Wednesday, December 30, 2015

டிசம்பர் 16 - 31 , 2015 குறும்பதிவுகள்




இஸ்லாமியர்களைப் போல அனைத்துப் பெண்களும் பர்தா அணிய வேண்டும் - மதுரை ஆதீனம்

# இதனை பார்வதி தனியே வந்து கனவில் சொல்லியிருப்பார், இஸ்லாமியரை போல அனைத்து ஆண்களுக்கும் என்ன செய்யவேண்டும் என சிவன் விரைவில் இவருக்கு அறிவிக்கின்றாரோ (சும்மாவே சிவனுக்கு மன்மதனை பிடிக்காது :) ) அதனை இரு மடங்காக முதலில் இவரின் முன்னாள் நண்பரான நித்தியானந்தாவிற்கும் இன்னும் பல சாமியார்களுக்கும் முதலில் செய்ய வேண்டும்.

# அடிக்கடி செய்தியில் இவர் பெயர் அடிபடவேண்டும் என்பது எம்பெருமான் இவருக்கு இட்ட பணி, ஆனால் இம்முறை இவர் பெயர் மட்டும் அடிபடுவதோடு நின்றுவிடாது என்பது மட்டும் நிச்சயம்.

 






தேமுதிக தத்துவமற்ற மோசமானத் திராவிடக்கட்சி -சீமான் சாடல்.

# அப்படியானால் நாம் தமிழர் கட்சி அந்நிய நாட்டு தீவிரவாதி படத்தினை அடையாளமாக கொண்டிருப்பதால் அது தீவிரவாத கட்சி அல்லவா?

# என்னதான் புலிகொடி, ராஜராஜசோழன் என உறுமினாலும் பாண்டியருக்கு சோழன் குல எதிரிதானே, அதனைபோல‌ எல்லோரும் உங்களை போல தெலுங்கன்,திராவிடன் என பின்னோக்கி சிந்தித்தால் நாடு விளங்குமா?


# கொலைகார தீவிரவாதி பிரபாகரன் தலைவன், சந்தண கடத்தல் வீரப்பன் வழிகாட்டி என முழங்கும் இவரிடம் மட்டும் என்ன தத்துவமும் கொள்கையும் வாழ்கின்றதாம்?




எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்:வேல்முருகன்

# அது என்ன 7 தமிழர்கள்? பேரரரிவாளன் மட்டுமே இந்தியாவினை சேர்ந்தவர், இன்னும் இந்திய குடியுரிமை இருப்பதால் நளினியினையும் இந்தியர் என கருதலாம், மற்ற 5பேரும் இலங்கை குடிமக்கள் அல்லது ஈழ நாட்டு மக்கள்.

# இதில் மற்ற 2 வரை விடுவிக்க சொல்ல நமக்கு உரிமை உண்டு. மீதி 5 பேரினை விடுவிக்க இலங்கை அரசல்லவா? அவர்கள் அல்லவா சொல்லவேண்டும்? அப்படியே இந்தியா விடுவித்தாலும் அவர்களை இலங்கைக்கு அல்லவா அனுப்பமுடியும்? மாறாக இவர் வீட்டுக்கோ அல்லது அங்கிள் சைமன் வீட்டிற்கோவா அனுப்புவார்கள்?


# மும்பை குண்டுவெடிப்பிலும், எல்லை கடத்தலிலும் ஈடுபட்ட எத்தனையோ பாகிஸ்தானியர்கள் இந்திய சிறைகளில் உண்டு, அவர்களில் இந்திய மொழிகளை பேசுவோரும் உண்டு, அம்மொழி பேசுகின்றார்கள் என்பதற்காக அவர்களை எல்லாம் விடுதலை செய்யமுடியுமா?

# பெரும் கொலைதிட்டத்திற்காக அன்றி இவர்கள் தமிழகம் வந்தது எதற்காக? திருப்பதி முதல் திருச்செந்தூர் வரை நடைபயணம் மேற்கொள்ளவா?

# 2 இந்திய அப்பாவிகள் , 5 இலங்கை கொலையாளிகள் என்பதை எவ்வளவு லாவகமாக மறைத்து 7 தமிழர்கள் என மாற்றிவிட்டுவிட்டார்கள் பார்த்தீர்களா? இதுதான் புலிகளின் ஊடக பிரச்சாரம், ஒரு பொய்யினை தந்திரமாக மறைக்கும் சாதுரியம்.

# இப்படி தங்களை சமார்த்தியசாலிகளாக நினைத்துகொண்டு இல்லா பொய்களை பரப்பி இந்திய ராணுவத்தை விரட்டினர் (அல்லது இந்தியா ஒதுங்கியது). பின் தாங்கள் இந்திய ராணுவத்தை வென்றவர்கள் என அதே ஊடகம் மூலம் பலரை நம்ப செய்தது. உண்மை நிலை 2009ல் தெரியவர அவர்களின் பொய் பிரச்சாரம் பலனற்று போக முள்ளிவாய்க்காலில் முடிந்தும் போயினர்.




கலைஞரின் கூட்டணி அழைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது: இளங்கோவன் பேட்டி

# கடந்தமுறை காங்கிரஸ் கூட்டணியில் வெற்றிபெற்று, மைனாரிட்டி அரசாக இருந்தபோதும் மிக சாமார்த்தியமாக காங்கிரசுக்கு அரசில் இடமளிக்காமல் அவர் 5 ஆண்டுகளாக தண்ணீர் காட்டினபோது, இதே இளங்கோவன் எப்படி எல்லாம் புலம்பினார், எவ்வளவு கடுமையாக விமர்சித்தார்.

# இன்று மறுபடியும் அதே நரி அழைக்குதென்று இவர் மகிழ்கின்றாராம். தேர்தல் வந்தால் எல்லா கட்சியினையும் அழைப்பார் கலைஞர், வென்றதும் விரட்டுவார். ஆனால் ஒரு காலமும் தனித்து நிற்கமாட்டார், அவர் பலம் அவ்வளவுதான்.


# ராஜிவ் உயிர்விட்டபொழுதே, அதிமுக கூட்டணியினை முறித்துவிட்டு தனித்து நின்றிருந்தால் காங்கிரஸ் எப்போதோ தமிழக்த்தில் மறுபடியும் அந்த அனுதாபத்தில் ஆட்சியினை பிடித்திருக்கும், தமிழகத்தில் அவர்களுக்கு கடைசி வாய்ப்பு அது, ஆனால் செய்யவில்லை, மாறாக அந்த துயரத்தை ஜெயலலிதா வோட்டாக்கினார்.

# தமிழக காங்கிரசாருக்கு அப்படிபட்ட சாணக்கிய அரசியல் செய்ய தெரியாது , தெரிந்த்தெல்லாம் கோஷ்டி பூசலும், வேஷ்டி கிழிப்பும், யாராவது கூட்டணிக்கு அழைக்கமாட்டார்களா என ஏக்கமும்தான். அதுவும் கலைஞர் 20 சீட் கொடுப்பார் அதனை பிரித்துகொள்வதற்குள் சத்தியமூர்த்திபவன், ஆனந்த பவன் கொத்துபரோட்டவாக சிதறி கிடக்கும். இவர்கள் இப்படித்தான்.




ஜெயலிதா ஸ்டிக்கரை விஜய்காந்த் கட்சியினர் கிழித்தார்களாம், பதிலுக்கு விஜய்காந்த கட்சி பேனர்களை அவர்கள் கிழித்தார்களாம், கடும் மோதல்.

கடந்த தேர்தலில் இவர்கள் அவர்களுக்காகவும், அவர்கள் இவர்களுக்காவும் வாக்கு கேட்டார்கள் என்பதுதான் மகா விசித்திரம்.

தேர்தல் என்றால் கூட்டணி வைப்பார்களாம், முடிந்தவுடன் அடித்துகொள்வார்களாம். இவர்களை நம்பி வாக்களித்த நாமெல்லாம் இதனை பார்த்துகொண்டிருக்க வேண்டுமாம்.


அன்று நாங்கள் கூட்டணியாக நல்லாட்சி தருவோம் என்றார்கள், இன்று பேனர் கிழித்து கிழித்து விளையாடுகின்றார்கள். மொத்தத்தில் மக்களுக்காக இவர்கள் கிழித்தது இந்த பேனர்களைத்தான்.

இம்மாதிரி அட்டகாசங்களை இத்தேசம் ஒழிக்கவேண்டுமானால் மாநிலங்களுக்கு சில சலுகைகளை அளித்துவிட்டு இந்த மாநில கட்சிகளை தடை செய்ய வேண்டும். அது அல்லாது இந்த திருநாட்டிற்கு விடிவு இல்லை, மாநில கட்சிகளின் அட்டகாசம் அப்படி.




பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வெற்றி: ராஜ்நாத்சிங்

# ஒப்புகொள்ளவேண்டிய விஷயம்தான், கொஞ்சநாளாக மாட்டுகறி, சிறுபான்மையினர் பாகிஸ்தான் செல்லுங்கள் போன்ற‌ மற்றமதத்தினர் மீதான கடும் வெறுப்பு பேச்சுக்களை காணவில்லை. அந்த பயங்கரவாதம் கட்டுபடுத்தபட்டிருப்பதை இப்படி பகிரங்கமாக ஒப்புகொண்ட ராஜ்நாத்சிங்கினை வாழ்த்தலாம்.





ஊழலுக்குத் தொடர்பானவர்கள் ஜெயலலிதா வீட்டிலேயே செல்வாக்கோடு வாழ்கிறார்கள் : கலைஞர் குற்றச்சாட்டு

# கோபாலபுரத்திலும், சிஐடி காலணியிலும் இருப்பவர்கள் என்ன சபர்மதி ஆசிரமத்தின் நிர்வாகிகளா? ஜெயலலிதாவோ அல்லது அவர்கள் வீட்டில் இருப்பவர்களாவது வழக்கு என்றால் நீதிமன்றம் சென்றார்கள், சிறைக்கும் சென்றார்கள். இனியும் செல்வார்களா? என்பது பற்றி நாம் பேசகூடாது.

# ஆனால் கைது செய்ய வந்தால் "அய்யோ கொலைபண்றாங்க" என கத்துவதும், பெரும் ஊழலில் சம்பந்தபட்ட தயாளுவிற்கு வாரண்ட் அனுப்பினால் அவருக்குமனநிலை சரியில்லை, மறதி, யாரை பார்த்தாலும் பிராண்டி வைக்கிறார் என பொய் சொல்லி ஓடிவிடுவதும் ஓளிந்துகொள்வதும் யார்?


# அண்ணா காலத்திலிருந்து இவர் அமைத்த எல்லா அரசுகளும் ஊழல் வழக்கிற்கு தப்பியதா? சென்னையில், வீராணத்தில்,பூச்சிமருந்தில், டெல்லியில், உரத்தில்,ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என இவர்கள் இருந்த எல்லா இடத்திலும் ஊழல் இருக்குமாம், ஆனால் கோபாலபுரத்தில், சிஐடி காலணியில் இருப்பவர்கள் மட்டும் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாம்.

 




29 December 2015 ·
இளையராஜாவுக்கு ஒரு நியாயம்; விஜயகாந்துக்கு ஒரு நியாயமா?
சீமான் ஆவேசம்

# இப்படித்தான் விஜயகாந்த் என்றால் மட்டும் குதித்தோடி வரவேண்டும், அதுவும் அவர் நியூஸ்7 சேணலை சாடியபின் இப்படி கூட கேட்காவிட்டால் அது என்ன "வைகுண்டம் வாழ்" பரந்தாமன் விசுவாசம்?.


# பி.ஆர் பழனியப்பனுக்கு ஒரு நியாயம். ஆறுமுகசாமிக்கும், வைகுண்டராஜனுக்கும் ஒரு நியாயமா? என கேட்டிருந்தால் இவருக்கு தமிழ்நாட்டின் மீது உண்மையிலே அக்கறை இருக்கின்றது என்று பொருள். புலித்தோல் போர்த்திய போலியிடம் இதனை எல்லாம் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


 











கொஞ்சமும் பயிற்சி இல்லாமல் பத்திரிகை நிரூபராகிவிடுகின்றார்களோ என எண்ண தோன்றும் காலமிது, பொருத்தமான‌ கேள்விகளை யாரிடம் கேட்டால் அது பரபரப்பு செய்தியாகும் என்பதுபற்றி இவர்கள் யோசிப்பதில்லை, இளையராஜா, விஜயகாந்த் என சர்ச்சைக்கு இழுத்து ஏதோ செய்கின்றனர்.

# நியூஸ் 7 தொலைக்காட்சியிடம் தாதுமணல் பற்றியோ புதிய தலைமுறையிடம் ஏரி ஆக்கிரமிப்பு பற்றியோ அல்லது சீமானிடம் சிக்கலான கேள்விகள்,

# அதாவது "திராவிட கழகம் தமிழனை சீரழித்தது என்கின்றீர்களே, புலிகளின் ராஜிவ் கொலையினை தொடர்ந்து எழுத்த கடினமான நடிவடிக்கைகளால் புலிகளுக்காக பாதிக்கபட்டது, அந்த இயக்கத்தவர்கள்தானே? நீங்கள் அப்பொழுது பாரதிராஜாவிடம் கிளாப் அடித்துகொண்டிருந்தவர்தானே?" என ஏன் கேட்கவில்லை என தந்தி டிவியிடம் கேட்கவிட்டாலும் பரவாயில்லை சிக்கல் என விட்டுவிடலாம்.


# ஆனால் கலைஞர் விஜயகாந்திற்கு வழிமேல் விழிவைத்து காத்திருப்பது பற்றி வடிவேலிடமும், சிம்பு பீப் பாடல்பற்றி நயந்தாராவிடமோ அல்லது ஹன்சிகாவிடமோ கேட்டிருக்க வேண்டாமா? இவர்கள் இருவரையும் விட்டுவிட்டு இளையராஜாவிடம் கேட்டால் நிச்சயமாக அந்த நிரூபருக்கு ..... இருக்கின்றதா?












கூடங்குளம் அணுவுலை அருகே விதிமுறைகளை மீறி தாதுமணல் எடுக்க தனியாருக்கு அரசு அனுமதி அளித்துள்ளது: ராமதாஸ் பேட்டி

# திடீரென தாதுமணல் கொள்ளை நினைவுக்கு வந்துவிட்டதா? அய்யாவுக்கு என்ன சிரமமோ? ஆனாலும் செயல்படும் அணுவுலைபக்கம் யாராவது செல்வார்களா? அணுவுலை அருகில் உள்ள பொருள் எதுவானாலும் வெள்ளையன் வாங்குவானா? இதனையும் மீறி அருகில் செல்கிறார்கள் என்றால் அந்த அணுவுலை செயல்படவில்லை என்றுதான் அர்த்தம்.

# ஆனாலும் பாதுகாக்கபடும் அபாய பகுதிக்குள் ஒரு தனியார் நிறுவணம் நுழையமுடியுமென்றால் இந்த நாடு எந்த லட்சணத்தில் இருக்கின்றது. இது தெரிந்துமா பிரதமர் 6ம் அணுவுலை வரை புட்டினுடன் பேசிகொண்டிருக்கின்றார்?








பாகிஸ்தான் பயணம்: மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறது சிவசேனா!

# இதனையே வேறு கட்சி பிரதமர் செய்திருந்தால் பதவி விலக வேண்டும், தற்கொலை செய்யவேண்டும் என கொந்தளித்திருப்பார்கள். மோடி என்றவுடன் மன்னிப்பு மட்டும் கேட்கவேண்டுமாம். அதாவது மோடியினை விட்டால் இனி இவர்களுக்கு வேறு அடையாளமில்லை எனும் அளவிற்கு அவர்கள் நிலை வந்துவிட்டது.

# சிம்புவே மன்னிப்பு கேட்காதபொழுது பிரதமர் கேட்பாரா?

 







ஆப்கனில் இருந்து திரும்பும் வழியில் பாகிஸ்தானுக்கு மோடி திடீர் விஜயம், நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவர் குடும்ப திருமண விழாவிலும் கலந்துகொண்டார்

# முன்பெல்லாம் அறிவித்துவிட்டுத்தான் அடுத்தநாட்டிற்கு செல்வார், இப்பொழுதெல்லாம் சொல்லமால் கொள்ளாமல் திடீரென்று சென்று விடுகிறார், அரச சந்திப்பு சுற்று முடிந்து இப்பொழுது திடீரென சென்று வாழ்த்து சொல்லும் சுற்றினை தொடங்கி இருக்கின்றார்.

# மோடி இப்போது எந்த நாட்டில், யாருக்கு வாழ்த்து சொல்லிகொண்டிருப்பார் என இனி பெட்டிங் கட்டி சூதாட்டமே நடைபெற்றாலும் ஆச்சரியமில்லை, அவரின் விமானத்தில் ஒலிக்கும் பாடல் "இனிமை நிறைந்த உலகம் இருக்கு இனிமேல் உனக்கு கவலை எதற்கு ஜாலி பேர்ட்.." என்பதாக‌ இருக்கலாம்.





 

 








தமிழகத்தினை விட்டு செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை : உஷா ராஜேந்தர்

# தனியாக சென்றுவிடாதீர்கள், உங்கள் கணவரையும் மகனையும் மறக்காமல் அழைத்து செல்லுங்கள்.

# இனி சிம்புவின் தம்பி குறளரசன் மட்டும் பாக்கி, அவர் என்ன சொல்லபோகின்றாரோ அல்லது எப்படி அழபோகின்றாரோ தெரியவில்லை.



 





அருண் ஜெட்லி தன் மீதான குற்றச்சாட்டுகளை தவறு என நிரூபிப்பார் என்கிறார் மோடி!

# எப்படி? லேப்டாப்பிற்கு ஒரு நாளைக்கு 15,000 ரூபாய் வாடகை கொடுத்தது ஏன்? என விளக்க குமாரசாமியிடம் செல்லும் திட்டம் இருக்கின்றதா?








எந்திரன் இரண்டாம் பாகத்தில் வசனகர்த்தா ஜெயமோகன்

# சுஜாதா எனும் புலி உயர்த்திவிட்ட ஷங்கரை, இன்னொரு சூடுபோட்ட பூனை தரைவரை கொண்டுபோகும் என விதி இருந்தால் அதனை மாற்றபோவது யா?

# பின் நவீனத்தும், காந்தி மரபு, இந்திய ஞான மரபு, பிரக்ஞை, புரிதல்,ஆத்மம் என உளறிகொண்டிருக்கும் ஒருவரை விஞ்ஞான கதைக்கு வசனம் எழுத சொன்னால் எப்படி இருக்கும்? மகாபாரத போரை டிஜிட்டல் திரையில் சொல்லபோகிறேன் என அன்னார் ரசிகர்களை ஓட ஓட விரட்டபோவது நிச்சயம்.

 







சிம்பு பீப் சொன்னதிற்கு இவ்வளவு ஆர்பாட்டமாம், ஒரு காலத்தில் உங்கள் கொள்கை என்ன‌ என்பதற்கு ஒரு பழுத்த அரசியல்வாதி ஒரு பெண்ணிடம் சொன்ன அருவெருப்பான விளக்கத்தையும் இன்னும் சில கட்சிகூட்டங்களில் வெற்றிகொண்டான் போல கேட்க சகிக்காத பேச்சுக்களை பேசிய கட்சிக்காரர்களையும் கண்ட தமிழகம் தான் இது.

# ஒருவேளை தமிழகம் திருந்திவிட்டதாக கருதினாலும், ஒருவர் ..தா என்றும், ஈன சாதி., ஈன புத்தி, ஈனத்தனம், மானமில்லாத சாதி தமிழ் அப்பனுக்கு பிறக்காதவன், ஒரு அப்பனுக்கு பிறக்காதவன் என்றெல்லாம் பேசிகொண்டிருக்கின்றாரே, அவருக்கு என்ன பதில் வைத்திருக்கின்றது தமிழக‌ சமூகம்?








புலிகள் இல்லாவிட்டால் ஈழமக்களை எல்லாம் சிங்களன் கொன்று குவித்திருப்பானாம், அங்கிளின் மங்கிகளில் ஒன்று சொரிந்து சொல்கின்றது

# இன்றும் 10 லட்சத்திற்கு குறையாத தமிழ் மக்கள் ஈழத்தில் உண்டு. எல்லோரும் என்ன சிங்களனால் அழிந்துவிட்டார்களா? இறுதி யுத்தத்தில் யாழ்பாணம்,மட்டகிளப்பில் ஒரு குண்டு விழுந்திருக்கும்?

# ஒரு மண்ணும் சிந்திக்க மாட்டார்கள், புலிகளின் ஊடகம் எது அழுகிறதோ அதனை மட்டும் நம்பிகொண்டு ஒப்பாரி வையுங்கள்.




சிம்புவிற்கு ஆதரவாக ரசிகர்கள் தீக்குளிக்க முயற்சி

# இவர்களை காப்பாற்றிய நபர்களை முதலில் நாடுகடத்தவேண்டும். திராவிடன் தமிழனை கெடுத்தான் என சொல்லும் தமிழர்கள் எங்கே? உண்மையில் தமிழனை கெடுத்தது சினிமா. சினிமா மட்டுமே

# தமிழகம் செழிக்கவேண்டுமானால் வந்தேறி,திராவிடன் என இவர்களை சீண்டுவதை விட்டுவிட்டு சினிமாவினை அதன் போக்கிரிதனத்தை அடித்து நொறுக்குங்கள், தமிழன் வாழ்வான்.


# ஆனால் செய்யமாட்டார்கள், காரணம் அங்கிளின் மங்கிகளுக்கு திராவிட தமிழன், மத தமிழன், சாதி தமிழன், வந்தேறி தமிழன் தெரியும். ஆனால் ஆபத்தான சினிமா தமிழன் தெரியாது. கேட்டால் தமிழகத்தில் தமிழன் நடிக்கட்டும் என்பார்கள். புற்றுநோயில் என்ன தமிழன், தெலுங்கன் புற்றுநோய்? வெட்டி எறிய வேண்டாமா?

# நிச்சயம் இயக்குனர் சைமன் அங்கிள் அந்த சினிமாவினை எதிர்க்கமாட்டார் காரணம் அவர் அங்கிருந்துதான் வந்தார், பல ஈழமுதலாளிகளின் பெரும் முதலீடு தமிழக சினிமா, பின்னர் அங்கிள் எப்படி சீறுவார்? அதனால் மங்கிகளுக்கும் சாத்தியமில்லை.



மைனர் என்பதால் நிர்பாய குற்றவாளி விடுதலை : உலகம் கடும் அதிர்ச்சி

பேரணியில் கலந்துகொண்ட பதினைந்து வயது பையன் நாட்டிற்கு அபாயம் என தீர்ப்பிட்டு சவுதியில் தலை வெட்டபட்டான் : உலக நாடுகள் அதிர்ச்சி

# இந்த இரு நாடுகளும் எப்படி அதிர்ச்சி கொடுத்திருக்கின்றன பார்த்தீர்களா? இங்கு என்ன செய்தாலும் விடுதலை, அங்கு சும்மா சிக்கினாலும் வெட்டு.




பிரதமரின் வரும் ரஷ்ய பயணத்தில் தமிழகத்தின் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகளை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கபடுகின்றது : செய்தி

# ஒரு உலையே இன்னும் உருப்படியாக வேலை செய்யவில்லை, அடிக்கடி மூடபடுகின்றது, உலகிலே வருடத்திற்கு 300 நாட்கள் பராமரிப்பும், 65 நாட்கள் சோதனையும் நடைபெறும் ஒரே உலை இதுதான். இதில் உற்பத்தி எங்கிருந்து வரும்? இரண்டாம் அணுவுலையும் உற்பத்தியினை கனவாகவே காண்கின்றது.

# இந்த கொடுமையில் 3,4ம் உலை என்றார்கள். அதுவே அபாயமானது, அதற்குள் 5 மற்றும் 6 என்கின்றார்கள். இந்திய மீதான தனது பிடியினை ரஷ்யா விடவே விடாது, ஈரான்,சிரியா வரிசையில் இனி இந்தியாவும் இருக்க்கும் இருந்து தொலையட்டும்.


# என்னவோ தெரியவில்லை புடினை இந்திய பிரதமர் சந்திக்கும் பொழுதெல்லாம் எண்ணிக்கை கூடுகின்றது, ரஷ்ய உலைகளை இவர் ஏலம் எடுப்பார் போலும், 1ல் தொடங்கியது 6ல் நிற்கின்றது, தென் தமிழகம் காப்பாற்ற படவேண்டுமென்றால் இனி இருவரும் சந்திக்காமல் இருப்பது தென் தமிழகத்திற்கு நல்லது, இல்லாவிட்டால் குறித்துகொள்ளுங்கள், அடுத்த சந்திப்பில் 7,8 என எண்ணிக்கை செல்லும்.

# பொருளாதாரத்தை பெருக்க சொன்னால், அணுவுலைகளை உயர்த்தும் மோடியின் சாதனை பாரீர்

 




19 December 2015 ·


ஜல்லிகட்டு போட்டி தடையினை நீக்க ஸ்டாலின் முதல் சீமான் வரை பலர் கடும் அறிக்கை போராட்டம், தடையினை மீறி நடத்தபோவதாக கடும் சீற்றம்

# எல்லாம் தேர்தல் கோளாறு, இன்னும் ஆர்வமாகி காளையினை அடக்க நான் தயார் என கிளம்பாதவரை சிக்கல் இல்லை. ஆனாலும் தலைவர்கள் மகா விவரமானவர்கள் அப்படி எல்லாம் அறிக்கைவிட்டு சிக்க மாட்டார்கள்





தி.மு.க.,விலிருந்து பிரிந்து ம.தி.மு.க., உருவானது எந்த வகை நாகரிகம் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்

# ஹிஹிஹிஹி தலைவரே, திக விருந்து நீங்கள் பிரியும் பொழுது அது எவ்வகை நாகரீகமோ, அவ்வகையான நாகரீகம்தான் மதிமுக பிரிந்ததும்.

# நீங்கள் எது செய்தாலும் அது சரி, மற்றவர்கள் செய்தால் தவறு. கட்சி கணக்கினை கேட்டார் என எம்.ஜி.ஆரை நீக்கினால் அது பெரும் நாகரீகம், அவர் வென்றதும் கட்சியினை இணைத்துவிடலாமா என கேட்டது உலகிற்கே வழிகாட்டிய நாகரீகம்.


# உங்களுக்கு அடையாளமிட்டு வளர்த்து உருகொடுத்த பெரியார் மீது சேறு பூசி வோட்டு அரசியலுக்காக வெளிவந்தது எப்படிபட்ட நன்றிமிகுந்த நாகரீகம்? அடடா.










தடையைமீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம்...
-சீமான்.

# தடை விதிக்கபட்ட புலிகள் இயக்கத்திற்கு தடையினை மீறி முதலில் நன்கொடை பிரித்து அனுப்புங்கள், அப்புறம் ஜல்லிகட்டை நடத்தலாம்.


# மூடபடவில்லை என்றால் தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் அடித்து நொறுக்கபடும் , என் தம்பிமார்கள் அதனை செய்வார்கள் என்றவர் சீமான், எத்தனை கடைகள் மூடபட்டன?











ஜல்லிகட்டு தடையினை நீக்க கோரி அலங்காநல்லூரில் எனது தலைமையில் போராட்டம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

# டெல்லி நாடாளுமன்றமோ அல்லது உச்சநீதிமன்றத்தின் முன்னோ அதுவுமல்ல்லாது வனவிலங்கிற்கும் வளர்ப்புமாட்டுக்கும் வித்தியாசமில்லையா என அந்த அரச அலுவலகங்களுக்கு முன்னால் போராடுவார் என பார்த்தால் அலங்காநல்லூருக்கு வந்திருக்கின்றாராம், இனி கச்சத்தீவு பிரச்சினையில் அன்னார் பாம்பனுக்கும் செல்வார்.

# எதை தின்றால் பித்தம் தெளியும் எனும் பரிதாப நிலையில் அன்னார் இருக்கின்றார், விரைவில் விஷாலுடன் தெருநாய்க்காக கொடிபிடித்தாலும் அல்லது கடல் ஆமைக்காக உண்ணாவிரதம் இருந்தாலும் ஆச்சரியமில்லை, எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.









சென்னை மழைக்கு திருக்குறளில் தீர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் வைரமுத்து பேச்சு

# திருகுறளில் எல்லா அரசியல் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கின்றது , வள்ளுவர் கோட்டம் கட்டி, குறளுக்கு உரை எழுதி, குறளோவியமும் படைத்து, வள்ளுவனுக்கு சிலை எழுப்பிய கலைஞரும் ஆண்ட தமிழ்நாடுதானே இது, அவர் குறள் அடிப்படையில் தீர்த்தாரா? அல்ல மாறாக பாதி பிரச்சினைக்கு அவரே காரணமானார்

# இதனை எல்லாம் இவர் கோபாலபுரத்தில் சொல்லமாட்டார், டெல்லியில் போய் முழங்குவார்







பிரதமர் நரேந்திர மோடியுடன் அன்புமணி இராமதாஸ் சந்திப்பு; தமிழகத்திற்கு ரூ.40,000 கோடி நிவாரண நிதி வழங்க வலியுறுத்தல்

# மாநில முதலமைச்சருக்கே இன்னும் பதில் இல்லை, இவருக்கான பதில் விரைவில் காடுவெட்டி குருவிற்கு பிரதமரால் சொல்லபடும் என நம்புவோம்.

# இந்த 40,000 கோடி கோரிக்கை ஒருபக்கம் இருக்கட்டும், மருத்துவ கல்லூரி முறைகேடு அங்கீகாரத்தில் பல கோடிகள் சுருட்டபட்டதாக அன்னார் மீது நடக்கும் வழக்கு எப்படி போகின்றது என பிரதமரும் இவரிடம் கேட்டிருக்கமாட்டார்.








காற்றாலை மின் கொள்முதல் முறைகேடு குறித்து சி.பி.ஐ. விசாரணை தேவை : ராமதாஸ்

# இந்த ஆட்சி மீது ஏகபட்ட முறைகேடுகளை அடுக்குவதில் முதலிடம் இவருக்குத்தான், ஆனால் ஒரு முறைகேட்டிற்காவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பாரா?

# அறிக்கையே விடாத டிராபிக் ராமசாமியின் வழக்கு கிரானைட் குவாரிகளை ஆட்டிவைத்திருக்கும் பொழுது, இவர் மட்டும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் அறிக்கை மட்டும் விட்டுகொண்டிருக்கின்றார்.








உலகிலேயே அதிக அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ள பகுதியாக இந்தியத் துணைக் கண்டம் உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

# நிலநடுக்கத்தால் பாதிக்கபட்டால் அணுவுலை கொலைஉலை ஆகும் என்றால் அப்படி அல்ல இந்தியா பாதிக்கபட்டாத பாதுகாப்பான பகுதி என சொல்வதும் இவர்கள்தான்.

# இன்று மிக அபாயகரமான பகுதி என ஒப்பாரி வைப்பதும் இவர்கள்தான், நிலநடுக்க ஆபத்து உள்ளபகுதியில் அணுவுலை ஏன்? என கேட்டால், உடனே அப்படி அல்ல அணுவுலையில் மட்டும் வராது என்பார்கள், நாமும் நம்பிதொலைய வேணடாம்.







இந்தியா -இலங்கை இடையே கடற்பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கப்படும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

# பாதை போடுவது சரி, அதன் வழியே சிங்களன் தனுஷ்கோடியில் கால்வைத்தால் அங்கிள் சைமன் சும்மா இருப்பாரா? "எங்க அண்ணன என்னடா செஞ்சீங்க.." என கேட்டு ஓட ஓட அடிப்பார், அதனால் முதலில் அங்கிளிடம் அனுமதிவாங்கி கொள்ளுங்கள்







பாகிஸ்தானுடன் போர் நடத்துவது சரியானதல்ல, பேச்சு நடத்துவதே சிறந்தது : சுஷ்மா சுவராஜ்

# எதிர்கட்சியானால் நாங்கள் இரும்புகரம்,அலுமினிய கரம் கொண்டு அடக்குவோம் என காளியாத்தாவாக ஆட வேண்டும். ஆட்சிக்கு வந்தால் வளைகரம் கொண்டு வரவேற்று அமைதி பேச்சு, அஹிம்சை என புத்தராக மாற வேண்டும் , . அதாவது காங்கிரஸ் அரசு செய்தால் அது கோழைத்தனம், இவர்கள் செய்தால் சாணக்கியதனம்.

# பாகிஸ்தானுடன் பேசினாலே குதிக்கும் சிவசேனையினை இப்போது காணமுடியாது, ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருகிறது என சொல்லுங்கள் எந்த தூக்கத்திலிருந்தாலும் எழும்பி ஆடுவார்கள். அப்படி ஒரு விளையாட்டு கட்சி அது.



 









பெரும் காற்று மாசு சிக்கலில் தவிக்கும் சீனாவிற்கு, காற்றை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் கனடா நிறுவனம்

# இந்த காற்று ஒன்றுதான் விலை இல்லாமல் இருந்தது, அதனையும் விற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

# ஆனால் தமிழகத்தில் வீசுவதெல்லாம் அம்மா கொடுத்த காற்று என்பார்கள், அவர் ஆணையிட்டதால்தான் காற்றே வீசுமாம்.ஆனால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது :)








மம்மூட்டி, மோகன்லாலை விட மோடி தான் தலை சிறந்த நடிகர் : கேரளாவில் குஷ்பு பேச்சு

# பாம்பின் கால் பாம்பறியும், நல்ல‌ நடிப்பினை இன்னொரு நடிகை மட்டுமே விவரிக்கமுடியும்.

 








தமிழக இரு பெரும் கட்சிகளுமே, கடும் பிரயாசையில் மக்களிடம் நெருங்குகின்றன, இருவரிடமும் கொஞ்சம் அச்சம் மேலோங்கி இருப்பது உண்மை.

ஒருவர் ஊர் ஊராக நடந்தார், ஒருவர் வாட்ஸ அப்பில் வந்து உருகுகின்றார். இதெல்லாம் இவர்கள் எண்ணத்தில் உதிப்பவை அல்ல. யாரோ திட்டமிட்டு இயக்குகின்றார்கள், இயக்கட்டும்.

# இவர்கள் இப்படி தலைகீழாக நின்றாலும் ஒன்றும் ஆகபோவதில்லை, இந்த இரு கட்சிகளுக்கும் பிதாமகனான‌ அண்ணா சொன்னபடி சொல்வதென்றால்
"கறந்தபால் மடி புகாது"
"கருவாடு மீன் ஆகாது"
"இந்த கட்சிகள் இனி ஜெயிக்காது"












கோயில்களில் ஆகம விதிப்படியே அர்ச்சர்களை நியமிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

# பெரியார் ஒரு நாயக்கன், அவர் தமிழர் துரோகி என்றெல்லாம் பேசுபவர்கள் எங்கே? அவர் தமிழருக்கு மட்டுமல்ல இந்த தேசத்தில் மதத்தால் ஒடுக்கபட்டவர்களின் குரல் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா? இந்த நவீன காலத்திலே இப்படி அட்டகாசம் செய்யும் கும்பல், அக்காலத்தில் எப்படி எல்லாம் ஆடி இருக்கும்?

# அந்த பெரியார் இப்பொழுது இருந்தால் இப்படி சொல்லுவார், "அர்ச்சகரை ஆகம விதிபடி நியமிக்கவேண்டுமென்றால், பொட்டுகட்டுதல்,குழந்தை திருமணம், தீண்டாமை , பெண் அடிமை போன்றவை எல்லாம் மதமும் ஆகமும் சொல்வதுதானே, அப்படி என்றால் இது எல்லாம் ஆகம விதிப்படி மறுபடி வரவேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றார்களா? இதுக்குத்தான் சொல்றேன் கோயிலும் வேண்டாம், அர்ச்சகரும் வேண்டாம், ஆகமும் வேண்டாம் ஒரு வெங்காயமும் வேண்டாம்"


‪#‎ பெரியாரின்‬ பேரன் திடீரென காணாமல் போய்விட்டார், அவரின் வாரிசுகள் அல்லது அவரால் வளர்க்கபட்டவர்கள் யாருக்காவது இப்படி சொல்லும் தைரியம் உண்டா? நிச்சயம் இல்லை, இங்குதான் பெரியார் காலத்திற்கும் நிலைத்து நிற்பார்.




பெண்களுக்கு அதிக இடங்களை காங்கிரஸ் கட்சி ஒதுக்க வேண்டும், விஜயதரணி

# சோனியா காந்தி முதல் குஷ்பூ வரை பெண்கள் ஆளும் கட்சிதான் அது, இதில் இவர் இன்னும் வேண்டும் என்பது இளங்கோவன் பதவியினை பிடுங்கும் குதர்க்கம் அன்றி வேறு என்னதாக இருக்க முடியும்?

# சட்டமன்ற தேர்தல் என்று பார்த்தாலும் 234 தொகுதியில் நிற்க கூட கட்சியில் யாருமில்லை, இதில் அதிக இடம் வேண்டும் என கோரிக்கை வேறா?













16 December 2015 ·


எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; உறவினர் கிடையாது:ஜெ., வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோ உரை

முப்பொழுதும் அருகிலிருப்பவருக்கு கூட வாட்சப்பில்தான் அவர் பதிலளித்திருக்கின்றார், நிச்சயமாக இது அவர்களுக்கானது. தமிழகத்திற்காக என நினைத்தால் அது அந்தோ பரிதாபம்.












 

வாட்சப்பில் வடை சுடுகிறார் ஜெயலலிதா : மு.க ஸ்டாலின்

# 60 வருடமாக முரசொலியில் கலைஞர் சுட்டுகொண்டிருப்பது என்ன சமோசாவா?





 






























Monday, December 28, 2015

விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்!

அக்கால பத்திரிகைகள் உண்மைக்காக போராடின, வெள்ளையனை எதிர்த்து சுதேச மித்திரன் போன்ற பத்திரிகைகள் மிக தைரியமாக எழுதின.

சுதந்திர இந்தியாவிலும் நேரு மீதான விமர்சனங்களை கம்யூனிஸ்ட் பத்திரிகைகள் உள்பட சகலமும் மிக கடுமையாக விமர்சித்தன, இந்திரா பற்றி சொல்லவே வேண்டாம், எல்லா பத்திரிகைகளும் மீடியாக்களும் ஆண்மையுடன் சீறின.

சமூக போராட்டத்தில் பெரியார், அண்ணா போன்றோரின் பத்திரிகைகள் மிக தீவிரமாக அதிகார உச்சங்களை சீண்டின, அவர்கள் கொஞ்சமும் அஞ்சவில்லை அதுவும் பிராமண ஆதிக்கம் நிறைந்த காலத்தில் பெரியாரின் அந்த எழுத்துக்களுக்கு நிச்சயம் பெரும் தைரியம் வேண்டும்.


அவர்களுக்கெல்லாம் சமூக பொறுப்பு இருந்தது, நாட்டு நலன் சமூக நலனை காக்கும் பொறுப்பு இருந்தது, இன்று நடப்பது என்ன?

பத்திரிகைகளும், டீவிகளும் சினிமா குப்பைகளாலும், தேவையற்ற பொறுபற்ற செய்திகளாலும் நிறைந்து கிடக்கின்றன, போட்டிகள் பணங்களை குவித்தல் எனும் நோக்கில் சென்றுகொண்டிருக்கும் இவர்கள் நிச்சயம் சமூகத்திற்கு ஏதும் செய்யபோவதில்லை. மாறாக சீரழிக்கும் அபாயம் உண்டு.

ஏரி கொள்ளையர்களும், மணல் கொள்ளையர்களும், அரசியல் கொள்ளையர்களும் பத்திரிகைகளும் டிவிகளும் நடத்தும் காலமிது, அதாவது தங்களை காப்பாற்றிகொள்ள பத்திரிகை தொழிலில் இறங்கி இருக்கும் இவர்கள் உண்மைக்கு வெகுதூரம். அரசினை விமர்சிக்க மாட்டார்கள் மாறாக ரோட்டில் வருவோர் போவோரை எல்லாம் சீண்டுவார்கள்.

# ஒரு பேட்டியில் இளங்கோவன் பாண்டேயிடம் சொன்னது நிச்சயம் நியாமனானது, ஒரு வகையில் அதுவும் "த்த்தூ." தான். "பாண்டே உங்களால் தமிழக முதலமைச்சரையோ அல்லது பெரும் அதிகார வர்க்கத்தையோ இப்படி அமர வைத்து கேட்கமுடியாது, ஒரு அமைச்சரை இங்கு அழைத்து வந்து கேளுங்கள் நான் காதை அறுத்துகொள்கிறேன்

உங்கள் எல்லை இவ்வளவுதான், கோயம்பேடு கோவித்தசாமி, சும்மா கத்தி கொண்டு இருப்பவனை அழைத்து அரசியல் விமர்சனம் செய்கின்றீர்கள், யாரிடம் கேட்கவேண்டுமோ அவர்களை விட்டுவிடுவீர்கள், இது ஊடக தர்மமா?"

# இதனைத்தான் விஜயகாந்த அவர் ஸ்டைலில் சொன்னார்.

கலைஞர் தொலைக்காட்சி





கலைஞர் டிவி தொடங்குவதற்காக வாங்கிய 200 கோடி ரூபாய் கடனை, மிக குறுகிய காலத்தில் வட்டியோடு கட்டினார்களாம், அவ்வளவு வருமானம் வந்ததாக நீதிமன்றத்திலே சொல்லி இருக்கின்றார்கள் கலைஞர் குடும்பத்தார். டிவி இன்னும் ஓடிகொண்டிருக்கின்றது.

வேலை வெட்டிக்கே செல்லாத அவரது பேரன்கள் நயந்தாராவினையும், எமி ஜாக்சனையும் வைத்து கொடிகணக்கில் செலவழித்து படமெடுப்பார்கள்.

டெல்லி நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து, டெல்லியில் உச்ச நீதிமன்ற வழக்கு வருடகணக்கில் நடத்துமளவிற்கு செலவழிக்கும் உறுப்பினர்களை கொண்டது அந்த கட்சி, இன்னும் சாராய சக்கரவர்த்திகளும் உண்டு. இன்னும் தொட்ட இடமெல்லாம் கொட்டும் வசதி கொண்டது கட்சி.


இவரின் மனசாட்சி (அல்லது டெப்பாசிட் வங்கி) மாறனின் குடும்பம் இன்று ஆசியாவின் குறிபிட்ட பணக்கார குடும்பங்களில் ஒன்று, ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு கோடிகளை ஆயிரகணக்கில் அள்ளிவீசும் குடும்பம் அது.

கலாநிதி மாறனின் மனைவியின் வருமானம் மட்டும் என்ன‌? அது போதாதா நூறு தேர்தல் நடத்த?

ஏதாவது எட்டாம் அதிசயம் நடந்து இனி திமுக ஜெயித்தால் மந்திரி பதவி யாருக்கு செல்லும்? அழகிரிக்கும், கனிமொழிக்கும் மாறன் குடும்பத்தாருக்கும். இவர்களிடம் எல்லாம் கேட்கமாட்டாராம்? அப்பாவி தொண்டர்கள் கொடுக்கவில்லை என இவருக்கு கோபமாம்.

# இவை எல்லாம் இருந்தும் தொண்டர்களின் 22 கோடி நிதி ஒரு மூலைக்கும் காணாதாம். அறிவாலய கருவூல அறை அவ்வளவு பெரிதா?

# உண்மையான திமுக தொண்டன் இருந்தால் அவரின் வசனத்திலே கேட்பான், "ஆள்வதற்கு நீங்களும், மாளுதவற்கு நாங்களுமா?"

# ஏதாவது நாம் சொன்னால் "நான் என்ன மறதிநோயினால் அல்லலுறும் தயாளுவை குணப்படுத்த நன்கொடை கேட்டேனா? திருக்குவளை வீட்டையும் கோபாலபுரம் வீட்டையும் பொதுமக்களுக்கு கொடுத்தவன் நான், தமிழன் வாழ......." என நீட்டி முழக்குவார். ஒரு மண்ணாங்கட்டி பொருளும் இருக்காது.

# அண்ணா காலத்தில் தன்னோடு தேநீர் அருந்த 10 ரூபாய், கொடியேற்ற 50 ரூபாய் (இவர் சொந்த கட்சியின் கொடி ஏற்ற அடுத்தவன் பணம் கொடுக்க வேண்டும்) வடை சாப்பிட 15 ரூபாய் என அக்காலத்தில் திரட்டி 11 லட்சம் கொடுத்த சாமார்த்தியசாலி கலைஞர், ஆனால் இப்பொழுது டீ கொடுக்க லட்சம் என அறிவித்தாலும் கட்சியினரே ஏதும் கலந்துவிடும் அபாயம் உண்டு.







Monday, December 21, 2015

தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும்....

தமிழகத்தை மீட்க வந்த, அங்கிள் சைமனின் அடிப்பொடிகள் ஒன்றாவது, அதாவது தமிழகத்தை தமிழன் ஆளவேண்டும் என கதறும் ஒருவராவது, சகாயம் முதலமைச்சர் ஆவதற்கு நாம் தமிழர் கட்சி பாடுபடும் என சொன்னால் நிச்சயம் வாழ்த்தலாம், உங்களின் தமிழக நலன் மீட்பு, திராவிட கட்சிகளை ஒழிப்பது உண்மை என நம்பலாம்.

ஆனால் அங்கிள் மூச் இல்லை. சீடர்களும் அப்படியே கமுக்கம். காரணம் சகாயம் இந்திய நிர்வாக பயிற்சி பெற்றவர். முதல்வரானால் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து தமிழக நலன் காப்பார். அவரால் வளமான தமிழகம்நிச்சயம் சாத்தியம் எனினும், பிரிந்த தமிழ்நாடு சாத்தியமில்லை.


# இங்குதான் அங்கிளின் மங்கிகள் அஞ்சுகின்றன, இவர்களுக்கு தேவை தமிழகம் தனிநாடாக ஆகவேண்டிய ஒரு செய்தி பரபரப்பு. பெரும் இந்திய ராணுவத்துடனான ரத்த களறி. ஒரு பெரும் அழிவில் இவர்கள் தமிழனை இந்தியன் கொல்கின்றான், என ஒப்பாரி வைக்கும் பெரும் அரசியல். அப்படி ஈழத்தில் சகலமும் அழிந்தது போல இங்கும் சுடுகாடாக மாறும் ஒரு வினோத மனநோய்.

# அப்படி ஒரு நிலை வருவதுதான் இவர்கள் ஆசை, "அப்பொழுதும் அங்கிளிடம் பதில் இருக்கும். இங்கு ஆடு மாடு மேய்க்கும் என் உறவுகளே வாருங்கள் ஆஸ்திரேலியாவிலும், டென்மார்க்கிலும் போய் மேய்ப்போம், ஈழத்து உறவுகள் எல்லாம் அப்படித்தான் செய்கின்றன என் இனமே",

‪#‎ஐரோப்பிய‬ நிரந்தர வாழ்கைக்காக அப்பாவி பிரபாகரனை பெரும் கொலைகாரனாக்கி, அந்த நாட்டை சுடுகாடாக்கி, அதனை காட்டி வெளிநாட்டில் செட்டில் ஆனவர்களுடன் "உறவாடினால்" புத்தி இப்படித்தான் போகும்.

# சொந்த நாடு அழியவேண்டும் அதனை காட்டி வெளிநாட்டில் வாழவேண்டும், இதன் பெயர் "மண்டியிடா மானம்"

Friday, December 18, 2015

பீப் சாங்க்....

முதிர்ந்த வயது, அவர் இருக்கும் நிலை ஒரு வித தனிமை ஒரு யோக நிலை,இனி சாதிக்கவேண்டியதோ அல்லது எட்டவேண்டிய இலக்கு என எதுவுமே இல்லாத எல்லாம் கடந்த ஒரு உயர் நிலை.

அந்நிலையிலும் சென்னை வெள்ளத்தின் பாதிப்பிற்கு ஓடி ஓடி உதவுகின்றார். உதவி என்றால் வெள்ளம் வடிந்ததும் படகிலை ரோட்டில் போட்டுவிட்டு வேலைக்கு செல்லும் உதவி அல்ல. மக்களுக்கு இன்றுவரை தன்னால் என்ன செய்யமுடியுமோ அதனை ஓடி ஓடி செய்கின்றார்.

# அந்த நிலையில் அவரிடம் அல்ல யாரிடம் வலிய சென்று, சிம்புவின் பீப் சாங் பற்றி கேட்டால் அதே ****** வார்த்தையால்தான் திட்டியிருப்பார்கள். இவர்களாக அவரை சென்று கடுப்பேற்றுவார்களாம், அவர் காட்டமாக பேசினால் அது தவறாம், போராடுவார்களாம்.


# ஒருவருக்கும் உதவாமல் சென்னையி மார்கழி பஜனை பாடும் கூட்டத்திடம் சென்று இதனை கேட்டிருக்கலாம், அல்லது பின் நவீனத்துவ‌ கவிஞர்களிடம் அந்த *** வார்த்தைக்கு அர்த்தம் கேட்டிருக்கலாம் (அவர்கள் பல அர்த்தம் வைத்திருப்பார்கள்), அதனை எல்லாம் விட்டுவிட்டு அந்நிலையில் இவரிடம் கேட்டால், சீறத்தான் செய்வார்.

# உயர்தட்டு மக்களின் இசை ஆதிக்கத்தை தமிழக சினிமாதுறையில் நொறுக்கி எறிந்தவர் அவர். இன்று ஊடகங்கள் எனும் போர்வையில் ஒழிந்திருக்கும் அந்த வன்மம் இப்படித்தான் வெளிப்படும்.

# எஸ்.ஜே சூர்யா, திரிசா இல்ல நயந்தாரா இயக்குநர், உயிர்,சிந்துசமவெளி படமெடுத்தவர் , இன்னும் பெண்ணின் அங்கங்களை அப்பட்டமாக சொல்லி நவீனத்துவ கவிதை வடிக்கும் பின் நவீனத்துவ எழுத்தாளர்கள் (பெண்களும் உண்டு) இவர்களை எல்லாம் அன்றே இப்படி கண்டித்திருந்தால் இன்று பீப்சாங் வந்திருக்கும்?

# சில பெண்கள், (கவிஞர் தாமரை போன்ற அபூர்வங்களை தவிர) அதாவது தன்னை பெரும் அறிவுஜீவி கவிஞர்கள் என சொல்லி கொள்பவர்களின் கவிதை எனும் கண்றாவிகளை படித்துபாருங்கள், சிம்பு மிக உன்னதமாக தெரிவார், அவைகளை எல்லாம் படித்தால் 1 மாமங்கம் சோறு வாய்க்குள் செல்லாது, அவ்வளவு அருவெருப்பானவை.

உதாரணத்திற்கு ஒரு பெண் கவிஞர் எழுதியது

" அதோ அந்த மாலை சிகப்பு
மாதத்திற்கொரு முறை
நான் தூக்கி எறியும் **** * போல இருக்கின்றதே"

# எப்படி உருவகபடுத்துகின்றார் பார்த்தீர்களா? அந்த கவிஞர் பிரபல பெண் கவிஞர்தான். இதற்கெல்லாம் எந்த மாதர் சங்கமாமது கொடிபிடித்ததா? வழக்கு தொடுத்ததா?. இப்படி எவ்வளவோ காண சகிக்காத கொடுமைகள் உண்டு, மொத்தமாக எல்லாவற்றையும் அல்லவா கண்டிக்க வேண்டும்.

Tuesday, December 15, 2015

டிசம்பர் 1 - 15, 2015 குறும்பதிவுகள்





தெலுங்கு தேசம் என்றொரு ஆந்திர கட்சி உண்டு அது பிரிவினை வாதமா? மலையாளி மலையாளத்தில் ஆள்வதும், கன்னடன் கன்னடத்தில் ஆள்வது போல தமிழன் தமிழனை ஆளவேண்டும், இது தவறா? தவறா?, இதனை சொன்னால் நான் பிரிவினைவாதியா? : அங்கிள் சைமன் சீற்றம்

# அங்கிள், அவர்களை போல இங்கும் தமிழன் முதல்வராக வருவதை எதிர்ப்பவர் யார்? ஆனால் இந்தியாவின் எதிரியான அன்னிய நாட்டு தீவிரவாதியின் படத்தை பிடித்துகொண்டு, அவர்புகழ் பாடிகொண்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தமிழராட்சி, ஈழவிடுதலைக்கு பாடுபடுதல் சிங்களனை கொல்லுதல், தமிழ் இன விடுதலை, உலகார்ந்த தமிழர் விடுதலை, அண்ணன் காட்டிய வழி புலி, என சொல்லிகொண்டிருப்பதுதான் பிரிவினைவாதியாக காட்டுகின்றது.

# இது அங்கிளுக்கு புரியவில்லையா? அல்லது சமார்த்தியமாக மறைக்கின்றாரா, மற்ற மாநிலத்தவர் எல்லாம் எல்லாம் அந்நிய நாட்டு தீவிரவாதிகள் படத்தினை வைத்துதான அரசியல் செய்கின்றார்களா?








உலகிலேயே முதல் முறையாக பாரதம் தயாரித்த ஏவுகணைக்கு சீனா கண்டனம்..., உலகெல்லாம் இனி ஏற்றுமதி , இந்தியா வல்லரசு..மோடி சர்க்கார் அபாரம் : மோடி அடிமைகள்

# கடந்த 2005ம் ஆண்டு ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து தயாரிக்க தொடங்கியதுதான் இந்த ஏவுகனை, அதாவது 65% ரஷ்ய பங்களிப்பு. இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியும் ரஷ்யாவின் மாஸ்கோ ஆறும் கலந்த பிரம்மபுத்திரா-மாஸ்கோ இணைந்த பெயரான பிரம்+மாஸ் என சுருக்கபட்டது.

# ரஷ்யாவிற்கு இதில் பெரும் கட்டுபாடு உண்டு, அவர்களை மீறி நாம் விற்கமுடியாது, இரு நாடுகளும் பயன்படுத்திகொள்ளலாம், ஆனாலும் ஏகபட்ட கட்டுபாடுகள் உண்டு. இதற்குள் பாரதம் மோடி தலமையில் பிரம்மாஸ்திரம் தயாரித்து விட்டது என கடும் கூச்சல்.


# அடுத்த நாட்டு ஆயுதங்களில் அரசியல் செய்வது இந்த நாட்டில் புதிதா என்ன?











"வைகோவுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. அவர் தெருவில் இறங்கி போராடுவது எல்லாம் வெளிவேஷம். என் அனுபவத்தில் சொல்கிறேன்". # தூத்துக்குடி ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல்

# 22 வருடமாக தெரியாத விஷயம் இவருக்கு 2 நாளில் தெரிந்துவிட்டதாம், வை.கோவிற்குத்தான் கொள்கை இல்லை, கலைஞரிடமும் அவரின் சீமந்தபுத்திரனிடம் மட்டும் என்ன கொள்கை குன்று குடியிருக்கின்றது?

# "அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்.." என்பதன் விளக்கமாக வை.கோவினை இப்பொழுது சொல்லலாம், ஈழ புலிகள் இருக்கும் வரை வைகோவோடு இருந்தவர்கள் புலிகள் சரிந்தபின் பறந்தோடுவதுதான் பெரும் மர்மத்திற்குரிய விஷயம்.


 








கடலூரில் சாப்பாடு வழங்க ரூ.40 கோடியா? "வெள்ள நிவாரண ஊழல்" பற்றி விசாரணை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

# முன்பெல்லாம் கட்டுமான பணிகளில்தான் ஊழல் நடக்கும், இப்பொழுதெல்லாம் முட்டை ஊழல், வெள்ள நிவாரண சாப்பாட்டிலும் ஊழல் என தமிழகம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது.

# மொத்த இந்தியா அள்ளிகொடுத்த வெள்ள நிவாரணத்திலும் ஊழலா? இன்னும் ஊழல் செய்ய எது பாக்கி இருக்கின்றது.





பாலசிங்கம்...

1980களில் லண்டனிலிருந்து அவர்அவர் இயக்கத்திற்குள் வந்தார், இயக்கம் புத்துயிர் பெற்றது, எத்தனையோ இக்கட்டுகளிலிருந்தும் பழிகளிலிருந்தும் இயக்கத்தை காத்தார், நடத்த வைத்தார்.

2002ல் அவர் அமைதியானார் சர்ச்சைகள் வலுத்தன, 2006 மாவிலாறு அணைகட்டு பிரச்சினையினை கூட புலிகளால் சமாளிக்கமுடியவில்லை. இறுதிபோர் இதில்தான் தொடங்கியது, பெரும் அழிவோடு புலிகளும் வீழ்ந்தனர், தொடக்கத்திலே சமாளித்திருக்கவேண்டிய பிரச்சினை இது, அன்னார் விலகி இருந்தார், போர் வெடித்தது.

பாலசிங்கம் இருக்கும் வரை பிரபாகரனின் நிழலை கூட தொடமுடியாதவர்கள், பாலசிங்கம் மறைந்ததும் ஓடிவந்து மண்டையில் போட்டனர்.


இதுதான் பாலசிங்கம், புலிகளின் ஒரே பெரும்பலம். அன்னார் இல்லை என்றால் புலிகள் இயக்கம் எப்போது காற்றோடு கலந்திருக்கும்.

# ஒரு பெரும் ராஜதந்திரி, புலிகளின் சாணக்கியன் அவர். புலிகளின் பெருந்தவறு எது என்றால் கே.பத்மநாபன்,கிட்டு,பிரபாகரன்,பாலசிங்கம் போன்றோரின் அடுத்த இடத்தினை இறுதிவரை நிரப்பாமல் இருந்தது, (காரணம் கோஷ்டிமோதல் என்பது ரகசியமல்ல) அதற்கான திறமையாளர்களை உருவாக்காமல் பிரபாகரனை மட்டும் உயர்த்தி பிடித்துகொண்டிருந்தது, அதுதான் புலிகள் வீழ்ச்சி.

# பாலசிங்கம் வாரிசாக, கே.பி வாரிசாக சிலரை உருவாக்கி இருந்தால் புலிகள் இயக்கத்தை தொட்டுபார்த்திருக்கமுடியும்? இருவரின் சர்வதேச தொடர்பும், ராஜதந்திரமும் அப்படியானது. பாலசிங்கத்தின் வீழ்ச்சியே புலிகளின் வீழ்ச்சி.

# இப்படி 30 வருடமாக உடன் இருந்த பெரும் பிம்பங்களுக்கு இவர்களுக்கு எல்லாம் உருப்படியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்காத பிரபாகரன், 3 நிமிடம் சந்ததித்த சீமானிடம் மட்டும் பெரும் போராட்ட பொறுப்பினை ஒப்படைத்தாராம்.

# இங்குதான் தனித்து நிற்கின்றார் வாய்ப்புலி அங்கிள் சீமான்.

# ஆனால் இதனை எல்லாம் பற்றி பேச கூடாது, கலைஞர் ஓழிக, சோனியா ஓழிக அவ்வளவுதான்.