வங்கதேசத்திடம் வென்றுவிட்டதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவினை எதிர்கொண்டால் என்னாகும்?
அப்படி சட்டமன்றத்தில் திமுகவினரின் கேள்வியினை எதிர்கொள்ளமுடியாமல் பழனிச்சாமி கோஷ்டி தடுமாறுகின்றது
எதிரிகளே இல்லாத ரிசார்ட்டில் விவாதித்துவிட்டு களத்தில் வந்து திமுகவினை எதிர்கொள்ள பழனிசாமி கோஷ்டி மிக மிக தடுமாறுகின்றது
கலைஞரிடம் பாடம் படித்ததை திமுகவினர் மிக அழகாக நிரூபிக்கின்றனர், பேச வெண்டிய இடத்தில் போட்டு தாக்குகின்றனர்
திமுகவினர் என்றால் சும்மாவா?
ப்ப்ப...ப்பப..ப்பப்ப் என பழனிச்சாமி கோஷ்டி தடுமாறிகொண்டிருக்கின்றது
அரசியல் என்றால் சின்னம்மா, தினரகரன், பன்னீர்செல்வம் என்றுமட்டு படித்துவிட்டு வந்த கோஷ்டி விதிபிதுங்கி நிற்கின்றது, பல இப்பொழுதே மயக்கம் பொட்டு விழலாம்
பல ஆம்புலனஸ்கள் விரைவில் கோட்டைக்குள் நுழையலாம்..எல்லாம் ஸ்டெச்சரில் அள்ளிகொண்டு செல்லபடலாம்
அந்த நிலையில்தான் திரு திருவென விழித்துகொண்டிருகின்றது பழனிசாமி கோஷ்டி
திமுக அகதளம் செய்துகொண்டிருக்கின்றது, அதுவும் இவர்கள் உறுப்பினர்களா? இல்லை வேலூர் கைதிகளா என போட்ட முதல் பந்திலே அதிமுக அலறிவிட்டது
அடுத்தடுத்து திமுக அதிரடி வீச, "அம்மே..சின்னம்மே" என அழுது கொண்டிருக்கின்றது அதிமுக பழனிச்சாமி குழு
No comments:
Post a Comment