Thursday, February 23, 2017

வரலாறு இப்படித்தான் எழுதுகின்றது ...





உலகம் முழுக்க சேர்ந்து போட்டு அடித்தவர்களில் முதலிடம் ஹிட்லருக்கு, அந்த கொடுங்கோலனை உலகமே சேர்ந்து தலையில் போட்டது


ஆனால் ஹிட்லருக்காவது ஜப்பானும், இத்தாலியின் முசோலியும் ஆதரவு கொடுத்தனர், அவருக்காக பேசவாவது ஆளிருந்தது, ஆனாலும் ஹிட்லரை ஆதரித்த பாவத்திற்காக அவர்களும் அடிவாங்கினர், நமது நேதாஜியும் மர்மமானர்


அதன் பின் உலகம் திரண்டது பின்லேடனை ஒழிக்க, அதில் கூட சீனா போன்ற நாடுகள் , ஈரான் போன்ற நாடுகள் எல்லாம் பெரும் ஆர்வம் காட்டவில்லை. லேடனுக்கு தாலிபன்கள் ஆதராவது இருந்தது





அதாவது ஹிட்லருக்கும், பின்லேடனுக்கும் சிலபேராவது ஆதரவளித்தார்கள்

ஆனால் உலகம் மொத்தமும் சேர்ந்து இன்று அடித்து நொறுக்குவது யாரையென்றால் ஐ.எஸ் இயக்கத்தை, அந்த கொடூர இயக்கத்தை போட்டு சாத்துகின்றார்கள், அழித்தே தீரவேண்டும் என்ற வெறியில் மொத்த உலகமும் சேர்ந்திருக்கின்றது

ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவு என ஒரு நாட்டை, ஒரு இயக்கத்தை கண்டீருப்பீர்களா? இல்லை

அப்படி அனாதையாக உலகத்தை பகைத்து அழிந்துகொண்டிருக்கின்றது

சரி ஐஎஸ் போலவே கொஞ்ச வருடம் முன்பு உலகம் சேர்ந்து அழித்த தீவிரவாத இயக்கம் எது?

விடுதலை புலிகள்

இன்று எப்படி ஐஎஸ் இயக்கத்தினை ஒரு ஆதரவும் கொடுக்காமல் மொத்த உலகமும் போட்டு அடிக்கின்றதோ, அன்று அப்படித்தான் மொத்த உலகமும் புலிகளை போட்டு அடித்தது

அதாவது உலகம் ஐ எஸ் இயக்கத்தையும், புலிகளையும் ஒரே இடத்தில்தான் வைத்திருக்கின்றது

வரலாறு இப்படித்தான் எழுதுகின்றது

மொத்த உலகமும் சேர்ந்து அழித்த கொடூர இயக்கம் ஐ எஸும், விடுதலை புலிகளும், இவர்கள் இருவரும் அழிக்கபடும் பொழுது இவர்களுக்கு ஆதரவாக ஒரு நாடும் குரலெழுப்பவில்லை, மாறாக எல்லா நாடுகளும் அழிக்க உதவிகளை கொடுத்தன‌

உலகம் இப்படி எழுத, சிலர் கண்களை மூடிகொண்டு சொல்லிகொண்டே இருப்பான், அல்ல அல்ல, அது கலைஞர் கருணாநிதி,சோனியா

ஐ எஸ் இயக்கத்தையும் இந்த இருவர்தான் அழித்துகொண்டிருக்கின்றார்களா?




 

 



 

No comments:

Post a Comment