Saturday, February 25, 2017

ஆதி யோகி சிவன் சிலை திறப்பு

https://youtu.be/6l6AoBQ2_20



ஜக்கி ஆசிரமத்தில் சிலைதிறப்புடன் சிவராத்திரி : பாலிவுட் நடிகைகளுடன் முதல்வர் மோடி, கிரண்பேடி பங்கேற்பு


தமிழகம் அணுவுலை முதல் ஹைட்ரோகார்பன் பிரச்சினை வரை பாதிக்கபட்டிருக்கும் நிலையில் ஒரு வார்த்தை கூட பேசாத பிரதமர் , எந்த அரசியல் நெருக்கடியிலும் தமிழக பக்கம் வராத பிரதமர் எதற்கு வந்திருக்கின்றார் பார்த்தீர்களா?


விவேகானந்தர் பாறை என அவர்கள் கால் வைத்தபொழுதே தமிழகம் காத்த அமைதி இன்று இந்நிலைக்கு இழுத்து செல்கின்றது


ஆயிரம் பொறுப்புகளை கவனிக்க வேண்டிய பிரதமர் ஒரு ஆசிரமத்திற்கு வருவது என்பதும், பாண்டிச்சேரி கவர்ணர் கிரண்பேடி அங்கு ஆட்டம்போடுவதும் எதனை காட்டுகின்றது?


இந்நாடு கொஞ்சம் கொஞ்சமாக மதவாத சக்திகளின் பிடியில் சிக்குகின்றது, ஒரு சர்ச்சை சாமியாரே பாரத பிரதமரை தன் இடத்திற்கு வரவைக்க முடிகின்றது.


பதஞ்சலி குழுமம் பாரத பிரதமரை யோகாவிற்கான மார்கெட்டிங் மேனேஜராக நியத்த்து உலகெல்லாம் மார்கெட்டிங் செய்யு அளவிற்கு நிலை மோசம்..


இந்த நூற்றாண்டின் பெரும் விஞ்ஞானிகளும், பெரும் அறிவியல் கண்டுபிடித்தவன் எவனும் யோகா செய்ததாக எங்கும் காணமுடியாது


பெரும் வெற்றிகளை குவித்த நெப்போலியன் போன்றவர்கள், கிளைவ் போன்றவர்கள், மோசே தயான் போன்றவர்கள் யோகாவினால் சாதித்ததாக எங்கும் இல்லை


ஆனால் இந்த கும்பல் யோகா, யோகா என ஒப்பாரி வைத்துகொண்டே இருக்கின்றது


விரைவில் ஈரான், ஆப்கன் இன்னும் பல நாடுகளை மதவாதிகள் ஆள்வதினை போல இந்தியாவின் நிலையும் மாறலாம்


மாறினால் என்னாகும்? நாசமாய் போகும். நேற்று கூட 30 பேரை பலிகொடுத்த பாகிஸ்தானே சாட்சி


புத்த மதத்தால் தன் வாழ்விழந்த பர்மாவும், இலங்கையும் இன்னும் ஏராள நாடுகளும் சாட்சி


ஐரோப்பாவினை ஆட்டிவைத்த போப் எனும் பெரும் மத சக்தியினை ஐரோப்பிய நாடுகள் தூக்கி எறிந்தபின்புதான் அவை பெரும் வளர்ச்சி கண்டன‌


திருச்சபை, மர்ம சாமியார் எல்லோரையும் அடித்து விரட்டிதான் ரஷ்யா எழும்பியது. புத்த மதத்தினை தூக்கி எறிந்தபின்புதான் மாவோவால் சீனாவினை உயர்த்த முடிந்தது


அப்படி மத கட்டுப்பாட்டை உதறிய நாடுகள் உருப்படும் என்பதும், அதில் சிக்கிய நாடுகள் நாசமாய் போகும் என்பதும் வரலாறு காட்டிய உதாரணங்கள்


இந்தியா அந்நிலையில் சிக்கிவிட கூடாது என்பதுதான் அதன் தேசப்பற்றாளர்களின் நம்பிக்கை


பிரதமரின் நேற்றைய பெரும் தவறு இனி பெரும் சிக்கல்களை தோற்றுவிக்கலாம்


மண் திருடன், கல் திருடன் இன்னும் பல கொள்ளையர்களுக்கு இனி புத்தி இப்படி போகலாம்


ஓஓ..எவ்வளவும் சுரண்டிவிட்டு சிவனுக்கோ கிருஷ்ணனுக்கோ ஒரு சிலைவைத்துவிட்டால் போதும், பிரதமரே திறக்க வருவார், கவர்ணர் கதவு திறப்பார்


இவ்வளவுதானா இந்தியா?


இனி எல்லா இயற்கை கொள்ளையர்கள் ஏரியாவிலும் இனி ஏதாவது ஒரு இந்து தெய்வத்தின் சிலை இருக்கலாம், அவர்களோடு பிரதமரும் கவர்ணரும் கைதட்டலாம்


ஏதாவது ஒரு கவர்ணர் குத்தாட்டம் போடுவார்கள், சில நடிகைகள் ஆடுவார்கள், முதல்வர்கள் விசிலடிப்பார்கள்


விரைவில் இம்மாதிரி கூத்துக்கள் மதுரை கிரானைட் குவாரிகள், திருச்செந்தூர் கடலோரங்களில் இடம்பெறலாம்


இனி இந்து தெய்வங்களை கொள்ளையர்கள் கட்டிவைக்கும் கோயில்களில் வழிபடும் ஒரு விபரீத நிலை இந்துக்களுக்கு ஏற்பட்டுகொண்டிருப்பதுதான் வேதனை...


அரசியலும், மதமும் ஒரு காலமும் கலக்க கூடாது, கலந்துவிட்டால் அது அழிவினை தவிர ஏதும் கொடுக்காது என்பதுதான் உலக சரித்திரம் சொல்லிகொண்டிருக்கின்றட்து


அந்த சரித்திரத்தை படித்த பின்னும் இந்திய தரித்திரம் தொடர‌வேண்டும் என சிலர் கிளம்புவதுதான் வேதனை..


மிக புனிதமான இந்துமதத்தை, அதன் அருமைகளை எல்லாம் ஜக்கி போன்ற சாமியாரா அரசியல்வாதிகளோடு விளக்கவேண்டும்?


பால் தினகரன் எல்லாம் கிறிஸ்துவினை போதிப்பதை போல இதுவும் மிக மிக கொடுமையானது









Image may contain: 1 person, standing





 










 







No comments:

Post a Comment