Saturday, February 25, 2017

ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம்....





ஜெயா மரண சிக்கல், அப்பல்லோ மர்மம் இவற்றை பற்றி பேசிகொண்டிருப்பவர்களுக்கு பெரும் வாய்ப்பினை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்திருக்கின்றார்


பவுலர் பந்து வீசும்பொழுது இதோ ஸ்டம்ப் என பேட்ஸ்மேன் ஒதுங்கிகொண்டால் எப்படி இருக்கும்? அப்படி பெரும் வாய்ப்ப்பு கொடுத்திருக்கின்றார்.


ஜெயா விவகாரத்தில் இன்றுவரை இருக்கும் மர்மம் அவர் அப்பல்லோவில் இருந்தபொழுது ஏன் படமோ, வீடியோவோ இல்லை என்பது





அதுவும் ஜெயாவினை யாரும் சந்திக்கவில்லை என்பதும் உண்மை, ஆனானபட்ட ஆளுநர் கூட தள்ளி இருந்து கண்ணாடி துவாரம் வழியாக ஜெயாவினை பார்த்தார் என்பதுதான் இதுவரை உள்ள செய்திகள்.

அப்பல்லோவும் எங்களிடம் சிசிடிவி இல்லை, ஸ்கேன், எக்ஸ்ரே தவிர எந்த கருவியும் எங்களிடம் இல்லை என சொல்லியிருக்கின்றது, லண்டன் டாக்டர் பீலேயும் லண்டன் மகாராணி படம் முன் சூடமேற்றி சத்தியம் செய்யாத குறையாக அதனையே சொன்னார்

இப்படியாக அந்த சர்ச்சைகளில் படமும், வீடியோவும் கிடையவே கிடையாது என அவர்கள் சத்தியம் செய்து சாதித்துகொண்டிருக்க, திண்டுக்கல் சீனிவாசன் அதிரடியாக சறுக்கியிருக்கின்றார்

அதாவது இவர் ஜெயாவினை அனுதினமும் பார்த்தாராம். இவர்களிடம் ஜெயா நிறைய விவாதித்தாராம், அதுவும் ஒரு நாளைக்கு 10 தடவை சந்தித்தாராம்.

அதனை விட பெரும் சர்ச்சை , அதனை எல்லாம் போட்டோ, வீடியோ எல்லாமும் எடுக்கபட்டிருக்கின்றதாம்

எப்படி வாய்ப்பினை கொடுத்திருக்கின்றார் பார்த்தீர்களா?

நல்ல எதிர்கட்சி தலைவர்களும், வாய்ப்பு கிடைத்தால் அடித்து ஆடும் எதிர்கட்சிகள் இந்நிலையில் அடித்து ஆடலாம்

பெரும் பரபரப்பான விஷயமாக இதனை கொண்டு வரலாம்

ஒரு அமைச்சர் இப்படி பேசுகின்றார், அப்பல்லோ அப்படி பேசுகின்றது என சரசரவென அடித்து நொறுக்கலாம்

கலைஞர் போன்றோர் இருந்தால் அப்படி செய்வார்கள்.

இப்போதுள்ள எதிர்கட்சிகளுக்கு இப்படி ஆடும் எண்ணமெல்லாம் இல்லை, இவர்கள் வேறு மாதிரி

பேட்ஸ்மேன் ஸ்டம்பை காட்டி நின்றாலும், நான் புறவாசல் வழியாக விக்கெட் எடுக்கமாட்டேன் என அம்பையரிடம் சொல்லிவிட்டு, பேட்ஸ்மேனை ஸ்டெம்பை மறைக்க சொல்வார்கள்

பின் எப்படி ஆட்டம் சுவாரஸ்யமாகும்?




 

 



 

No comments:

Post a Comment