Thursday, February 23, 2017

கமலஹாசனும் விடமாட்டார்....





Image may contain: 1 person, close-up


 கமலஹாசன் மீது இந்து அமைப்புக்களுக்கு என்றுமே பெரும் கோபம் உண்டு, காரணம் அவர் அடிக்கடி பெரியார் வழி


ஒரு தைரியம் மிக்க கலைஞனாக அவர் அடிக்கடி அவர்களை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் அடிப்பார், இதனால் இவர் மீதான பார்ப்பன கும்பல் இவரை ஒரு கோடாரி காம்பாகவும், ஒரு குட்டிசாத்தானகவுமே கருதிற்று


முன்பு அடக்கிவைக்கபட்டிருந்த அவ்விஷயம் இன்று புகைய தொடங்குகின்றது விரைவில் பற்றி எரியலாம்





அந்த மனிதனுக்குத்தான் எத்தனை எதிர்ப்புகள்

அவர் பெரியார் வழியானதால் பிராமண எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கை இல்லாததால் எல்லா மதங்களிடமிருந்தும் எதிர்ப்பு

இன்று ஐ எஸ் தீவிரவாதிகள் மயிலாப்பூரில் இருக்கின்றான், மதுரையில் இருக்கின்றான் என செய்திகள் வருகின்றன. இதனை அவர் விஸ்வரூபத்தில் சொன்னால் பொங்கிவிட்டார்கள்

வஞ்சகத்தால் வீழ்த்தபடும் கதையினை படமாக எடுத்தால் கிருஷ்ணசாமிக்கு பொறுக்கவில்லை, அதில் துளியும் சாதி துவேஷமில்லை

உண்மையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டியது கி.சாமி கும்பல் அல்ல, முக்குலத்து சங்கங்கள்தான் பொங்கியிருக்கவேண்டும்.

ஏன் அதே கமலஹாசன் மீணவனாக, சப்பாணியாக நடிக்கும்பொழுது கி.சாமி எங்கிருந்தாரோ தெரியாது

இப்படித்தான் பலர் எங்கிருப்பார்கள் என்றே தெரியாது, ஆனால் கமலஹாசன் என்ன செய்கிறார் என பார்த்துகொண்டே இருப்பார்கள்

வாய்ப்பு கிடைத்துவிட்டால் கிளம்பிவிடுவார்கள்

இப்பொழுது சு.சாமி தொடங்கி வைக்க, இந்து அமைப்புகள் பிண்ணணி பாட தொடங்கிவிட்டன, அவரை வம்புக்கு இழுக்கின்றார்கள்

கமலஹாசனும் விடமாட்டார்.

எம் ஆர் ராதாவிற்கு பின் அவர் அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவு தைரியமாக தான் கொண்ட கொள்கையில் நின்று அதனை தன் படைப்புகளில் எல்லாம் கொடுத்து வருபவர்

இன்றைய தேதியில் பெரியாரின் பாதிப்புகளோடு ஒரு திரைகலைஞன் உண்டென்றால் அது கமலஹாசன் மட்டுமே என்பதுதான் இந்த ஆண்டிமடங்களுக்கு எரிச்சல், வேறு ஒன்றுமல்ல‌

இந்த சலசலப்புகளுக்கு எல்லாம் அவர் அஞ்சப்போவதில்லை




 

 



 

No comments:

Post a Comment