Friday, September 15, 2017

பெட்ரோல் விலை மர்மம் என்ன ?

பெட்ரோல் விலை பீப்பாய்க்கு 140 டாலர் என உயர இருந்தபொழுதும் லிட்டர் 70க்கும் மேல், இப்பொழுது கச்சா எண்ணெய் விலை 50 டாலருக்கு இருக்கும்பொழுதும் அதே விலையா? மோடி அரசு மோசடி செய்கின்றது, அம்பானி கொள்ளை, அதானி கொள்ளை, மோடி நொள்ளை என பலர் சொல்லிகொண்டிருக்கின்றான்


விலைவாசி ஏற பல காரணம் இருந்தாலும், அது இறங்க பலர் ஒத்துழைப்பு அவசியம், இந்த பெட்ரோல் விஷயத்தில் என்ன நடக்கின்றது என்றால் இதுதான்


பெட்ரோல் விலை உச்சத்தில் இருந்தபொழுது சமாளித்தது மன்மோகன்சிங்கின் அசாத்திய திறமை. உண்மையில் அதுசாதனை, எப்படியோ திறமையாக சமாளித்தார்




ஆனால் மோடிக்கு வந்திருக்கும் சிக்கல் வேறுமாதிரியானது


அதாகபட்டது இந்த எண்ணெய் நிறுவணம் ஸ்டண்டர்டு ஆயில் என அழைக்கபட்ட காலத்தில் இருந்து அதில் இருப்பவர்களுக்கு கொள்ளை சம்பளம், இன்று இந்தியன் ஆயிலோ , பாரத் பெட்ரோலியமோ அதில் இருப்பவர்கள் சம்பளம் கொஞ்சமல்ல, கிட்டதட்ட அமெரிக்க ஐடி பணியாளருக்கு இருக்கும் சம்பளம்,


இன்னும் சலுகைகள், இன்னப்பிற படிகள், டீலர் கமிஷன் என ஏகபட்ட விஷயம் உண்டு


மத்திய அரசின் வரிதான் பெட்ரோல் விலையினை நிர்ணயிப்பது, அந்த வரிதான் அவர்களின் சம்பளத்தை நிர்னயிப்பது


இப்பொழுது பெட்ரோல் விலையிலை குறைக்க வரியினை குறைத்தால் என்னாகும்? அந்த பணியாளர்கள் சும்மா இருப்பார்களா?


பொங்குவார்கள், கொடிபிடிப்பார்கள், இப்பக்கம் டீலர் கொடிபிடிப்பார்கள், ஆறபோட்டு பேச இது சாதரண விஷயம் அல்ல. ஒரு நொடி பெட்ரோல் விநியோகம் நின்றாலும் தேசம் இயங்காது.


பெட்ரோல் விலை குறைந்ததால் நாங்கள் எங்கள் சம்பளத்தை குறைக்கின்றோம் என்றோ, எங்கள் கமிஷனை குறைக்கின்றோம் என்றோ டீலர்கள் சொல்லட்டும், நாளையே பெட்ரோல் விலை குறையும்.


இவர்கள் செய்வார்களா? யாராவது ஒருவர் செய்வார்களா?


மாட்டார்கள், அது நடக்க கூடிய விஷயமும் அல்ல. அப்படிபட்டவர்கள் காந்தி, வ உசி காலத்தோடு சரி.


இம்மாதிரி காரியங்களில் அரசு அதிரடியாக சம்பள குறைப்பு செய்தால் நாடு தாங்காது, மோடி அரசு மக்களை வறுமையில் தள்ளிவிட்டது, இதுவரை எல்லா அரசும் சம்பளத்தை கூட்டியது, முதன் முறையாக ஒரு அரசு சம்பளத்தை குறைக்கின்றது என பொங்குவார்கள்.


இதனை எல்லாம் அறிந்துதான் விலையினை குறைக்க முடியாமல் அரசு யோசிக்கின்றது.


மத்திய அரசினை நிலை இப்படி இருக்க, மாநில அரசு கடந்தமுறை பெட்ரோல் வரியினை உயர்த்தியது நினைவிருக்கின்றதா?


அதனை பற்றி எல்லாம் ஏன் இவர்கள் பேசபோகின்றார்கள்? பேசவே மாடடார்கள்.


யோசிக்க மாட்டார்கள், நாட்டுக்காக விட்டுகொடுக்கவும் மாட்டார்கள் ஆனால் கோஷமும் கேள்வியும் மட்டும் எழுப்புவார்கள்


எண்ணெய் நிறுவண ஊழியர் சம்பளத்தை குறைக்கமுடியுமா? இதோ இப்பொழுது தமிழிசையினை வேறு ஒரு பதவிக்கு அமர்த்தியாயிற்று, அவருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாமா? பின் எப்படி பெட்ரோல் விலை குறையும்?



No comments:

Post a Comment