியது யார்?


நிச்சயமாக சசிகலா தான்.






இந்த பெயரை மாற்றினால் ராசி, எண் கணிதபடி பெயரை மாற்றி வைத்துகொள்ளலாம் என்பவர்கள், அப்படி சிந்திப்பவர்கள் இனியாவது எச்சரிக்கையாக இருங்கள்


கோபால்சாமி என்ற பெயர் இருக்கும் வரை அவர் டெல்லிவரை கோலோச்சிகொண்டிருந்தார்


வை.கோ என்று பெயர் மாற்றிகொண்ட பின் கிட்டதட்ட தெருவோர மனநோயாளி போல மாறிவிட்டார்




பெயர்மாற்றம் இப்படிபட்ட சிக்கல்களையும், பின் விளைவுகளையும் கொண்டுவரலாம் என்பதை அவரின் நிலை மூலமாக அறிந்துகொள்ளலாம்


கோப்பால் சாமியாக தேருக்குள் இருந்தவர் வை.கோவாக சேறுக்குள் விழுந்து கிடக்கின்றார்







 

No comments:

Post a Comment