Thursday, September 28, 2017
மு.க.ஸ்டாலின் ஆய்வு
புதிய தலைமுறை டிவி..
Wednesday, September 27, 2017
ஜெ. சிகிச்சை முந்தைய
இவர் ஏன் இப்பொழுது வாண்டடாக வண்டியில் ஏறுகின்றார்.
ஏதாவது சொல்லிகொண்டே இருப்பது தமிழிசைக்கு விதிக்கபட்டது, இனி அடுத்து அம்மணி இப்படி சொன்னாலும் சொல்வார்,
"ஜெயா சாகும் வரை உயிரோடுதான் இருந்தார்".
"மன்மத" அஞ்சலி
வுளை திட்டினதால் தான் மூத்திரப்பை
உயர்ந்தது உன் பாதங்கள்
யாவிலும் உயர்ந்தது உன்
பாதங்கள் இவை என்னின்,
படிவங்கள் எப்படியோ "
யாவிலும் உயர்ந்தது இந்த பாதங்களே"
குறவர்களை பற்றி அங்கிள் சைமன்
தீபா மீண்டும் திருமணமா?
பணமதிப்பு இழப்பு
நேரத்தில், "இது எங்கள் சாதனை எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள்" என கேட்பார்கள்,
தரம் இழந்துவிட்டார் ஸ்டாலின்
3 மாதத்தில் விசாரணை அறிக்கை
ஜெயலலிதா எப்படி இறந்தார்
எச்.ராஜா மணி விழா
ஜெ., சிகிச்சை பெற்ற போது
சிவாஜிகணேசன் தனிக்கட்சி
வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம்
உச்சத்தில் தெரியும் கலைஞன்
Friday, September 22, 2017
இந்தியாஒரு ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்
இது ஜனநாயக நாடு, தமிழ்நாடு அதிலொரு மாநிலம்.
திமுகவிற்கும், அதிமுகவிற்கும் இம்மாநிலம் சொந்தமானது என்பது ஏற்றுகொள்ளமுடியாது.
இங்கு அரசியல் என்பது யாருக்கும் குத்தகைக்கு கொடுக்கபட்டது அல்ல, மக்கள் யாரை ஆதரிக்கின்றார்களோ அவர்கள் ஆசனத்தில் அமர்ந்துவிடலாம்
அந்த ராமசந்திரனே அப்படி மக்கள் ஆதரவுடன் இருந்த மாநிலம்தான் இது.
கமலஹாசனுக்கு என்ன கொள்கை இருக்கின்றது என்பவர்கள், ராமசந்திரனுக்கு என்ன கொள்கை , ஜெயலலிதாவிற்கு என்ன கொள்கை, அட இப்பொழுது இருக்கும் பழனிச்சாமிக்கு என்ன கொள்கை என கேட்பார்களா? என்றால் இல்லை.
இதில் கமலஹாசன் என்ன? சாருஹாசன் கூட வரலாம். வந்து எப்படி மக்கள் வரவேற்பினை பெருகின்றார்கள் என்பதுதான் விஷயம்.
ஆனால் கமல் கட்சி நடத்துவதும் சாமான்ய விஷயம் அல்ல, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக கட்சி வளர்க்க முனைந்த வைகோ, மூப்பனார், விஜயகாந்த் எல்லாம் பட்டபாடு கொஞ்சம் அல்ல.
அதுவும் மூப்பனாருக்கு பின்னபட்ட சதிவலைகள் கொஞ்சமல்ல, இன்றுவரை ரஜினி தயங்கி நிற்பதற்கு மூப்பானாருக்கு ஏற்பட்ட அந்த நிலையே காரணம். அதனை கண்ணால் கண்டவர் அவர்.
எனினும் ஒரு விஷயம் கவனிக்கதக்கது.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வர டெல்லி உதவி இருந்தது, மூப்பனாருக்கும் தொடக்கத்தில் இருந்தது, பின் அவர் தனிகட்சி அடைந்து போராடியபொழுது சிக்கல் வந்தது.
வைகோ எதிலுமே வராத ரகம், அவர் அரசியல் கச்சதீவுக்கு அப்பால் இருந்தது.
ஆனால் விஜயகாந்திற்கு ஒரு உதவியும் இல்லை. திரையுலகமோ தமிழக நிலவரமோ, டெல்லியோ ஒரு ஆதரவுமின்றி களம் கண்டவர் அவர், பின் துரோகத்தில் வீழ்த்தபட்டார்
இப்போது அசுர பலத்தோடு டெல்லி தமிழகத்தில் அடிக்கும் வேளையில் விஜயகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால் அவர் நிச்சயம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கலாம், இப்பொழுது அவரும் தளர்ந்துவிட்டார்.
காற்று கமலஹாசன் பக்கம் அடிக்க ஆரம்பித்திருக்கின்றது.
அவர் எப்படி அதில் தன் பாய்மர கப்பலை செலுத்தபோகின்றார் என்பது இனிதான் தெரியும்.
எனினும் முன்பொரு காலத்தில் இந்திரா தமிழகத்திற்கு வந்தபொழுது விரட்டியதும், அவர் மகன் தமிழகத்தில் கட்சி வளர்க்க துடித்தபொழுது கொன்றே போட்டதும் தமிழ்நாடு.
இங்குள்ள அரசியல் அப்படித்தான். தேசிய கட்சியோ அல்லது இன்னொரு கட்சியோ தலையெடுப்பதில் பல சிக்கல்களும், மிரட்டல்களும் உண்டு.
இதில் கமலஹாசன் நிச்சயம் நெருப்பாற்றை தாண்டியே தீரவேண்டும். அதனை தாண்டுவாரா இல்லையா என்பதை காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
பார்க்கலாம்
ஆனானபட்ட அலெக்ஸாண்டரின் பேரரசு 200 ஆண்டில் சரிந்தது, ரோமானியரின் பேரரசு அழிந்தது, நெப்போலியனோ, முகலாயரோ, பிரிட்டனோ யார் அமைத்த சாம்ராஜ்யங்களும் காலம் காலத்திற்கு நிலைப்பதில்லை
காலமே அமைக்கின்றது, காலமே சரிகின்றது
அப்படிபட்ட உலகில் திமுகவும், அதிமுகவும் கால காலத்திற்கும் நிலைத்துநிற்கும் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாதவை.
செப்டம்பர் 22, 2016
காமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன்.
இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி
இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும்
ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை அவர்கள் சமையல்காரரும் சொல்லவில்லை, அருகிலே இருந்த சசிகலாவு முழு பேட்டி கொடுக்கவுமில்லை
இப்படி இன்னும் வெளிவராத ஆரம்ப தகவல்களே வராத நிலையில் வருடம் 1 ஆகின்றதாம்.
கோடான கோடி செல்வங்களையும், அரண்மனைகளையும் குவித்த ஜெயலலிதா, தனக்கு உண்மையாக அழ ஒருவரை கூட சம்பாதிக்காமல் போனதுதான் சோகம்
சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே
அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது.
முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும்.
சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும்.
போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது.
உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது.
சென்பகராமன் யார் என்றால் இனி ராமராஜன் படத்து ரசிகரா? என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம்?, இனி இந்திய வரலாறு என்றால் கோட்சே,சாவர்கர் அப்படியே இன்னும் பலர் வருவர். மற்றவர் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் வெள்ளையரிடம் செத்தவர்கள்.
பெரும் பதிவாக எழுதவேண்டியவர் சென்பகராமன், இன்னொருவனுக்கு அந்த வரலாறு சாத்தியமே இல்லை. பின்னர் பார்க்கலாம். இப்பொழுது கப்பலில் ஏறுவோம்.
அப்படியாக அந்த கப்பல் ஆசிய கடலுக்குள் நுழைந்தது, அதுவரைக்கும் அதுவரை என்ன, பின்னாளில் ஜப்பான் தாக்கும் வரைக்கும் ஐரோப்பிய நவீன போர்க்கப்பல்களுக்கு ஆசியாவில் வேலை இல்லை, இன்னொரு வகையில் சொல்வதென்றால் இந்தியாவில் நடைபெற்ற ஒரே கப்பல்படை தாக்கம் அல்லது உலகப்போர் தாக்குதல் என்றால் அது இன்றுவரை செனையில் நடந்த எம்டன் தாக்குதல் மட்டுமே.
(இன்று மாறிவிட்ட காலங்கள், இன்னொரு உலகப்போர் வந்தால் பாகிஸ்தான்,சீனாவின் ஏவுகனைகள் நிச்சயம் சென்னையினை குறிவைக்கும், அவ்வளவு இல்லை என்றால் இலங்கையின் நாட்டுவெடிகுண்டாவது நிச்சய்ம் வீசபடும்.)
அது 1914 செப்டம்பர் 22, நவராத்திரி கொண்டாங்களில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்க தொடங்கியது எம்டன்.
ஆடிபோனது சென்னை, இலக்குகளை மிக துல்லியமாக தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின, துறைமுக பணியாளார் 10 பேர் செத்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்க தொடங்கியது.
விளக்கையா அணைக்கிறாய், இதோ பார் தீபம் என பர்மா ஆயில் கம்பெனி குடோனை குண்டு வீசி அழித்தது எம்டன், பெரும் தீ, சென்னைக்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன்.
முதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை காலியானது, கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் காலிசெய்து ஊர் திரும்பினர், இன்றைய நீதிமன்ற, துறைமுக, சென்னை கோட்டை பகுதிகள் எல்லாம் வெடித்த ஷெல்கள் கிடந்தது.
முதல்முறையாக தனது ஆசியபகுதிக்குள் ஜெர்மன் தாக்கியதை கண்டு அலறிய பிரிட்டன் எம்டனை தீவிரமாக தேடியது, இன்றைய காலம் என்றால் செயற்கை கோளின் உதவியில் நொடியில் தீர்த்துவிடுவார்கள், அல்லது நீர்மூழ்கி மூலம் முடிவு கட்டுவார்கள்.
அக்காலம் அப்படியல்ல தேடவேண்டும் அதுவும் கடலில். எம்டனும் கலக்கியது, ஏதாவது ஒரு நாட்டின் துறைமுகத்தில் வேறுநாட்டு கொடிபறக்க, யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிகொண்டு பொருட்களை நிரப்பி கொண்டு பயணித்தது.
திடீரென மலேசியாவின் பினாங்கினை தாக்கியது, கிழக்காசிய பிரிட்டன் காலணிகளை தாக்கியது. அப்படியாக 31 பிரிட்டன் கப்பல்களை மூழ்கடித்தது. அவமானத்தில் சிவந்தது பிரிட்டன்.
காரணம் எங்கள் சாம்ராஜ்யத்தில் இந்துமாக்கடல் "பிரிட்டனின் ஏரி", எம்மை மீறி யாரும் புகமுடியாது என்ற கர்வத்தில் அறிக்கையிட்ட பிரிட்டனுக்கு எம்டன் மகா அவமானத்தை கொடுத்தது.
இனி எம்டனை அழிக்காவிட்டால், ஆசியாவில் பிரிட்டன் வர்த்தகம் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அச்சுறுத்தியது எம்டன் கப்பல்.
வழக்கம் போல மாறுவேடம், அவ்வப்போது அந்நியன் அவதாரம் என சென்றுகொண்டிருந்த எம்டன் கப்பல், ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அருகே ஒரு கப்பலை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, வியாபார கப்பல்போல அச்சிறிய கப்பலின் அருகில் வந்த எம்டன், திடீரென விஸ்வரூபமெடுத்து அக்கப்பலை தாக்கியது, ஆஸ்திரேலியர்கள் கண்டுகொண்டனர், ஓ இவர்தான் எம்டன். இங்குதான் இருக்கின்றார்.
சொல்லபோனால் ஒரு வலை, காரணம் அந்த கப்பலை தூரத்தில் கண்காணித்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் சிட்னி போர்கப்பல்.
சிட்னி கப்பல் மகா நவீனமானது, எம்டனை அழிப்பதற்காகவே கடலில் விடபட்டது, இந்த வலையில் சிக்கியது எம்டன்.
கடும் யுத்தத்தில் கடல் யுத்த வியூகபடி, எம்டனின் அடிபாகத்தை சிட்னியால் உடைக்கமுடியவில்லை, திகைத்தார்கள். ஆனால் கப்பல் தொடர்ந்து இயங்கமுடியாதவாறு எம்டனின் பாய்லர்களை ஆஸ்திரேலியாவின் சிட்னி முந்திகொண்டு உடைத்தது, இன்னொன்று தனியாக சிக்கிகொண்ட எம்டனுக்கு உதவிக்கும் யாருமில்லை.
ஆஸ்திரேலிய படையினரோ குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இருந்தனர், அவ்வளவு பெரும் சாதனையாக அது கருதபட்டது.
முதல் உலகப்போரில் தனி முத்திரை பதித்து, இங்கிலாந்தே அக்கப்பல் "கிழக்கின் அன்னப்பறவை" என ஒப்புகொண்ட எம்டன், சுமார் 200 வீரர்களோடு அழிக்கபட்டது..
அதன்பின்னரே பிரிட்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டது.
சுருக்கமாக சொன்னால் இன்றைய நவீன போர்கப்பல்களுக்கு அதுதான் முன்னோடி, 1972 வங்கபோரில் இந்தியாவின் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானில் எம்டன் என்றே அழைக்கபட்டு, அதனை அழிக்கவந்த பாகிஸ்தானின் நீர்மூழ்கி(அவர்கள் என்று உருப்படியாக செய்தார்கள்? எல்லாம் அமெரிக்க அன்பளிப்பு) விசாகபட்டினம் அருகே மூழ்கடிக்கபட்டதும் பின்னாளைய வரலாறுகள்..
எப்படியோ இன்றுவரை சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே, அந்த பெருமை எம்டனுக்கு மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்பதுதான் சென்னை விரும்பிகளின் பிரார்த்தனை.
குஷ்பூ வேறு சென்னையில் இருப்பதால் சற்று கூடுதலாகவே பிரார்திக்க வேண்டியிருக்கின்றது.
Thursday, September 21, 2017
பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம்...
இந்த பன்னீர் செல்வம் என்பவர் சுத்த மோசம். வழக்கம் போல தர்மயுத்தம் தொடர்பாக ஏதோ பேசியிருப்பார் என அவர் செய்தியினை படித்துவிட்டு மகா சிக்கலில் இருக்கின்றேன்.
அவர் சொன்னதை கேட்டு கத்தி, ஓஓ என சிரித்து அதுவும் தாளாமல், உருண்டு புரண்டு சிரித்ததில் இருக்கையும் மேஜையும் அல்லோல பட்டுவிட்டது. எல்லாம் அடுக்கி வைத்துகொண்டிருக்கின்றேன்
எல்லோரும் ஒரு மாதிரி பார்த்துவிட்டார்கள், இனி எப்படியெல்லாம் விசாரணை வருமோ தெரியாது.
ஒரு சிலர் இன்றே தர்காவிற்கு அழைத்து செல்வது போல பரிதாபமாக பார்கின்றார்கள். இது சீனர்களுக்கு பேய் மாதமாம், அவர்கள் வேறு பயந்துவிட்டார்கள்.
மனிதர் இப்படியா பெரும் சிக்கலை ஒருவனுக்கு உருவாக்குவார்?, சத்தியமாக ஜெயலலிதா ஆன்மா இவரை சும்மா விட கூடாது
அப்படி என்ன சொல்லி விட்டார்?, அலுவலகத்தில் அல்லது முக்கியமான கூட்டத்தில் , துக்க வீட்டில் இருப்பவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டாம்
அவர் சொன்னது இதுதான்
...
...
..
"என்னை போல நல்ல அரசியல்வாதிகளை உருவாக்கும் பெரும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கின்றது"
வாமணன் : நெப்போலியன் வரலாறு : 4
சிறையில் இருந்து வெளிகொண்டுவந்து வெண்டி கலரங்களை அடக்கு என நெப்போலியனை அனுப்பினாலும் அவன் செல்லவிரும்பவில்லை
தன் பதவியினை இறக்கம் செய்து அவனை போக சொன்னது அவனுக்கு பெருத்த அவமானம், மகாபாரத கர்ணன் போல துடித்தான், ஆனாலும் ராணுவ பணியாள் என்ன செய்யமுடியும்
என் உடல்நலம் சரியில்லை, யுத்தத்தில் ஈடுபட முடியாது என மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்துவிட்டு அமர்ந்துவிட்டான். அவனை என்ன செய்ய என யோசித்த அதிகார வர்க்கம் அவனை துருக்கி பக்கம் தூக்கியடித்தது.
அன்று ஆட்டோமன் துருக்கியர் மிக வலுவாக இருந்தனர். அவர்களை வெல்ல எந்த ஐரோப்பிய நாடாலும் முடியவில்லை, மொத்த ஐரோப்பா சேர்ந்தாலும் நடக்கவில்லை
அதனால் நிலவழியினை விட்டுவிட்டு கடல்வழியே இந்தியாவோடு வாணிபம் செய்தன ஐரோப்பிய நாடுகள், அந்த அளவிற்கு இரும்பு நாடாக இருந்தது ஆட்டோமன் துருக்கி
அவர்களுக்கும் பிரான்சுக்கும் சில ஒப்பந்தங்கள் இருந்தன, அப்படி நெப்போலியனை அங்கு பணிக்கு அனுப்பினார்கள், ஏதோ கிளர்க் வேலை போல பார்த்துகொண்டிருந்தான்
அது ஒப்புக்கு சப்பான வேலை, அவனுக்கு நிறைய ஓய்வு இருந்தது. அப்பொழுதுதான் அவன் மிக சிறந்த ரொமான்டிக் நாவலை எழுதினான்
உண்மையில் அவன் மிக மிக ரசனைக்காரன், நிறைய வாசித்ததால் அவனுக்கு எழுத்து கலையும் அட்டகாசமாக வந்தது. ஊரில் வேறு ஒரு பெண்ணை ஒருதலையாக சுற்றிகொண்டிருந்தான். அதனை பின்புலமாக கொண்டு காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிமுடித்தான்.
ஒரு போர்வீரனுக்கும் அவன் காதலிக்கும் நடக்கும் காதல் கதை அது, ஆச்சரியமாக அது பின்னாளில் அவனுக்கே நடந்தது
தன் வாழ்வின் பின்னாளைய சம்பவத்தை அன்றே கனவாக கொண்டிருந்தான் போலும்.
துருக்கியின் கான்ஸ்டாண்டி நோபிளில் அவன் பணி செவ்வனே முடிந்து பாரீஸ் திரும்பினான்.
ஆனால் அந்த அதிகாரிகளின் கோபம் அப்படியே இருந்தது, வெண்டி செல்ல மறுத்த காரணத்தால் அவனை சஸ்பெண்ட் செய்தார்கள்.
வேலை போன விரக்க்திக்கு உள்ளானான், அவன் மனநெருக்கடி அதிகரித்தது.
பிரான்ஸுக்காய் யுத்தம் நடத்தினேன், பிரென்ஞ் மக்களை கூட்டு சேர்த்தேன் அதற்கு ஏன் என்னை குறிவைத்து அடிக்க்கின்றார்கள் என நொந்துகொண்டான்.
பிரான்சில் கலவரங்கள் அதிகரிக்க தொடங்கின, பாரீஸ் வரை வன்முறை பரவிற்று. அடக்க முடியாமல் அதிகார வர்க்கம் தவித்தது.
அந்த அதிகாரிகளில் பால் பேரஸ் என்றொருவர் இருந்தார், நெப்போலியனின் தீரமிகு யுத்தத்தை நேரில் பார்த்தவர், அவன் அனாசயமாக கலவரங்களை கட்டுபடுத்துவதை கண்ணார கண்டவர்.
அவர் தன் அதிகாரிகளுக்கு யோசனை சொன்னார், பாரீஸ் எரிந்துகொண்டிருக்கின்றது, ஈகோ பார்க்க நேரமில்லை. நெப்போலியனால் இக்கலவரங்களை எளிதில் அடக்க முடியும், அவனால் முடியாவிட்டால் எவனாலும் முடியாது.
அதிகாரிகளும் யோசித்தனர், நெப்போலியனுக்கு அழைப்பு விடுக்கபட்டது, வந்து நின்றான்
"உன் திறமை மீது எப்பொழுதுமே எங்களுக்கு நம்பிக்கை உண்டு, ஏற்கனவே புரட்சியாளர்களுடன் சேர்ந்தாய் என்ற கருப்பு புள்ளியில்தான் உன் தகுதி குறைந்தது.
இதோ உனக்கான வாய்ப்பு, அந்த புரட்சியாளர்களே பாரீஸ் தெருக்களில் அட்டகாசம் செய்கின்றார்கள், இவர்களை அடக்க உன்னை அனுப்புகின்றோம், அடக்கினால் நீ குற்றமற்றவன் என்பதை ஒப்புகொள்கின்றோம்"
நிமிர்ந்து பார்த்தான் நெப்போலியன், என் பதவியில் என்னை அமர்த்தினால் செல்வேன் என்றான்
அது என்ன பதவி? அதனை விட பெரும் பதவியாக இந்த கலவர தடுப்பு படைக்கு உன்னை தளபதியாக நியமிக்கின்றோம் என்றார்கள்.
கிளம்பினான் நெப்போலியன், படைகளை தயார் செய்தான். தன் குதிரையில் தாவி ஏறினான்
பாரீஸ் தெருக்களை படிபடியாக கைபற்றினான், அவன் பக்கமும் இழப்பு இருந்தது ஆனால் அசரவில்லை
நெப்போலியன் வந்தபின் அரசபடைகளின் கை ஓங்கியது. அட்டகாசமாக முன்னேறினான். அவனது வியூகத்தில் எதிரிபடை திணறியது.
அந்த யுத்தத்தை 2 நாட்களில் முடித்து கலவரத்தை அடக்கினான். வெற்றி வீரனானான்
பெரும் ரத்த ஆறுடன் பிரான்சின் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டுவந்தவன் அவனே. அந்த பெருமிததத்துடன் அரசு இயக்கும் டைரக்டர் குழு முன் நின்றான்
அக்குழு அவனை பிரென்ஞ் படையின் தளபதியாக உயர்த்தியது. 24 வயதில் பிரெஞ்ச் தளபதியாக அவன் பொறுப்பேற்றபொழுது பிரான்சே அவனை வித்தியாசமாக நோக்கியது, இந்த சிறுவயதில் எப்படி அவனால் முடிந்தது?
பதவிக்கு வந்ததும் யார் தனக்கு உதவினார்கள் என விசாரித்தான், பால் பேரசின் பெயர் அடிபட்டது.
ஆனால் பால் பேரஸ் யுத்ததில் கொல்லபட்டிருந்தார், எனினும் அவர் வீட்டை பார்க்க கிளம்பினான்
அந்த வீட்டில்தான் நெப்போலியனின் எதிர்காலம் இருக்கின்றது, அவன் வாழ்வு அங்குதான் மறுஜென்மம் எடுக்க போகின்றது என்பது அவனுக்கு தெரியாது.
வீட்டிற்கு சென்ற நெப்போலியன் அந்த பால் பேரஸ் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பி பார்த்தான்
இரு குழந்தைகளோடு அவள் நின்றுகொண்டிருந்தாள்.
அவள் தான் ஜோசபைன். பால் பேரஸின் மனைவி.
அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே உறைந்து போய் நின்றான் நெப்போலியன். அந்த பெரு வீரனின் மனம் அவளை கண்டதும் காதலில் விழுந்தது.
அவள் ஒன்றும் அப்படி பிரமாதமான அழகி அல்ல, ஆப்ரிக்க வம்ச கலப்பு, பல்வரிசை வேறு கோணல். அழகு என்றெல்லாம் சொல்லமுடியாது.
குஷ்பூ வீட்டு வாசல் திருஷ்டி பொம்மைக்கு கூட அவளை வைக்க முடியாது, ஆனால் குஷ்பூ இல்லா அக்காலத்தில் அவளே நெப்போலியனுக்கு அழகியாக தெரிந்தாள்
இந்த யழவு காதல் அப்படித்தான், அவரவர் கண்ணிற்கு அவரவர் அழகு. அது முன் ஜென்ம தொடர்போ, ஜாதக அம்சமோ, மன்மத பாணமோ எதுவொ ஒன்று.
அழகில்லாத ஒருவர் இன்னொருவர் கண்ணுக்கு பெரும் அழகியாக தெரிவதெல்லாம் விதிப்பயன்.
ஜோசப்பின் பூர்வீகம் ஆப்ரிக்கா, அவளின் பாட்டி மாந்தீரிகம் மற்றும் ஜாதகத்தில் பி.எச்டி முடித்த நிபுணர்
ஜோசபினுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தார், நீ ஒரு நாளில் நாட்டிற்கே மகா ராணியாவாவாய். நிச்சயம் நடக்கும்
ஆனால் ஒரு ராணுவ அதிகாரி மனைவியாய் வாழ்ந்தவள் ஜோசபின், இனி அவரும் இல்லை. விதவை வாழ்வு
இனி அந்த ஜாதகம் எல்லாம் பலிக்குமா? எல்லாம் சும்மா. 4 வீடுகளில் பாத்திரம் தேய்த்து இந்த பிள்ளைகளை வளர்க்க வேண்டியதுதான் என நினைத்துகொண்டு நெப்போலியன் முன்னால் நின்றாள்.
விதி தள்ளி இருந்து புன்னகைத்தது, அது ஜாதக பிரகாரம் வழி போட்டு கொடுத்தது
கண்களால் பேசினான் நெப்போலியன், அவனின் குறிப்பறிந்தாள் ஜோசப்பின்
வீடு திரும்பிய நெப்போலியன் செய்த முதல் காரியம் தனக்கு நிச்சயம் செய்திருந்த பெண்ணை வேண்டாம் என சொன்னது
அவன் நினைவெல்லாம் ஜோசபின் நிறைந்திருந்தாள், அவனுக்கு வயது24 அவளுக்கு வயது ஏறகுறைய 30.
காதலுக்கு ஜாதி, மதம், இனம் மட்டுமல்ல, வயதுமில்லை என சொல்லிகொண்டிருந்தான் நெப்போலியன்.
அவன் ஏகபத்தினி விரதன் எல்லாம் அல்ல, தீராத விளையாட்டு பிள்ளை அதில் சந்தேகமே இல்லை. அவன் குதிரையில் யுத்தகாலம் தவிர பெண்கள் அமர்ந்தே இருந்தார்கள்.
ஆனால் ஜோசபினை பார்த்த மாத்திரத்தில் கட்டுண்டு கிடந்தான்.
கடிதங்கள் எனும் பெயரில் அழியா காவியங்களை அவன் அவளுக்கு எழுத தொடங்கினான். ஒவ்வொரு கடிதமும் ஒரு ரோஜாவுடன் அவள் வீட்டுக்கு வர தொடங்கியது.
வாமணன் வருவான் ...
"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்
"பேரறிவாளனின் வாழ்க்கை ஓர் இனத்தின் வரலாறு" : இயக்குநர் வெற்றிமாறன்
ஓஹோ, அந்நிய நாட்டு தீவிரவாதி, தன் தேசத்து தலைவனை கொலை செய்ய துணை போனதெல்லாம் வரலாறா?
அது வரலாறென்றால், இந்த வெற்றிமாறன் ஒரு அசிங்கமான துரோகத்தின் வரலாறு. இச்செய்திகளை வெளியிடும் விகடன் ஒரு தேசவிரோத வரலாறு.
மிஸ்டர் வெற்றிமாறன், இந்த மலையூர் மம்பெட்டியான், ஆட்டோ சங்கர், வீரப்பர் எல்லாம் உங்கள் வரலாற்றில் வரமாட்டார்களா?
இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...
அந்த திருமுருகன் காந்தி என்ன நாட்டிற்காக பல ஆண்டு சிறையில் இருந்துவிட்டா வருகின்றான்?
ஏதோ சீனாவுடன் யுத்தம் புரிந்து அதில் அகபட்ட கைதி 14 வருடம் சிறையிருந்து வருவது போலவும், பெரும் தேசபக்தன் ஒருவன் சிறைமீள்வது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்,
என்ன கிழித்துவிட்டான் என்று இவருக்கு இவ்வளவு பில்டப்? சிறை சென்றுவிட்டாராம்.
ஆட்டோ சங்கர் கூட சிறையில்தான் இருந்தான், வீரப்பன் கூட்டாளிகள் இன்னும் சிறையில் இருக்கின்றனர்.
தேசத்திற்கு எதிரான வழக்கில் உள்ளே சென்றுவிட்டு வருபவருக்கு ஏன் ஆர்பாட்டம்?
மே 17ல் முள்ளிவாய்க்காலில் செத்தார்கள் என கடலுக்கு மெழுகுவர்த்தி பிடித்ததை விட அவர் இத்தேசத்திற்கு செய்தது என்ன?
அதுவும் செத்தது அடுத்தநாட்டுக்காரர்கள்
மே17க்கு முன்பு இந்தியா அந்த ஈழவிவகாரத்தில் எவ்வளவு இழந்தது என்பது பற்றியெல்லாம் திருமுருகன் பேசினாரா என்றால் இல்லை.
மாறாக சும்மா மே 17 , பங்குனி 17 என ஒப்பாரி வைத்துகொண்டே இருப்பது.
பிரபாகரனோடு பழகிய ப.சிதம்பரம் முதல் பண்ருட்டி ராமசந்திரன் வரை எத்தனையோ பேர் தமிழகத்தில் உண்டு. அவர்கள் எல்லாம் சும்மா இருக்க, இவர் குதிப்பாரம்.
அதுவும் மெரினாவில் மே 17 என ஓலமிடுவது அதற்கு சற்று தள்ளி இருக்கும் ராஜிவ் நினைவிடத்தை அப்படியே மறந்துவிடுவது. இதன் பெயர்தான் நினைவேந்தல், இதனை செய்யும் திருமுருகன் ஒரு போராளி.
முதலில் இலங்கையில் புலிகளால் கொல்லபட்ட 1500 இந்திய வீர்களுக்கு மெரீனாவில் ஒரு நினைவு தூண் கட்டபடவேண்டும்
அதன் பின் எவன் மே 17 என மெழுகு பிடிக்கின்றான் என பார்க்கலாம்
மெழுகுவர்த்தி பிடித்தவன் எல்லாம் தமிழின தியாகி எனும் அளவிற்கு தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கின்றது.
இனி மாதா கோவிலில் மெழுகுவர்த்தி பிடிப்பவனும் தியாகி ஆகலாம்...
ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?
விஜயகாந்தும் நானும்தான் மக்களுக்காக கட்சி தொடங்கினோம், நான் அவரை மிக மதிக்கின்றேன் : சீமான்
இப்படி ஒரு பல்டியினை யாராவது அடிக்க முடியுமா? ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீரர்களால் கூட முடியாது.
அந்த விஜயகாந்தினை தெலுங்கன், வந்தேறி என்றெல்லாம் எப்படி எல்லாம் தூற்றினார் சீமான். அதுவும் விஜயகாந்த் கட்சியின் மைக்கேல் ராயப்பனை அதிமுக கவ்விகொண்டு போக, அப்பொழுது விஜயகாந்திற்கு பதில் கொடுத்தது எல்லாம் சீமான் தான்.
அதிமுக அப்பொழுது அமைதியாக இருந்தது, அதன் பிரதிநிதியாக கத்திகொண்டிருந்தார் சைமன்.
வைகுண்டராஜனை விஜயகாந்த் குற்றம்சாட்டிய பொழுதெல்லாம், அவர் வீட்டு புல்டாக் நாயாக கத்தியது இந்த சீமானே.
விஜயகாந்தினை எப்படி எல்லாம் திட்டினார் என்பதற்கு அவரின் முன்னாள் பேச்சுகளே சாட்சி
இப்பொழுது அவர் விஜயகாந்தினை மிக மதிக்கின்றாராம், அவரை பாராட்டுகின்றாராம்.
அதாவது ஜெயலலிதா இல்லை, நடராஜன் கும்பல் அரண்டு போயிற்று, தாதுமணல் சிக்கலில் வைகுண்டராஜனுக்கும் தலைவலி.
முன்பு போல அங்கிருந்து கொட்டபடவில்லை, இனி அவர்களுக்கும் எதிர்காலமில்லை.
அன்னார் அதனால் நைசாக விஜயகாந்த் பக்கம் நூல்விட்டு பார்க்கின்றாராம்..
ரஜினியினை எப்பொழுது பாராட்ட போகின்றீர் மிஸ்டர் சைமன்?
இதெல்லாம்...................
காவேரியினை மீட்டதா? : தமிழிசை
காவேரி பிரச்சினைக்கு 18 ஆண்டுகள் மத்தியில் கூட்டணியிலும், பல ஆண்டுகள் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த திமுக என்ன செய்தது? காவேரியினை மீட்டதா? : தமிழிசை
அப்படி கேளுங்கள் அக்கா, அவர்கள்தான் துரோகிகள், சுயநலவாதிகள், தமிழகத்தை சீரழித்தவர்கள்
அந்த 18 ஆண்டில் வாஜ்பாய் காலமும் உண்டு மேடம், அப்படியானால் பாஜகவும் காவேரியில் துரோகம் செய்தது என சொல்வீர்களா?
சரி 3 ஆண்டுகளாக உங்கள் மோடி என்ன செய்கின்றார்? நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? கன்னடத்திலும் பாஜக ஆட்சி நடந்தது, காவேரியினை மீட்டு வந்தால் என்ன?
திமுக 18 ஆண்டுகள்இருந்தே முடியவில்லை, எங்களுக்கு 25 ஆண்டாவது அவகாசம் வேண்டும் , அப்பொழுதுதான் காவேரி வரும் என மட்டும் சொல்லிவிடாதீர்கள், பயங்கர கோபம் வரும் ஆமாம்.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு
இந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட பல வழக்குகளில் சென்னைக்கு புகழ்மிக்க வழக்கறிஞர்கள் எல்லாம் வருகின்றார்கள்.
கபில் சிபல் வருகின்றார், இன்னும் இந்தியாவின் முண்ணணி வழக்கறிஞர்கள் எல்லாம் வந்து ஆஜராகின்றார்கள்.
அழைத்துவருவது யார்? இங்குள்ள கட்சிகள்.
ஆனால் காவேரி வழக்கிற்கோ, அனிதா வழக்கிற்கோ இவர்களை அமர்த்தினார்களா என்றால் இல்லை. அங்கெல்லாம் தேங்காய் மூடி வக்கீல்களை வைத்து வாதாடிவிட்டு இங்கு குதிப்பார்கள்.
ஆனால் இவர்கள் வழக்கு என்றால் என்ன பணம் செலவழித்தும் பெரும் வக்கீல்களை அழைத்து வருகின்றார்கள்?
அது அதிமுகவோ, திமுகவோ இரண்டும் அப்படித்தான்.
சொத்துகுவிப்பு, ஸ்பெக்ட்ரம் இதோ இந்த இந்த சுயநல வழக்கிற்கு அள்ளி செலவழிப்பவர்கள், நீட் காவேரி உட்பட தமிழக பொதுநல வழக்கில் ஒரு பைசா செலவழிப்பதில்லை.
ஏன் நீட் தேர்வில் அனிதாவிற்காக இந்த கபில் சிபலை திமுக வைத்து வாதாட கூடாதா? பால் நரிமனை அமர்த்தியிருக்க முடியாதா?
அனிதா செத்தவுடன் அள்ளி கொடுப்பவர்கள், அவள் தரப்பு நியாயத்தை வைக்க நல்ல வழக்கறிஞரை அமர்த்தினார்களா என்றால் இல்லை, ஏன் என்றால் அப்படித்தான்
ஆனால் அனிதா செத்துவிட்டாள் என ஒப்பாரி வைத்ததும் இவர்களே..
இதோ காவேரி வழக்கு நடக்கின்றது, யாரோ ஒரு வண்டு முருகன் உளறிகொண்டிருக்கின்றார்.
ஆனால் கபில் சிபல் திமுக சார்பாக உள்ளூர் பிரச்சினைக்கு சென்னையில் ஆஜராகின்றார்.
இதனை சொன்னால் நீ பக்தாள், நீ ஆரிய அடிவருடி, நீ திராவிட எதிரி, தமிழின துரோகி என பல பட்டம் சூட்ட பொங்கிகொண்டு வருவார்கள்.
பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு
பிரபாகரனுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவு சின்னம் எழுப்ப வேண்டும் : சிங்கள புத்த பிக்கு
முன்பே சொல்லியிருந்தோம், இலங்கையில் இந்திய படைகளை எதிர்த்து விரட்டவேண்டிய சிங்களனுக்கு உதவியாகத்தான் புலிகள் போராடினர்
அதாவது இலங்கை ராணுவம் ஈடுபடவேண்டிய மோதலில் புலிகள் ஈடுபட்டனர். அவ்வகையில் அவர்கள் செய்தது இலங்கை தேசியத்திற்கான பெரும் உதவி.
அப்படி ஒரு காலத்தில் இந்திய படைகளை விரட்டிய பெரும் இலங்கை மாவீரன், தேசபக்தன் என பிரபாகரன் கொண்டாடபடுவார் என நாம் முன்பே சொன்னதை நீங்கள் கவனித்தீர்களோ இல்லையோ தெரியாது.
ஆனால் நடக்க தொடங்கிவிட்டது.
இதோ தொடங்கிவிட்டார்கள், கொஞ்ச நாளில் இலங்கை பாராளுமன்றத்திலும் அவர் படம் இடம்பெற்றாலும் ஆச்சரியமில்லை.
ஆக சிங்களன் இலங்கைக்கு மகா விசுவாசமானவனாக பிரபாகரனை தூக்க ஆரம்பித்துவிட்டான். இந்திய தமிழர்களுகுத்தான் சொரணையே இல்லை
இனியாவது தமிழக தமிழர்களுக்கு சொரணை வரட்டும்.
முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை
நவராத்திரி விழாவிற்காக ஊரெல்லாம் கொலு வைக்கின்றார்களாம். அழகான பொம்மைகள் வாங்கி அடுக்குகின்றார்களாம்
இதனை விடவா அழகிய கொலுபொம்மை உலகில் கிடைத்துவிடும்? "தெய்வீக கொலு" பொம்மை இதுதான்.
இந்த பொம்மையினை வைக்காமல் எந்த கொலுவும் முழு நிறைவு அடையவே அடையாது.
முப்பெரும் தேவியரும் ஒன்றான பேரழகு இந்த பொம்மை,
சங்கத்தின் கொலுவின் எல்லா சிலைகளும் இது மட்டும்தான்.
இந்த உலகிற்கு மிக அழகிய கொலு பொம்மையினை அடையாளம் காட்டியதில் சங்கம் பெருமையடைகின்றது.
நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது
நவராத்திரி திருவிழா கொலுவுடன் தொடங்கியிருக்கின்றது, இந்து நண்பர்களுக்கு அடுத்த 9 நாட்களும் முக்கியமான நாட்கள், மகா சிரத்தையாக ஒன்பது நாட்களும் நோன்பிருப்பார்கள், பத்தாம் நாள் விஜயதசமி கொண்டாட்டத்தோடு நிறைவு பெறும்.
ஒன்பது நாட்கள் நோன்புடன் பிரார்த்தித்து, பத்தாம் நாள் ஆசியோடு நிறைவு செய்வது என்பது இந்து மதத்தில் மட்டுமல்ல, பழமையான ஆசிய,ஐரோப்பிய மதங்களிலும் உண்டு, கலாச்சாரங்களிலும் உண்டு.
அவ்வளவு ஏன் ரோமன் கத்தோலிக்க மதத்தில் ஒரு கத்தோலிக்க ஆலய திருவிழாவோ அல்லது சிறப்பு ஜெபங்களோ 9 நாள் தொடர்ந்து பிரார்த்தித்து பத்தாம் நாள் நிறைவு செய்யவேண்டும் என்பது சட்டம்.
அதனை ஆங்கிலத்திலும், லத்தீனிலும் "நவனா" என்றே அழைப்பார்கள், லத்தீனிலும் ஒன்பது என்பதற்கு நவம் என்றே பெயர். தமிழில் நவநாள்.
அதனடிப்படையில் அனைத்து கத்தோலிக்க திருவிழாக்களை பாருங்கள் 9 நாள் ஜெபம், பத்தாம் நாள் கிடா வெட்டி கொண்டாட்டம் + தேர் பவனி என நிறைவு செய்வது, என இதே நவராத்திரியை "நவநாள்" என கொண்டாடுவார்கள். (11ம் நாள் திருவிழா செலவு கணக்கு பார்பார்கள்)
பிரிவினை கிறிஸ்தவர்கள் வேறுமாதிரி, ஆளாளுக்கு ஒரு போதனை, ஆளாளுக்கு ஒரு கொள்கைகளும் பத்திரிகைகளும், இப்பொழுது ஆளாளுக்கு டி.விகள், அதிரடியான மிரட்டல்கள் கூடவே சாபங்கள், அவர்கள் வேறு மாதிரி, மாட்டிகொண்டால் அவ்வளவுதான்,, பிராண்டி எடுத்துவிடுவார்கள்.
இந்தியாவில் தீபாவளி போலவே ஒட்டுமொத்த இந்திய மக்களும் கொண்டாடும் திருவிழா இந்த பூசை திருவிழா, வங்காளத்தில் துர்கா பூஜை, வட இந்தியாவில் காளி பூஜை கூடவே ராவண வதமான ராம்லீலா தென்னிந்தியாவில் தசரா, முத்தாய்ப்பாக ஆயுதபூஜை என கொண்டாடி மகிழும் வேளை இது.
ஒன்பது நாளும் விரதம் இருக்கவேண்டும், விரதம் இருக்கிறேன் என உண்ணாமல் இருக்கிறேன் அதனால் உறங்குகிறேன் என்றால் பராசக்திக்கே பனிமலை உருகும் அளவு கோபம் வருமல்லவா?
விரதம் என்றால் தியானிக்க வேண்டும், உணவை மறந்து இறைசக்தியை நோக்கி மனம் திருப்ப வேண்டும், ஒருவேளை கண்ணோ, மனமோ எங்காவது தறிகெட்டாலும் கூட அதனை கட்டுபடுத்தி இழுத்துவர சில காட்சிகள் வேண்டும், விரத காலம் எனும் நினைவு மனதில் இருந்துகொண்டே இருக்கேவேண்டும், அந்த உணர்வினை ஏற்படுத்தவே அமைக்கபட்டது தான் கொலு அலங்காரம்.
கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள், கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்,
முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம், 2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம், 3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.
4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம், 5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐஉயிர் வடிவங்களும், 6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து
7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும், 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும், 9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,
7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.
9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும், பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.
மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.
இதுதான் கொலுவின் தத்துவம், நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் சக்தி தேவிக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் பிரதான பூசைகள் நடைபெறும், சர்க்கரை பொங்கல்,சுண்டல் என மாலைபொழுது களைகட்டும்.
மிக மிக சுகமான காலங்கள், மகிழ்வான தருணங்கள், ஒவ்வொரு நாளுக்கும் ஒரு இறை தத்துவங்கள், என இந்து நண்பர்கள் கடவுளை நினைத்து உருகும் காலமிது.
சில விஷயங்கள் மதம் சார்ந்தவை, விஜய தசமி பாரம்பரிய நம்பிக்கை சார்ந்தது, ஆனால் இன்னும் சில விஷயங்கள் மத எல்லைகளையும் தாண்டி எல்லா மக்களுக்கும் போதனைகளை கொடுப்பது.
அதன் சிறப்புகள் மிக உயரமானது, எல்லா வகையிலும் இறைவனை போற்றி நிற்பது, வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் இறைவனை காண்பது எப்படி என்பதை பாரதம் உலகிற்கு சொன்ன பெரும் போதனையின் அடையாளங்கள் அவை.
ரொகிங்கியா பிரச்சினைதான் என்ன?
உலகம் முழுக்க ஏராளமான இனங்கள் உண்டு, அவைகள் எல்லாம் சில நேரம் இணைந்தோ, பல நேரம் தனியாகவோ வாழ்த்துகொண்டிருந்தன
அப்படி பர்மாவில் இருந்த இனம்தான் ரொகிங்யா, அது பர்மாவில் ஓர் இனம். தமிழக செட்டியார்கள் பர்மாவினை கட்டியாண்ட பொழுது, அவர்கள் ரொக்கைன் மாநிலத்தில் இருந்திருக்கின்றார்கள், அவர்களுக்கும் மொழி இன்னபிற விஷயங்கள் இருந்திருக்கின்றன
அதாவது சைமன் பாணியில் சொல்வதானால் அது ஒரு தேசிய இனம்.
அவர்களுக்கும் ஒரு காலத்தில் அரசன் எல்லாம் இருந்திருக்கின்றான், பர்மியர்களுக்கும் அவர்களுக்கும் அன்றே பொருந்தவில்லை, பர்மாவின் கடற்கரை பகுதி அது என்பதால் வங்கதேசத்துக்க்கும் அவர்களுக்கும் தொடர்பு அன்றே இருந்திருக்கின்றது.
பின்பு பிரிட்டன் வந்தபொழுதும் அவர்களை பர்மா குடிமக்களாக நடத்தியிருக்கின்றது. வங்கம், பர்மா, ரொகிங்யா எல்லாம் பிரிட்டனிடம் இருந்தவரை அவர்களுக்கு சிக்கல் இல்லை
பின்பு சிக்கல் பர்மா சுதந்திரபோரில் தொடங்கியிருக்கின்றது, பர்மாவின் சுதந்திர தந்தை ஆங்சான். அவர் ஒரு கம்யூனிஸ்ட் போராளி.
பர்மா விடுதலையின் பொழுதே ரொகிங்கியா மக்கள் தனிநாடு கோரினர்.
பொதுவாக தான் ஆண்ட நாடுகளில் ஏதாவது கொளுத்திபோடுவது பிரிட்டன் ஸ்டைல். இந்தியா பாகிஸ்தான், ஈழம் சிங்களம் என பிரித்துபோட்டு ரசிப்பார்கள்
அப்படி ரொகிங்கியா சிக்கலை தூண்டிவிட்டார்கள், ஆனால் ஆங்சன் அதனை வேறுமாதிரி கையாண்டார்
நாமெல்லாம் பர்மியர்கள் , நீங்கள் இப்பொழுது தனிநாடு கேட்டால் பர்மா விடுதலை சிக்கலாகும் அதனால் முதலில் நாம் ஒற்றுமையாக விடுதலை கேட்கலாம், அதன் பின் உங்களை பர்மாவோடு இணைப்போம் என்று காய் நகர்த்தினார்
அப்படி மைனாரிட்டி ரொகிங்கியா அமைதியாக, பர்மா விடுதலையும் பெற்றது.
(இல்லாவிட்டால் கிழக்கு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக ரொகிங்யா மாறியிருக்கும்.)
இனி ரொஹிங்யா பர்மாவின் ஒரு பகுதி என்றார் ஆங்சன், ஆனால் அம்மக்களை முறையாக இணைத்து குடியுரிமை கொடுக்கும் முன் கொல்லபட்டார்.
ஆங்சனின் மரணமே ரொகிங்யா மக்களின் கண்ணீருக்கு முதல்படி
அதன் பின் ஏகபட்ட குழப்பம், தமிரர்களை விரட்டுதல்,
அண்டை நாட்டு அரசுகள் கண்ணசைவில் ராணுவ ஆட்சி என ஏக சிக்கலுக்குள் பர்மா சிக்க ரொஹிங்க்யா மக்களை பற்றி கவலைபட பர்மா அரசுக்கு தெரியவில்லை
குடியுரிமை இல்லை, நாட்டு மக்கள் என்ற அடையாளமில்லை, எப்படி ரொகிங்க்யா மக்கள் வாழமுடியும்? கேட்டால் பதிலே இல்லை
ஒரு கட்டத்தில் அவர்கள் வன்முறையில் இறங்க, இத்தரப்பில் புத்த குருக்கள் இறங்க, நீங்கள் வங்கத்தில் இருந்து வந்தவர்கள் அங்கே போங்கள் நிலம் எங்களுடையது என மிரட்ட சிக்கல் வெடித்தது.
அது இன்று பெரும் பிரச்சினையாக உருவெடுத்து நிற்கின்றது, கிட்டதட்ட 12 லட்சம் ரொகிங்கியாவினர் இன்று இருக்கலாம்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுத்து பர்மியர்கள் ஆக்கிவிட்டால் சிக்கல் இல்லை, ஆங்க்சன் அதனைத்தான் செய்வதாக சொன்னார், ஆனால் கொல்லபட்டுவிட்டார்
இன்று பர்மாவின் பெரும் தலைவியான சூகி அவரின் மகள். அவரின் அரசியல் வாரிசு
தந்தையின் பணியினை தொடர்ந்து , தந்தை வாக்களித்தபடி அம்மக்களை அரவணைக்கவேண்டிய அவரோ மகா அமைதி
நேற்று பேசிய 30 நிமிட உரையிலும் அவர் ரொகிங்ய சிக்கல் பற்றி சொல்லவே இல்லை
அம்மக்கள் உலகெல்லாம் அகதிகளாக அலையும் வேளையிலும் அம்மணி கண்டுகொள்ள தயங்குகின்றார்
காரணம் அம்மக்களுக்காக இறங்கிவந்தால் உள்நாட்டு எதிர்ப்பினை சந்திக்கவேண்டும்
அதே நேரம் காலம் காலமாக வாழ்ந்துவந்த மக்களுக்கு குடியுரிமை கொடுக்கமாட்டோம் என்பதும், நிலம் எங்களுக்கு ஆனால் மக்கள் எம்மக்கள் அல்ல என்பதும் பெரும் அநியாயம், அதனை உலகநாடுகள் கண்டிக்க தொடங்கியாயிற்று
அவரோ அசைவதாக தெரியவில்லை, சிக்கல் நீடிக்கின்றது. அகதிகள் வெளிநாட்டில் குவிவதால் அக்கம் பக்கம் நாடுகள் கண்களை உருட்டுகின்றன
தந்தையின் வாக்குறுதியினை அவர் நிறைவேற்றுவாரா அல்லது தந்தையின் ஆன்மா மன்னிக்காதபடி பெரும் தவறு புரியபோகின்றாரா? என ஏகபட்ட கேள்விகள் அவரை சுற்றி நிற்கின்றன
வாக்கு அரசியல் எவ்வளவு பெரும் தலைவனையும் அவமானபட வைக்கும் என்பதற்கு இன்று ஆங்சன் சூகிதான் உதாரணம்.
நீங்கள் நாடில்லாதவர்கள் என பல லட்சம் மக்கள் விரட்டபடுவது ஒன்றும் புதிதல்ல, 1965ல் இலங்கை மலையக மக்கள் அப்படித்தான் இந்தியாவிற்கு விரட்டபட்டனர்
அதனை எந்த தொப்புள்கொடி உறவும் யாழ்பாணத்தில் கண்டிக்கவில்லை, தீ குளிக்கவில்லை, கத்தவில்லை
மாறாக சிங்களனோடு அமர்ந்து டீ குடித்துகொண்டிருந்தனர்.
ஆயினும் 1980களில் ஈழ மக்கள் அகதிகளாக வந்தபொழுது அகில உலகிலே அதனை கண்டித்து தலையிட்டு அம்மக்களுக்கு உரிமை கொடு என சொல்லி, போராளிகளுக்கு உதவி , பல நெருக்கடிகளை கொடுத்து சிங்களனை இறங்கிவர செய்தது இந்தியா
ஆனால் புலிகளின் அடாவடியில் இன்று அவர்களுக்கு ஒன்றுமேயில்லை, இந்தியாவும் ராஜிவ் கொலைக்குபின் ஒதுங்கி கொண்டது
ரொஜிங்யா முஸ்லீம்களுக்கு உதவ யாருமில்லை , ஆனால் கிடைத்த உதவிகளை எல்லாம் நாசமாக்க்கி ஒன்றுமில்லாமல் போன ஒரே இனம் ஈழதமிழினம், அதற்கு காரணம் யார்? என சொல்லி தெரியவேண்டியதில்லை.
இதோ ஆங்சனுக்கு பின் சூகி வந்து தடுமாறுகின்றார், ரொஜிங்க்யாவில் தலையிட்டால் உயிர் முதல் பதவி வரை ஆபத்து என்பதால் அஞ்சுகின்றார்
ஆனால் இந்திராவினை தொடர்ந்து வந்த ராஜிவ் அஞ்சாமல் ஈழத்தில் தலையிட்டார். தாய் தலையிட்டு அமிர்தலிங்கத்திடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரும்பாடுபட்டார்
அதில் உயிரையும் விட்டான் அந்த உன்னத தலைவன், இம்மாதிரி குழப்பங்கள் உலகில் வரும்பொழுதுதான் அம்மனிதனின் தியாகம் உலகிற்கு தெரியும்
ரொகிங்யா மக்களின் நிலையில், ஆங்க்சனின் வாக்குறுதியினை நிறைவேற்ற மகள் தயங்கும் நிலையில், ஈழ தமிழருக்காக, தன் அன்னையின் வாக்குறுதிக்காக உயிர்விட்ட ராஜிவ் மகா உயரமாக தெரிந்துகொண்டே இருக்கின்றார்