Friday, September 22, 2017

செப்டம்பர் 22, 2016

download-1.jpgகாமராஜர் இறந்தார், அய்யா மதியம் சிறுகீரை குழம்பு வச்சி சாப்ட்டாக, அதற்கப்புறம் படுக்க போனாக, நெஞ்சி வலிக்குது, டாக்டர் சவரிய கூப்பிடுனாக , அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சி என அழுதார் சமையல்காரன் வைரவன்.


இரவு இட்லி சாப்பிட்டுவிட்டு பால் குடித்துவிட்டு படுத்தார் எம்ஜியார், 3 மணியளவில் பார்க்கும்பொழுது இறந்திருந்தார் என அன்று அழுதுகொண்டிருந்தார் ஜானகி


இப்படியெல்லாம் தலைவர்கள் சாகும்பொழுது முதலில் அழுவது அவர்களின் சமையல்காரர்கள் அடுத்துதான் எல்லோரும்




ஆனால் ஜெயாவிற்கு என்ன நடந்தது என இறுதிவரை அவர்கள் சமையல்காரரும் சொல்லவில்லை, அருகிலே இருந்த சசிகலாவு முழு பேட்டி கொடுக்கவுமில்லை


இப்படி இன்னும் வெளிவராத ஆரம்ப தகவல்களே வராத நிலையில் வருடம் 1 ஆகின்றதாம்.


கோடான கோடி செல்வங்களையும், அரண்மனைகளையும் குவித்த ஜெயலலிதா, தனக்கு உண்மையாக அழ ஒருவரை கூட சம்பாதிக்காமல் போனதுதான் சோகம்



No comments:

Post a Comment