Tuesday, February 21, 2017

கோவை வருகின்றார் மோடி

கோவை வருகின்றார் மோடி


எதற்காக வருகின்றார் என்றால் அங்கு ஏதோ ஈஷா மையத்தில் 112 அடி ஆதியோகி சிலை திறப்பாராம்


சமீபத்தில் கன்னியாகுமரியில் ராமயாண சிலைகளை அவர் டெல்லியிலிருந்தே வீடியோவில் திறந்தது குறிப்பிடதக்கது




தமிழகத்தில் பெரும் தொழிற்சாலை, ஒரு பாலம், ஒரு குடியிருப்பி, அணைகட்டுக்கள், பெரும் அறிவியல் கழகங்களை ஒரு பிரதமர் திறக்கின்றார் என்றால் அது பாராட்டதக்கது


நேரு, இந்திரா எல்லாம் அதனைத்தான் தமிழகத்திற்கு செய்தார்கள்,மாறாக விவேகானந்தர் பாறை கட்டங்களில் கூட அந்த பிரதமர்களின் அக்கறை இருந்ததில்லை


அவர்களுக்கு இதனை எல்லாம் விட நாட்டில் நிறைய முக்கிய காரியங்கள் இருந்தன‌


ஆனால் நம் துரதிருஷ்டம் மத அடையாள சிலைகளை திறக்கும் பிரதமர் நமக்கு வாய்த்திருக்கின்றார்


இன்னும் என்னென்ன சாமி சிலைகளை இந்த ஆசாமி தமிழகத்தில் திறக்கபோகின்றாரோ தெரியவில்லை


இதனால் தமிழக மக்கள் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்றால் உலகெல்லாம் சுற்றும் பாரதபிரதமர் தமிழகம் வருவதற்கு என்ன செய்யவேண்டுமென்றால்


இந்து கடவுள்கள் அல்லது யோகிகளின் சிலையினை கட்டினால் போதும், மனிதர் எங்கிருந்தாலும் ஓடிவந்துவிடுவார்.


மற்றபடி எந்த பிரச்சினை என்றாலும் அவர் தமிழகத்திற்கு வரவே மாட்டார்.








உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவர் : மோடி


பாபர் மசூதியினை இடித்து அந்த இடத்தினை அபகரித்த காவி கும்பலும் நிச்சயம் சிறைக்கு செல்லவார்களா? மிஸ்டர் மோடி


அந்த மசூதி நில அபகரிப்பும் பெரும் குற்றமல்லவா? அப்படியானால் அத்வாணியினை அல்லவா பிடித்து உள்ளே போடவேண்டும்?




அத்வாணி மீது இந்த அளவிற்கு மோடிக்கு கோபமா?










No comments:

Post a Comment