Wednesday, February 15, 2017

ஆக்ரோஷமாக குதித்துகொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்





தமிழக களபேரங்களில் மிக ஆக்ரோஷமாக குதித்துகொண்டிருப்பவர் மருத்துவர் ராமதாஸ்


திராவிட கட்சிகளே இப்படித்தான், திராட கட்சி எல்லாம் நீதிமன்றத்தில் நிற்கின்றன, இவை ஊழல் கட்சிகள், அழியவேண்டும், கிள்ளி எறியவேண்டும் என கடும் ஆர்ப்பாட்டம்


அன்னாரின் அருமை மகன் அன்புமணி மீதும் சில வழக்கு உண்டு, அந்த சீமந்தபுத்திரன் மத்திய அமைச்சராக இருந்தபொழுது சில கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய வழக்கு இன்னும் உண்டு என்பதை எல்லாம் நாம் மறந்துவிடவேண்டும் என டாக்டர் விரும்புகின்றார்





ஆகவே மருத்துவர் அய்யா, அந்த வழக்கினை நாங்கள் மறந்துவிடுகின்றோம் சரியா

மத்திய அரசுக்கும் அது மறந்திருக்கலாம், ஆனால் மருத்துவர் ஏதாவது மத்திய அரசுக்கு எதிராக சொன்னால் அது அவர்களுக்கு நினைவுக்கு வரும்

அப்படி ஏதாவது எதிராக சொல்லி, வழக்கினை நினைவுபடுத்த ராமதாஸ் என்ன முட்டாளா? ம்ஹூம் மத்திய அரசினை எதிர்க்கவே மாட்டார், நம்பலாம்.




 

 



 

No comments:

Post a Comment