Wednesday, September 27, 2017

குறவர்களை பற்றி அங்கிள் சைமன்

குறவர்களை பற்றி ஏதோ அங்கிள் சைமன் சொல்லியிருக்கின்றார் என சர்ச்சைகள் வருகின்றன.
தமிழை கேவலம் குறவர் தமிழாக மாற்றிவிட்டார்கள் என அங்கிள் குறைபட்டுகொண்டாராம்.
குறவர்கள் என்பவர்கள் யார்? குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் குறவர்கள் என அழைக்கபட்டனர். அவர்கள் பேசியதும் தமிழே.
இன்று அவர்கள் பேசுவதும் தமிழின் திரிபே, ஆதிகால தமிழ் அந்த சாயலில்தான் இருந்தது..
அவர்களும் நிச்சயமாக தமிழர்களே.
குற்றால குறவஞ்சி எனும் காவியமே தமிழில் உண்டு.
அவ்வளவு ஏன் முப்பாட்டன் முருகனே வள்ளி எனும் குறத்தி தமிழச்சியினைத்தான் மணந்தார்.
வேல் எடுத்து ஆடும் அங்கிள் சைமன், முப்பாட்டனை வணங்கும் பொழுது முருகனின் அருகில் இருந்து அருள்பாலிப்பது ஒரு குறத்தி.
இவ்வளவு இருந்தும் அங்கிள் சைமன் குறவர்களை ஏளனம் செய்கின்றாராம்.
தமிழும் சரியாக தெரியாது, தமிழர் வரலாறும் தெரியாது. சும்மா கிடந்து கத்தவேண்டியது. கேட்டால் அவருக்கு மட்டும் தமிழுணர்வு இருக்கின்றதாம்.
முப்பாட்டி வள்ளியே தமிழ் குறத்தியாக இருக்கும்பொழுது குறவர்களை சீண்ட என்ன தைரியம்?
அந்த முப்பாட்டன் வேல் எடுத்து சீமான் கண்களில் குத்தட்டும்.

No comments:

Post a Comment