Saturday, February 25, 2017

நடராஜன் சுய உருவம்.





சசிகலா இருவார காலமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிகொண்டிருந்தார், அவரின் உருவம் பகிரங்கமாக தெரியதொடங்கியதற்குள் அவரை சிறையில் அடைத்துவிட்டார்கள்


இல்லைஎன்றால் இன்னும் பல சுவாரஸ்யங்கள் அவர் முச்சத்தியம் போல வந்திருக்கும்


இப்பொழுது நடராஜன் முறை வந்திருக்கின்றது





பதற்றத்தில் மனிதர் பொங்கி தன் சுய உருவத்தை காட்ட ஆரம்பித்துவிட்டார், நிறைய பேசுகின்றார்

நன்றாக தெரிகின்றது, அவர் பதற்றத்தில் இருக்கின்றார். பெரும் சொத்து தன் கையினை விட்டு போகும் நிலையில் ஒரு மனிதன் எப்படி பதறுவானோ அப்படி ஒரு பதற்றம் அவரிடம் வந்துவிட்டது

நிறைய பேசுகின்றார்., அதில் தன்னையறியாமல் சிக்குகின்றார்

"ஜெயா அரசிலை விட்டு ஒதுங்குகின்றேன் என எழுதிய கடித்தத்தை கைபற்றி, அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது தான்" என பேசியிருக்கின்றார்

அதாவது ஜெயலலிதா ஒரு கட்டத்தில் அரசியலில் இருந்து விலகி எழுதிய கடித்ததை , ஜெயாவிற்கு தெரியாமலே இவர் படித்து , ஜெயாவினை வலிய அரசியலில் தள்ளியிருக்கின்றார்

இதனால் தமிழகம் என்ன உணர்கின்றது

"அடேய்.. தமிழகத்தை கெடுத்த படுபாவி நீதானா? நீ தான் இவளவு சிக்கலுக்கும் காரணமா?" என புருவத்தினை உயர்த்துகின்றது

இன்னும் ஜெயாவிற்கு உதவினேன் என சொல்லி எத்தனை ரகசியங்களை, அதாவது தமிழகத்திற்கு தான் செய்த துரோகங்களை நடராஜன் சொல்லபோகின்றாரோ தெரியாது

விரைவில் சொல்லலாம்

ஆனால் அதற்குள் சொகுசுகார் உட்பட்ட வழக்கில் இவரும் உள்ளே சென்று சசிகலா போல் அமைதியாகிவிட கூடாதே?




 

 



 

No comments:

Post a Comment