Sunday, February 19, 2017

ஏம்பா கலைஞர் எதிரிகளா.....





ஏம்பா கலைஞர் எதிரிகளா,


அவரிடம் 1 லட்சத்தி 75 ஆயிரம் கோடி இருந்தால் ஆளுக்கு 1000 கோடி கொடுத்தாவது 50 எம் எல் ஏக்களை வாங்கி, தமிழக ஆட்சியினை அமைத்திருக்கமாட்டாரா?


இப்படி ஸ்டாலினினை சட்டசபையில் அடிவாங்க விடுவாரா?





ஆக பெரும் தொகை யார் கையில் இருக்கின்றது என்பதை அப்பல்லோ போலி டாக்டர் பில்லினையும், கூவத்தூர் ரிசார்ட் செலவினையும், எம் எல் ஏக்கள் செட்டில் செய்த செலவினையும் பார்த்தாலே தமிழகத்திற்கு தெரியும்

ஆக எல்லாவற்றையும் விலைகொடுத்து வாங்கும் அளவிற்கு பணம் இருப்பவர்களை விட்டுவிடுவார்களாம், அவர்களை பற்றி பேசமாட்டார்களாம்

ஆனால் அவர்களின் பணபலத்தினை எதிர் கொள்ளமுடியாமல் சட்டபேரவையில் அடிவாங்கி நிற்கும் திமுகவிடம்தான் 1 லட்சத்தி 75 ஆயிரம் கோடி இருக்கின்றது என சொல்லிகொண்டே இருப்பார்கள்

ஏம்பா, அப்படி இருந்தால் ஆளுக்கு 10 ஆயிரம் கோடி கொடுத்தாவது 10 பேரை இழுத்திருக்கமுடியாதா?

அங்கு இருப்பவன் எல்லாம் எதற்காக இருக்கின்றான் என உலகிற்கு தெரியாதா?

இனியாவது கலைஞரிடம் அவ்வளவு இருக்கின்றது, ஆசியாவின் முக்கால்வாசி அவரிடம் இருக்கின்றது, இந்திய பெருங்கடலும் அவரிடம்தான் இருக்கின்றது என சொல்வதை நிறுத்த கூடாதா?




 

 



 

No comments:

Post a Comment