Tuesday, December 15, 2015

பாலசிங்கம்...

1980களில் லண்டனிலிருந்து அவர்அவர் இயக்கத்திற்குள் வந்தார், இயக்கம் புத்துயிர் பெற்றது, எத்தனையோ இக்கட்டுகளிலிருந்தும் பழிகளிலிருந்தும் இயக்கத்தை காத்தார், நடத்த வைத்தார்.

2002ல் அவர் அமைதியானார் சர்ச்சைகள் வலுத்தன, 2006 மாவிலாறு அணைகட்டு பிரச்சினையினை கூட புலிகளால் சமாளிக்கமுடியவில்லை. இறுதிபோர் இதில்தான் தொடங்கியது, பெரும் அழிவோடு புலிகளும் வீழ்ந்தனர், தொடக்கத்திலே சமாளித்திருக்கவேண்டிய பிரச்சினை இது, அன்னார் விலகி இருந்தார், போர் வெடித்தது.

பாலசிங்கம் இருக்கும் வரை பிரபாகரனின் நிழலை கூட தொடமுடியாதவர்கள், பாலசிங்கம் மறைந்ததும் ஓடிவந்து மண்டையில் போட்டனர்.


இதுதான் பாலசிங்கம், புலிகளின் ஒரே பெரும்பலம். அன்னார் இல்லை என்றால் புலிகள் இயக்கம் எப்போது காற்றோடு கலந்திருக்கும்.

# ஒரு பெரும் ராஜதந்திரி, புலிகளின் சாணக்கியன் அவர். புலிகளின் பெருந்தவறு எது என்றால் கே.பத்மநாபன்,கிட்டு,பிரபாகரன்,பாலசிங்கம் போன்றோரின் அடுத்த இடத்தினை இறுதிவரை நிரப்பாமல் இருந்தது, (காரணம் கோஷ்டிமோதல் என்பது ரகசியமல்ல) அதற்கான திறமையாளர்களை உருவாக்காமல் பிரபாகரனை மட்டும் உயர்த்தி பிடித்துகொண்டிருந்தது, அதுதான் புலிகள் வீழ்ச்சி.

# பாலசிங்கம் வாரிசாக, கே.பி வாரிசாக சிலரை உருவாக்கி இருந்தால் புலிகள் இயக்கத்தை தொட்டுபார்த்திருக்கமுடியும்? இருவரின் சர்வதேச தொடர்பும், ராஜதந்திரமும் அப்படியானது. பாலசிங்கத்தின் வீழ்ச்சியே புலிகளின் வீழ்ச்சி.

# இப்படி 30 வருடமாக உடன் இருந்த பெரும் பிம்பங்களுக்கு இவர்களுக்கு எல்லாம் உருப்படியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்காத பிரபாகரன், 3 நிமிடம் சந்ததித்த சீமானிடம் மட்டும் பெரும் போராட்ட பொறுப்பினை ஒப்படைத்தாராம்.

# இங்குதான் தனித்து நிற்கின்றார் வாய்ப்புலி அங்கிள் சீமான்.

# ஆனால் இதனை எல்லாம் பற்றி பேச கூடாது, கலைஞர் ஓழிக, சோனியா ஓழிக அவ்வளவுதான்.

No comments:

Post a Comment