Wednesday, September 20, 2017

எடப்பாடி புனித நீராடல்... சன்னிலியோன் மழை நீராடல்

"எந்த நதியில் மூழ்கினாலும் பாவம் போகாது" : முதல்வருக்கு எதிராகச் சீறுகின்றார் தினகரன்


நாம் சற்றுமுன் சொன்னதை தினகரனும் சொல்லியிருக்கின்றார், அதாவது முதல்வர் பழனிச்சாமி புனித நீராடியதை அப்படி சொல்லியிருக்கின்றார்.


ஆனால் முன்பு கும்பகோணம் மகாமகத்தில் ஜெயா,சசிகலா குளிக்கபோய் ஏராளமானோர் செத்து, பலர் காயமடைந்து மருத்துவமனையில் இருக்க அவர்களை பார்க்க கூட செய்யாமல் திரும்ப வந்த அந்த பாவம் எந்த நதியில் மூழ்கினால் தீரும் என்பதை தினகரன் சொல்லவில்லை.






பாவங்களை போக்கும் மகா புஷ்கரத்தில் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் ஆகியோர் புனித நீராடினர்


பன்னீர் செல்வம் ஏன் செல்லவில்லை என்பது தெரியாது, ஒருவேளை எந்த நீரில் ஆடினாலும் தன் பாவம் தீராது என அவருக்கு தெரிந்திருக்கலாம்


ஆனால் பழனிச்சாமிக்கும், சபாநாயகருக்கும் தெரியவில்லை.






ஹிந்தி பிக்பாஸ் நிகழ்சியில் சன்னிலியோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழையில் ஆடினார்.


இந்த செய்தியினை படிக்கும் பொழுதே வயிறு எரிகின்றது, கண்கள் சிவக்கின்றன‌


என்ன கொடுமை இது? தமிழன் எப்படி எல்லாம் ஏமாற்றபட்டு கொண்டிருக்கின்றான்.




தமிழிலும் பிக்பாஸ் நடத்துகின்றனரே கிராதகர்கள், அவர்களை எல்லாம் புளுவேல் ஆடவைத்து கொல்லவேண்டும்


மும்தாஜினை அழைத்துவந்தாவது ஆடவிட்டிருக்க வேண்டாமா?








No comments:

Post a Comment