Wednesday, September 13, 2017

தமிழிசை : "லூசாப்பா நீ"





Image may contain: 4 people, people standing and weddingநீட்டுக்கு எதிரான போராட்டத்தில் அனிதா படத்திற்கு அஞ்சலி செலுத்தினார் குமரி அனந்தன்.


இதனை பார்த்த தமிழிசை என்ன கேட்பார்?


"லூசாப்பா நீ"




(பிதாமகன் படத்தில் லைலாவின் தந்தை சொல்லும் வசனமான "லூசுதாம்மா..உன்னை மகளை பெத்த நான் லூசுதாம்மா" எனும் காட்சி உங்கள் நினைவுக்கு வரவே கூடாது.)
















வருகைப்பதிவேடு அழைப்பிற்கு மாணர்வர்கள் ‘ஜெய்ஹிந்த்’ சொல்லவேண்டும் : மபி மாநிலத்தில் சட்டம்


வகுப்பிற்கு வராத மாணவர்கள் ஜெய்ஹிந்த் சொல்ல முடியாது, அதனால் அவர்கள் தேசவிரோதிகள் என அறிவிக்கப்ட்டாலும் ஆச்சரியமில்லை.


போகிற போக்கினை பார்த்தால் டாய்லெட் உள்ளே இருப்பன் கூட யாராவது கதவினை தட்டினால் ஜெய்ஹிந்த் சொல்லவேண்டும் எனும் அளவிற்கு நிலமை மகா சீரியஸ் ஆகலாம்.






தமிழக அரசை கலைப்போம் : தினகரன்


நீங்கள் இதுவரை தமிழகத்திற்கு எந்த நல்லதும் செய்யவில்லை, இனி செய்யபோவதுமில்லை


வாழ்க்கையில் முதல் முறையாக மிகசிறந்த காரியத்தை செய்ய போவதாக சொல்லியிருக்கின்றீர்கள்.




இதனை மட்டும் செய்துவிட்டால் தமிழகம் நன்றியோடு உங்களை வழியனுப்பி வைக்கும், அந்த நன்றியினை மறக்காது.


முடிந்தால் ஆட்சியினை கலைக்கும் சட்டத்திற்கு "தினகரன் சட்டம்" என பெயர் சூட்ட பரிந்துரைக்கின்றோம்















No comments:

Post a Comment