Friday, February 17, 2017

ஏய் கன்னடமே, சசிகலாவினை நீயே வைத்து அழு...

தமிழக சிக்கல் உச்சமாக, இங்கு ஆளும் கட்சி பன்னீர் மீது கல்லெறிதல், எம் எல் ஏக்களை கடத்துதல், அவர்களுக்கு கோடிகளில் செட்டில் செய்தல் என கடும் பரபரப்பாக இருக்கின்றது


இவர்களிடமிருந்து தங்கள் எம் எல் ஏக்களை காத்துகொள்ளும் விஷயத்தில் திமுக இருக்கின்றது


ஊடகங்களுக்க்கு இப்பொழுது பன்னீரா, பழனிச்சாமியா என்பதே வியாபாரம்




இந்த குழப்பத்தில் மிக அழகாக காவேரியின் குறுக்கே சத்தமே இன்றி அணைகட்டுகின்றது கன்னடம்


தமிழக அரசு மல்லுகட்டி நீதிமன்ற கதவுகளை தட்டவேண்டிய நேரம், காரணம் முன்பு நமக்கு ஆதரவாகத்தான் நிகழ்வுகள் இருந்தன‌


ஆக காவேரியினை காக்க வேண்டிய தமிழக முதல்வர் தன்னை காக்க போராடுகின்றார், நிழல் முதல்வர் சசிகலா சொர்னாக்கா பணியில் பெங்களூர் சிறையில் அமர்ந்து அவன விடாதா, இவன முதுகுல குத்து, அவன அங்கே அடை, இவனை இங்கே போடு என உத்தரவுகளை பிறப்பித்துகொண்டிருக்கின்றார்


ஒரு எதிர்ப்புமில்லா நிலையில் காவேரி முழுமையாக சிறைபிடிக்கபடுகின்றது


கன்னடம் மிக திறமையான மாநிலம் போல,


காவேரியினை பிடித்து வைத்து, இப்பொழுது அதனை கேட்க வேண்டிய ஆளும் கட்சியின் ஆணிவேரான சசிகலாவினையும் தன் மாநிலத்தில் அடைத்தே வைத்துவிட்டது


அது என்ன திறமை? நம்மில் ஆயிரம் வோட்டைகளை வைத்துகொண்டு கன்னடனை சொல்வதில் என்ன உண்டு


ஆக வோட்டுக்காக தமிழன் தன்னை விற்றதில் காவேரியினையும் சேர்த்து விற்றிருக்கின்றான், காவேரி தமிழர்களாலே விற்கபட்டிருக்கின்றது


இங்கே அரசியல் குழப்பம், அங்கே அணைகட்டும் மும்முரம்


காவேரியினை மீட்க மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அதிமுகவினரில் பலர் எம் எல் ஏக்களை கடத்துவதில் பிசி


மீதி பேர்?


காவேரி மண்ணை கடத்துவதில் பிசி, எந்த அரசியல் குழப்பமும் அதனை தடுக்காது


கன்னடத்திலே நடந்துகொள் காவேரி, இந்த பைத்தியகார தமிழநாட்டிற்கு நீ ஏன் வரவேண்டும்


காவேரியினை கொடுக்காத கன்னடம் இனி சசிகலாவினை கொடுத்தாலும் தமிழர்கள் ஏற்கமாட்டோம்


ஏய் கன்னடமே, சசிகலாவினை நீயே வைத்து அழு...



No comments:

Post a Comment