Saturday, February 18, 2017

இன்னும் 2 மணிநேரத்தில் அதுவும் தெரிந்துவிடும்..

இன்று நடைபெற போவது என்னவென்றால் குறைந்தபட்சம் 117 அதிமுகவினைரை மட்டுமாவது சசிகலா கும்பலால் கட்டுபடுத்த முடியுமா? முடியாதா எனும் போட்டியே அன்றி வேறல்ல‌

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு தோற்கும் பட்சத்தில் அவர்களின் முடிவு உடனே தொடங்கும்

ஒருவேளை வெற்றிபெற்றால் அவர்களின் முடிவு கொஞ்ச நாளைக்கு தள்ளிபோடப்படும் அவ்வளவுதான்


வெற்றி பெற்றாலும் 4 ஆண்டுகள் ஆட்சி என்பதெல்லாம் சாத்தியமில்லை, வழுக்கு தரையில் சுற்றிலும் எல்லோரும் உருட்டு கட்டைகளால் தாக்கும் நிலையில் கையில் எண்ணெய் குடத்தினை 4 வருடம் சுமந்து நடப்பதெல்லாம் சாத்தியமில்லை

ஆக அவர்கள் வென்றால் கொஞ்ச நாள் தாங்குவார்கள், மற்றபடி சட்டமன்ற‌ தேர்தல் எல்லாம் வந்தால் ரிசார்ட்டிலா நடத்தமுடியும்? தமிழகத்தில் பொதுமக்களிடம்தான் நடத்தமுடியும்

அதில் இந்த கும்பல் 1 வோட்டு வாங்கும்? ஆனானபட்ட அவர்களின் குலசாமி ராமசந்திரன் எழுந்து வந்தாலும் இனி அது சாத்தியமில்லை

ரஷ்யாவில் அன்று ஜார் அரச குடும்பத்தாருக்கும் மர்ம சாமியார் ரஸ்புடினுக்கும் எதிராக அம்மக்கள் மனதிற்குள் பொங்கியது போல தமிழக மக்களும் கோபத்தில் இருக்கின்றார்கள்

ரஷ்ய புரட்சி உலகம் அறிந்தது

அப்படியான நிலைக்கு தமிழகமும் சென்றுகொண்டிருக்கின்றது, சசிகலாவிற்கு எவ்வளவு ஆதரவு என்பது பெங்களுர் சிறை வாசலை பார்த்தாலே புரியும், ஒரு காக்கையினை கூட காணவில்லை

அதனால் சொல்லலாம், இன்று நடக்க இருப்பது என்னவென்றால், சசிகலா கும்பல் உடனே அழியுமா? இல்லை அது அழிய அவகாசம் கிடைக்குமா? எனும் வாக்கெடுப்பே அன்றி வேறல்ல..

இன்னும் 2 மணிநேரத்தில் அதுவும் தெரிந்துவிடும்..

No comments:

Post a Comment