Wednesday, February 15, 2017

ஜெயா டிவி செய்யற கூத்து தாங்கல...

https://youtu.be/sT-lnrY5Bkc

இந்தியா முழுக்க பெங்களூர் சிறையினை உற்றுபார்க்க, நாமோ ஜெயா டிவியினை உற்றுபார்த்தோம்


அப்படி ஒரு வழக்கு நடந்ததாகவோ, ஒரு தீர்ப்பு வழங்கபட்டதாகவோ , மூவரை அவகாசமின்றி நீதிமன்றம் உள்ளே தள்ளியதாக தகவலே இல்லை


மாறாக சின்னம்மா எழுச்சியுரையாற்றினார், எல்லோரும் அழுதார்கள். ரிசார்ட்டில் கொதித்தார் எல்லோரும் கைதட்டினார்கள், அதன் பின் சின்னம்மா வீர சபதம் செய்தார், அவ்வளவுதான்


அதன்பின் சின்னம்மா என்ன ஆனார் என சொல்லவே இல்லை, மாறாக ஆளுநரை அர்ச்சிக்க தொடங்கிவிட்டார்கள்


சின்னமா இனி கொஞ்சநாளைக்கு வெளிவரமுடியாது, நிச்சயம் 4 வருடம் உள்ளே இருக்கபோவதில்லை, பெயில் அது இது என வருவார், ஆனால் இப்போதைக்கு அல்ல‌


இந்த இடைவெளியில் சின்னம்மா பற்றி என்ன சொல்ல போகின்றார்கள்?


அவர்களுக்கென்ன, அம்மா ஆன்ம சாந்திக்காக சின்னம்மா உலகளாவிய ஆண்மீக பயணம், திரும்ப கொஞ்சநாளாகும் என சொல்லிவிட்டு, ஆளுநரையும் முக ஸ்டாலினையும் திட்ட தொடங்கிவிடுவார்கள்

No comments:

Post a Comment