அந்த கிழவனுக்கு 139 வயதாயிற்று, அவன் போராட கிளம்பி கிட்டதட்ட 90 வருடமாயிற்று.
போராட்டத்தை முடித்தும் கிட்டதட்ட 45 வருடமாயிற்று.
ஆனாலும் அந்த கிழவன் பெயரை கேட்டவுடனே பலருக்கு எவ்வளவு வயிற்றேரிச்சல் வருகின்றது, எவ்வளவு அலறல் வருகின்றது?
கிழவன் அப்படி அடித்திருக்கின்றான் .
ஒரு பெரு மரம் இருந்திருக்கின்றது, அதில் மந்தி கூட்டம், கோட்டான் கூட்டமும் கொடுநாகமும் குழுமியிருந்திருக்கின்றன, தாங்கொணா துயரை எல்லாம் அவை கொடுத்திருக்கின்றன.
ஆத்திரமடைந்த கிழவன் கோபத்தில் தைரியமாக பொங்கிவிட்டான், அது பாம்பு அது புற்றில் இருந்தால் என்ன? பரமசிவன் கழுத்தில் இருந்தால் எனக்கென்ன? பாம்புக்கு அடி விழும்பொழுது அந்த பரமசிவனுக்கே அடிவிழுந்தால்தான் என்ன என எழும்பிவிட்டான்.
அந்த மரத்திலிருந்து அட்டகாசம் செய்த மந்திகளையும், நாகங்களையும் அடக்க அவன் அந்த மரத்தையே புடுங்கி எறிந்திருக்கின்றான் என்பது நன்றாகவே தெரிகின்றது
மறுபடியும் அந்த அட்டகாசத்தை தொடரவும், ஆட்டம் போடவும் அந்த மந்திகளும், நாகங்களும் புலம்பியபடியே மரத்தை நிமிர்க்க படாத பாடு படுகின்றன
நடக்குமா? அதன் ஆண்வேரையே கிழவன் தோண்டி எறிந்துவிட்டு போய்விட்டானே?
அந்த வயிற்றெரிச்சலில் அந்த மந்திகள், கோட்டான்களின் அலறல் அதிகமாகவே இருக்கின்றது.
No comments:
Post a Comment