Tuesday, February 21, 2017

ஜக்கிக்கு வழிகாட்டியதே தினகரன் குடும்பம்தான்





கோவை மலைபகுதியில் ஜெகதீஷ் எனும் ஜக்கி சாமியார் மட்டும் அட்டகாசம் செய்ததாக நான் சொல்லவில்லை,


அவரை இந்துமத சாமியாராக நாம் எல்லாம் எண்ணவே இல்லை, அவரெல்லாம் இந்துமத சாமியார் என்றால் விவேகானந்தர் எல்லாம் யார்?


அம்மலையினை அபகரித்துகொண்டிருப்பதில் ஜக்கிக்கு சற்றும் குறைவில்லாதது தினகரன் குடும்பத்தின் போதனை





ஜக்கிக்கு வழிகாட்டியதே தினகரன் குடும்பம்தான்

பொறியல் கல்லூரியும், பல்கலைகழகமும் நடத்தினால்தான் இயேசுவின் அருள் பெற்றவர்கள் என்பதை நிரூபிக்க அவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல‌

இயேசு கிறிஸ்துவினை லண்டன் வெள்ளைகாரர்களுக்கும், அமெரிக்க கிறிஸ்தவர்களுக்கும் அறிவிக்கும் அளவிற்கு கிறிஸ்து அவர்களை அழைத்திருக்கின்றார்

அப்படி தாங்கள் கிறிஸ்துவின் போதகர்கள் என உலகிற்கு சொல்ல அவர்களுக்கு அந்த கல்லூரிகளை தவிர என்ன இருக்கின்றது?

அதுவும் தேர்தல் என்றவுடன் இந்த தினகரன் கும்பல் என்ன செய்யும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

மோடிக்காக சால்வை போட்டு ஜெபித்து அவரை கிறிஸ்துவின் அருளால் பிரதமர் ஆக்கியவர் பால் தினகரன்

அந்த மோடி அருளால்தான் இன்றும் காருண்யா காப்பாற்றபட்டுகொண்டிருக்கின்றது

காருண்யாவினை கிறிஸ்துவிற்காக காப்பாற்றும் மோடி, இப்பொழுது சிவனுக்காக ஜக்கி சாமியாரை காப்பாற்ற வந்துவிட்டார்

ஆக மோடி என்பவர் இந்துத்வா வெறியர் அல்ல, மாறாக மத சமத்துவம் மிக்கவர்

அவருக்கு ஜக்கியும் ஒன்று, பால் தினகரனும் ஒன்று

அப்படியே அம்பானியும் அதானியும் ஒன்று, பன்னீரும் ஒன்று, பழனிச்சாமியும் ஒன்று

போதுமா?




 

 



 

No comments:

Post a Comment