நடிகை பாவனா சம்பவம், கடும் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளேன்: விஷால் பேட்டி
தமிழ்நாட்டில் நந்தினி போன்றோர் கொல்லபட்டாலோ, சிறுமி ஹாசினி போன்றோர் கொல்லபட்டாலோ வராத கவலை இவருக்கு மலையாள நடிகை மீது மட்டும் பொத்துகொண்டு வருகின்றது
கேரள நடிகைகள் மட்டும்தான் பெண்களா? அவர்களுக்கு மட்டும்தான் மானம் உண்டா? அதற்கு பங்கம் வந்தால் மட்டும் பொங்குவீர்களா விஷால்?
தமிழகத்தை உலுக்கிய சம்பவங்கள் இப்படி நடக்கும்பொழுதெல்லாம் அன்னார் பிசியாக டூயட்பாடிகொண்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது
வரவர இவர் அழிச்சாட்டியம் எல்லை தாண்டி கேரளம் வரை நீண்டிருக்கின்றது
விரைவில் சிம்பு இவருக்கு தக்க பதிலடி கொடுப்பார் என தமிழகம் எதிர்பார்க்கின்றது
மிஸ்டர் சிம்பு, வேர் ஆர் யூ?
முதல்வருக்கு கடிதம் எழுதினாராம் விஷால், கொஞ்சமாவது சீரியஸ்னஸ் இருக்கின்றதா?
அப்படி கடிதம் எழுதவேண்டுமென்றால் பெங்களூர் சிறைக்கு எழுதவேண்டும், குறைந்தபட்சம் நடராஜனுக்கோ, திவாகரனுக்கோ எழுதவேண்டும்
அதனை விட்டு இப்படியா பழனிச்சாமிக்கு எழுதுவார்? பாவம் அவரே கன்பியூஸ் ஆகி ஒரு மாதிரி அலைகின்றார்.
No comments:
Post a Comment