Sunday, February 26, 2017

டெல்லியில் எடப்பாடி , சென்னையில் சிஆர் சரஸ்வதி இன்னும் பிற...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி புறப்பட்டார். 3 நாள் பயணமாக டெல்லிக்கு செல்கிறார்.


காத்து கிடந்து கண்ணீர் விட ஒருநாள், தினகரன் கும்பல் எடுக்கும் வகுப்பில் கைகட்டி பாடம் கற்க மறுநாள்,


பிரதமரை சந்திக்க மூன்றாம் நாள்




இப்படி 3 நாட்கள் கண்டிப்பாக தேவை..






டெல்லிக்கு செல்லும் முதல்வர் பழனிசாமிக்கு டெல்லி சூனியம் பலிக்காமல் இருக்க பழனியாண்டவர் உதவட்டும்


எல்லா அடிமைகளும் நல்ல அடிமைகள்தான் தமிழகத்திலே, அவர் முழுக்க முழுக்க கெட்டவர் ஆவது டெல்லி சூனியத்திலே


பழனிச்சாமிக்கு எப்படி விபூதி அடிக்கபோகின்றார்கள் என்பது விரைவில் தெரியும்




ஆனால் நிச்சயம் அடிப்பார்கள், இவர் வேறு 3 நாள் இருக்கபோகின்றாராம்


எப்படி எல்லாம் குங்கும குளியலும், வேப்பிலையும் அடிக்க போகின்றார்களோ?







 ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்


யாராவது அந்த 122 அடிமைகள் பற்றி இந்த ஐ.நா கூட்டத்தில் குரலெழுப்ப கூடாதா?

இந்த நூற்றாண்டின் ஆகபெரும் மனித உரிமை மீறல் அவர்கள் மீதுதான் நிகழ்த்தபட்டது..


எம் எல் ஏக்களாக இருந்தும் அவர்கள் எருமை மாட்டினை போல நடத்தபட்டதை குறித்து யார் ஐ.நாவில் பேசபோகின்றார்கள்?





ஜெயலலிதாவின் சொத்துக்கள் எல்லாம் அவர் சினிமாவில் சம்பாதித்தது : சி.ஆர் சரஸ்வதி


அடேய், சினிமாவில் அப்படி சம்பாதிக்க முடியுமென்றால் மனோரமா அம்பானி ஆகியிருக்கமாட்டாரா?


சினிமாவில் இவ்வளவு சம்பாதிக்க முடியுமென்றால் பில்கேட்ஸ் முதல் வாரன் பெப்பெட் வரை மேக் அப் போட்டுகொண்டு குத்தாட்டம் ஆட வந்திருக்கமாட்டார்களா?




அவ்வளவு ஏன்? குஷ்பூ உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆகியிருக்க மாட்டாரா?


டெல்லி நீதிபதிகள் தலையில் அடித்து தீர்ப்பு சொன்னபின்னும் அம்மணிக்கு எவ்வளவு பேச்சு?


நீதிமன்ற அவமதிப்பு என்பது இதுவே தான்..






 நாட்டுக்கு நிறைய விஞ்ஞானிகள் தேவை - மோடி


அதனால்தான் நமது பிரதமர் பாபா ராம்தேவ், ஜக்கி சாமியார் ஆசிரமத்தில் சென்று விஞ்ஞானிகளை தேடுகின்றார்

விஞ்ஞானிகள் அங்குதான் உருவாகின்றார்கள் என்பது அவர் நம்பிக்கை




 


No comments:

Post a Comment