மெய்விவாகம், நமஸ்காரம், ஆசீர்வாதம், பந்து மித்திரர், ஸ்ரிமான், ஐஸ்வர்யம் போன்ற அந்நாளைய அழைப்பிதழ் வார்த்தைகள் இன்னபிற ஜோதிட நேரங்கள் இல்லை.
அந்நாளைய வழக்கபடி இது பெரும் மாறுதல், பெரும் சீர்திருத்தம். மனிதர் அன்றே அசத்தியிருக்கின்றார்.
ஆனானபட்ட விஸ்வாமித்திரர் நடத்தி வைத்த ராமர் திருமணமே சிக்கலான உலகில், அண்ணாதுரை நடத்திவைத்த திருமணம் பெரும் வாழ்வு வாழ்ந்தாயிற்று
அவரவருக்கு விதித்தபடி நடக்கும் என்பதும், ஒருவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தே தீரும் , அது முன் ஜென்ம புண்ணியமோ இல்லை அடுத்த ஜென்மத்திற்கான சாபமோ எதுவோ, ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்கும் என்பதற்கு இந்த அழைப்பிதழே சாட்சி.
திருமணமாகி 69 ஆண்டுகள் கடந்துவிட்ட அந்த தயாளு அம்மாளும் பெரு வாழ்வு வாந்துவிட்டவர்
தமிழகத்தில் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பான, தன் கணவனும் முதல்வர் தான் பெற்ற மகனும் முதல்வர் என்பதை கண்டுவிட பாக்கியம் பெற்றிருக்கும் ஒரே பெண்மணி
ஆனால் மு.க ஸ்டாலின் அந்த பாக்கியத்தை பூர்த்தி செய்வாரா என்பதுதான் இப்போதிருக்கும் கேள்வி
No comments:
Post a Comment