Monday, February 27, 2017

உடன் பிறப்பே....



Image may contain: 1 person, sunglasses and glasses



உடன்பிறப்பே


மது குடித்த மந்தியாக, கல் பட்ட கரடியாக‌ சிலர் புலம்பி திரிவதை கண்டிருப்பாய், அவர்கள் பொய்யிலே அரசியல் நடத்துபவர்கள், பசப்பு முகங்களிலே பாஷானம் கொடுப்பவர்கள் என தெரிந்தது தான்,


ஆனால் பச்சை பொய்களை கொஞ்சமும் அச்சமின்றி , கூச்சமின்றி சொல்ல‌ வந்து விட்டார்கள் பார்த்தாயா?


ஒருவர் திமுக தான் ஜெயா சாவுக்கு காரணம் என்கின்றார், இன்னொருவர் தமிழகம் வாழ இக்கழகம் அழியவேண்டும் என்கின்றார்.


வயிறு நிரம்பிய நரிகள் ஊளையிடத்தான் செய்யும், அதுவும் கூவத்தூரில் பெரும் விருந்தில் வயிறு பெருத்த நரிகளின் ஊளை அப்படித்தான் இருக்கும், அதன் இயல்பு அப்படி.


ஆனால் கழக வரலாறு என்ன?


திமு கழகத்திற்கு என்றுமே உருவாக்க மட்டுமே தெரியுமன்றி ஒரு காலமும் அதற்கு யாரையும் அழிக்க தெரியாது, அதன் வரலாற்று ஏடுகளை புரட்டிபார்த்தால், அது ம.கோ ராமசந்திரன், பண்ருட்டி ராமசந்திரன் முதல் இதோ இன்று அதிமுகவினை தாங்கி நிற்கும் நடராஜன் வரை இக்கழகம் தான் உருவாக்கியது


சாதாரண கலிங்கபட்டி கோப்பால் சாமி என்பவரை ஒரு பிம்பமாக வடிவமைத்ததே இந்த கழகம் தான்


அப்படிபட்ட இந்த அரும் கழகத்தினை எதிர்த்து சுயநலம் பிடித்த சிலர் சென்று சிலர் அரசியல் தற்கொலை செய்வார்களே ஓழிய , கழகம் யாரையும் வெறுத்ததுமில்லை , எதிரியாக நினைத்ததுமில்லை, அப்படி நினைத்து அழித்தொழிக்கும் அவசியமுமில்லை


ஆனால் ஜெயாவின் ஊழலை கழகம் எதிர்த்தது, ஜெயா என்று அல்ல, யார் ஊழல் செய்தாலும் இக்கழகம் ஆதரிக்காது. அந்த கொடும் ஊழலை, அரசாங்க பதவியின் துஷ்பிரயோக சொத்துகுவிப்பனை இக்கழகம் கண்டித்து வழக்கு நடத்தியது


அநியாயம், அக்கிரமம், ஊழல் இவற்றிற்காகத்தான் திமுக போராடியதே தவிர, ஜெயலலிதா எனும் தனி மனிதருக்காக அல்ல,


இன்னமும் அவர்கள் ஜெயா தண்டனைக்கு திமுக காரணம் என கருதினால், அந்த ஊழலின் பிம்பம், அதாவது கழகம் எந்த ஊழலை , கொடும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதோ அந்த அநியாயத்தின் மொத்த உருவம் ஜெயலலிதா என அவர்களே ஒப்புகொள்கின்றார்கள் என பொருள்


ஊழலை திமுக எதிர்த்தது, அதனால் ஜெயா காலமானார் என சொல்வார்களானால், அந்த ஊழலின் உருவமாகவே ஜெயா இருந்தார் என்பதே அவர்கள் நிலைப்பாடு என உலகம் கருதாதா?


திமுக ஊழலை கொலை செய்யும், அக்கிரமத்தை, சுரண்டலை கொலை செய்யுமே அன்றி, வேறு எதனையும் கொல்லாது.


உடன்பிறப்பே, நாம் தமிழகத்தினை சுரண்டினோம் என்கின்றன சில பதர்கள்


பெரியார் தன் சொத்துக்களை எல்லாம் பொதுசேவைக்கு வழங்கினார், அண்ணா தன் படைப்புகளையும், தன் காஞ்சிபுரம் வீட்டினை நாட்டிற்கு கொடுத்தார்


அவர்களை பார்த்து வளர்ந்த நான் என் திருகுவளை குடும்ப வீட்டையும் சொந்த ஊருக்கு கொடுத்தேன், 1940களிலே நான் வாங்கிய இந்த கோபாலபுரம் வீட்டையும் எனக்கு பின் மக்களுக்காக வழங்கிவிட்டேன்


கோபாலபுரம் வீடு மிக சிறியதுதான், ஆனால் தமிழக வரலாற்றில் அதற்குரிய இடத்தோடு விலைபேசினால் அது கோஹினூர் வைரத்தோடும் அதிக விலைக்கு போகும் என்பது உன்க்கு தெரியாததல்ல‌


எத்தனை தலைவர்கள் சந்தித்துகொண்ட வீடு அது?, எத்தனை பெரும் முடிவுகள் எடுக்கபட்ட வீடு? அதிமுகவின் இன்றைய தலைவர்கள் எத்தனை நாள் காவலாக கிடந்த வீடு அது.


அதன் பெருமை தமிழருக்கு தெரியும், வரலாறு அறிந்தவருக்கு தெரியும். அதனையே நான் நாட்டிற்கே கொடுத்துவிட்டேன்


இதனிடையே நான் எழுதி சம்பாதித்த பலவற்றை மக்களுக்கே கொடுத்ததெல்லாம் வரலாறு சொல்லும்


ஆனால் போயஸ் வீடு இன்று யார் கையில் உள்ளது, கங்கை அமரன் அனுதினமும் கங்கை நதிபோலவே கண்ணீர் வடித்து அழும் அந்த சிறுதாவூர் பங்களா யார் கையில் உள்ளது?


கண்ணுக்கு தெரிந்த நிலங்களையே எல்லையின்றி வளைக்கும் வல்லூறுகள், கண்ணுக்கு தெரியா மலையுச்சியில் கட்டியிருக்கும் கொடநாடு மாளிகை யாருக்கு?


இவை எல்லாம் மக்களுக்கு வருமா? சொல் உடன்பிறப்பே


கையில் இருப்பது கைபிடியானாலும் தமிழக்த்திற்கு என மகிழ்வோடு அள்ளிவீசுபவர்கள் நாம்


மூட்டை கட்டியும், கண்டெய்னரில் கடத்தியும் விளையாடும் அவர்கள் தமிழகத்திற்கு எதனை விட்டு சென்றார்கள்?


அவர்கள் மனம் கடுகை விட அவ்வளவு சிறியது, அவர்கள் சுயநலமோ இமயத்தை விட பெரியது


ஆக சொந்த சொத்துக்களை எல்லாம் தமிழகத்திற்கு கொடுத்த பெரியார், அண்ணா அவர்கள் வரிசையில் நான் போன்றவர்கள் எல்லாம் எங்கே?


ஊரையே வளைத்துபோட்டு சுகவாழ்வு வாழ்ந்துகொண்டும், இன்னும் வேண்டும் வேண்டும் என நீர் குடிக்கும் வறண்ட நிலமாக‌ , எவ்வளவு எரிந்தாலும் அடங்கா பேராசை தீயாக வெறியோடு அலையும் அவர்கள் எங்கே?


ஒப்பிட முடியுமா உடன்பிறப்பே?


இந்த சுயநல‌ பேராசைகாரங்கள் தான் நம்மை பழிக்கின்றனவாம், நம்மை அழிக்க துடிக்கின்றதாம்


இந்த கும்பல் வெளியில் நடமாட விட கூடாத கொடிய கும்பல், போயஸ் தோட்டம் என்பது பேராசை கொடியவர்களின் கூடாரம், தமிழகத்தை சுரண்டும் திட்டம் அங்கேதான் அரங்கேறியிருக்கின்றது என உச்சநீதிமன்றம் சொன்ன பின்பும் இவர்கள் அழிச்சாட்டியம் கண்டாயா?


கட்சி கணக்கு கேட்டு அவர்கள் ஆரம்பித்த கட்சி, கணக்கு வழக்கு இல்லாமல் சொத்துசேர்த்து அதற்கு கணக்கு காட்டமுடியாமல் வீழ்ந்த கதை யாருக்கு தெரியாது


இவர்கள் நம்மை அழித்துவிடுவார்களாம், சொல்லிகொள்கின்றார்கள்


கழகம் எனும் சூரியனை நெருங்க இந்த வல்லூறுகளால் முடியுமா? இதுவரை இந்த கழகத்தை அழிக்க நினைத்தவர்கள் என்ன ஆனார்கள் என அவர்கள் அறியவில்லை என்பதை தவிர என்ன சொல்லி அவர்களை பரிதாபமாக பார்க்க இயலும்?


இந்த பேராசை, சுயநல கும்பலின் அந்திம காலத்தில், முடிவு தீ வைக்கபட்ட காலத்தில் இந்த அழிவு காலங்களில், தீயில் சிக்கிய பன்றியாக ஓலமிட்டுத்தான் தீர்வார்கள், கத்தட்டும்


புராணத்தில் வரும் ராவணனின் அழிவுக்கு யார் காரணம்? சேதுவில் பாலம் கட்டியவனா காரணம்?


துரியோதனின் அழிவுக்கு யார் காரணம்?


மதுரையிலே நீதி தவறி அழிந்த பாண்டியன் நெடுஞ்செழியன் சாவுக்கு யார் காரணம்?


அவரவர் செய்த வினைகள் அல்லவா அவர்களை கொன்றது.


உன்னைபோலவே தமிழக மக்களும் உண்மையினை அறிந்தவர்கள் என்பதாலும், என்றுமே நாம் சத்தியத்தை, தர்மத்தை நம்புபவர்கள் என்பதாலும் உறுதியாக சொல்கின்றேன்


வெற்றி நமதே, நாளை மட்டுமல்ல, இனி எல்லா நாட்களும் நமக்கான நாட்களே













பிரான்சில் டிரோன் கண்காணிப்பினை தடுக்க கழுகுகள் பயன்படுத்தபடும், காவல்துறை அறிவிப்பு


ஈராக்கில் நாய்கள் மீது வெடிகுண்டு பொருத்தி தாக்குதல்


பீட்டா என்றொரு அமைப்பு உண்டல்லவா? அது எங்கே மல்லாக்க கிடக்கின்றது என தெரியவில்லை








நெடுவாசல் சென்று போராட்டத்தில் பேசினார் சீமான் : செய்தி


நெடுவாசல் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவல் : இன்னொரு செய்தி


இந்த இரு செய்திகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக யாரும் நினைத்துகொள்ள வேண்டாம்.







 






 


 

No comments:

Post a Comment