Tuesday, February 21, 2017

தினகரனிடம் சசிகலா கோபம் : செய்தி

"என்னைப்பார்க்க முதல்வர் வரமாட்டாரா?, அப்படி என்ன வேலை இருக்கின்றது?", தன்னை சிறையில் சந்திக்க வந்த‌ தினகரனிடம் சசிகலா கோபம் : செய்தி


ஒரு முதல்வர், சிறையிலிருக்கும் குற்றவாளியினை சென்று சந்தித்தால் அது பெரும் சிக்கலாகும் என்பது பழனிச்சாமிக்கு தெரிகின்றது


அவர் முதல்வராக பணியினை தொடங்கிவிட்டார், விவசாயிகள் நிதி, பெண்கள் ஸ்கூட்டி வாங்க மானியம் என அள்ளி எறிகின்றார்




கடும் கோபத்தில் இருக்கும் சசிகலாவிடம் தினகரன் என்ன சொல்லி சமாளித்திருப்பார், தமிழக மகளிருக்க்கெல்லாம் ஸ்கூட்டி வாங்கி கொடுக்கின்றோம்,


அதில் சிறைக்கு ஊர்வலமாக‌ வந்து உங்களை வாழ்த்துவார்கள் என சமாளித்திருக்கலாம்


எப்படியோ சிறை சிங்கம் உறும ஆரம்பித்துவிட்டது, சிறை கதவில் மும்முறை அடித்து சத்தியம் செய்ததாக எல்லாம் செய்தி இல்லை என்றாலும், சிங்கம் கோபத்தில் இருப்பது உண்மை.


ஆளுநர் எதற்கும் அடுத்த முதல்வரை பதவியேற்க வைக்க தயாராவது நல்லது, (அவரும் பாவம் தான்)


பழனிச்சாமி எதற்கும் தியானம் இருந்து பழகிகொள்வது நல்லது, பன்னீர் கோஷ்டிக்கு இப்பொழுதே தூது விடுவதும் நல்லது.


இந்த செய்தி கேள்விபட்டவுடன் அடுத்த முதல்வரா? ஓஓஓஓ மறுபடியும் ரிசார்ட்டா? என எம் எல் ஏக்கள் மகிழலாம் , ரிசார்ட் ஓணர்களோ கடலுக்குள்ளே ஓடும் முடிவில் இருப்பார்கள்


இன்னொரு முதல்வர் வந்து, இன்னொரு முறை வாக்கெடுப்பு நடந்தால்.. பாவம் சபாநாயகர் தனபால் தான். கடந்த முறையே அழுதுவிட்டார்.



No comments:

Post a Comment