செங்கோட்டையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்
அவருக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியாமல் போனதா?
அவரே பாவம் அவருக்கு என்னதான் தெரிந்திருக்கின்றது, வழி தெரியாமல் அவரே விழித்துகொண்டிருக்கின்றார்
தமிழில் கேட்டாலே சரியான பதில் சொல்ல தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அவரிடம் ஆங்கிலத்தில் கேட்டால் எப்படி?
தமிழ்நாட்டு அரசியல்வாதிக்கு ஆங்கிலம் ஏன் தெரியவேண்டும்? காமராஜர், கலைஞர் எல்லாம் பெர்னாட்ஷா அளவிற்கா பேசினார்கள்?
ஆங்கிலம் மட்டும் தெரிந்த ஜெயா ஆண்ட ஆட்சி தெரியுமல்லவா? இன்றைய நிலைக்கு காரணமே அந்த ஆங்கிலம் பேசிய ஜெயலலிதாதான்
சரி செங்கோட்டையன் ஆங்கிலம் பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?
பன்னீர்செல்வம் என்ன டிரம்ப் போலவா பேசிகொண்டிருந்தார்?
இல்லை இங்கு உறுமிவிட்டு, இன்று கன்னட சிறையில் பொருமிகொண்டிருக்கும் சிங்கம் சசிகலா ஆங்கிலத்திலா பேசியது?
ஆங்கிலம் தெரியாது என சொல்லியே அது எத்தனை ஆயிரம் வாய்தாக்களை வாங்கியது?
வழக்கு நடக்கும்பொழுதும் ஆங்கிலம் படிக்காமல் இப்போது கன்னட சிறையில் மொழி தெரியாமல் தடுமாறுகின்றது.
என்னமோ அக்கட்சியில் எல்லோரும் ஆக்ஸ்போர்டில் படித்து வந்தவர்கள் போலவும், செங்கோட்டையன் மட்டும் கொட்டாம்பட்டி தமிழ் மீடியத்தில் படித்தவர் போலவும் பேசி் கொண்டிருக்கின்றார்கள்
உருப்படியான அறிவாளி என ஒருவர் இருந்தால் கட்சி ஏன் இப்படி பன்னீருக்கும், பழனிச்சாமிக்கும் அலைகின்றது?
அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமா தெரியாது? தான் யாரென்றே முதலில் தெரியாது,
பல நாடுகளுக்கு செல்லும் பாரத பிரதமருக்கு ஆங்கிலம் சரியாக தெரியவிலை என்பது அவமானம்
எழுதிகொடுத்ததை வாசிக்கின்றாரே அன்றி, பெரும் உலகதரம் வாய்ந்த ஆங்கில பத்திரிகையாளர்களை சந்தித்ததாக தெரியவில்லை
அவ்வளவு ஏன்? அவர் அமைச்சரவையிலே அருண் ஜேட்லி தவிர ஆங்கிலம் பேச யாரும் இருந்ததாக தெரியவில்லை, தமிழிசை கூட இல்லை
அதனைபற்றி கவலைபடாமல் செங்கோட்டையனுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என சொல்பவனை என்ன சொல்வது?
ஆங்கிலம் தெரியவில்லை என கவலைபடுவதாக இருந்தால் மோடிக்காக கவலைபடுங்கள்,
மத்திய அமைச்சரவை எனும் சாமியார் மடத்திற்காக கவலைபடுங்கள்
சின்னம்மா வாழ்க என சொல்வதற்கும், ரிசார்ட்டில் சாப்பாடு வேண்டும் என கேட்கவும் எதற்கு செங்கோட்டையனுக்கு ஆங்கிலம்???
அக்கட்சியினர் பேசும் வார்த்தைகள் மிக சொற்பம் "இதய தெய்வம்" "அம்மா""சின்னம்மா" திமுக சதி" கருணாநிதி ஒழிக" இவ்வளவுதான்
இதனை அடுத்து அவர்கள் செய்வது ஜெயா கல்லறையில் அழுவது, அதற்கு மொழியே தேவையில்லை
பின் அவர்களுக்கு எதற்கு ஆங்கிலம்???
இது தெரிந்துதான் யானைகளுக்கு கூட முகாம் அமைத்த ஜெயலலிதா, இவர்கள் 4 எழுத்து படிக்க கூட ஒரு வகுப்பு எடுக்கவில்லை
அதாவது மனிதர்கள் என்றுகூட நினைத்ததில்லை
அவர்களை போய் உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை கலாய்த்தால் எப்படி?
சசிகலா அணி பன்னீரை கட்சியிலிருந்து நீக்குகின்றது, பன்னீர் அணி சசிகலாவினை கட்சியினை விட்டு நீக்குகின்றது.
இருவரும் நீக்கி நீக்கி விளையாடுகின்றார்கள், இந்த விளையாட்டு விளையாடத்தான் மக்கள் வாக்களித்தார்களா?
மொத்தமாக இந்த இரு அணிகளையுமே தமிழ்நாட்டிலிருந்து மக்கள் நீக்குவது மிகவும் நல்லது
அவர் சீவலப்பேரி பாண்டியினையே சுட்டுகொன்றவர் என்பதை நிரூபித்துவிட்டார்
வாழ்த்துக்கள் நட்ராஜ்..
No comments:
Post a Comment