சென்னையில் பலத்த பாதுகாப்பாம், மெரினாவில் 4 பேர் கூடினாலே கலைந்து போக சொல்கின்றார்களாம்
ஆனால் கூவத்த்தூர் கடற்கரையில் 130 பேர் கூடி ஆலோசனை செய்கின்றார்களாம், அவர்களை எந்த காவல்துறையும் கலைக்காதாம்
இன்னும் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியோ, வஜ்ரா வாகத்தால் தாக்கியோ கலைத்தால் என்ன?
அப்படியே தூக்கி லாரியில் ஏற்றி அந்தந்த தொகுதிகளில் கொண்டு இறக்கினால் என்ன?
இதனை செய்ய பின்லேடனை நள்ளிரவில் சுட்டு கடத்திய அமெரிக்க சீல் படையினரா வருவார்கள்?
தமிழக அரசுதான் செய்ய வேண்டும்
பன்னீரை சந்தித்தார் நடிகை கவுதமி
சசிகலா ஜே மரத்திற்கும் பதில் சொல்லவேண்டும், போயஸை விட்டு வெளியேறவேண்டும் என நேற்று சொல்லியிருந்தார்
முன்பு கமலஹாசனை பற்றி நிறைய கவலைபட்ட கவுதமிக்கு இப்பொழுதெல்லாம் தமிழக அக்கறை அதிகம்
அதுவும் மோடியினை சந்தித்துவிட்டு வந்தபின் இன்னும் அதிகம்
இப்பொழுது பன்னீரை வேறு சந்தித்து ஆதரவு தெரிவிக்கின்றாராம்..
ஆக..
"தாயி தமிழிசை, உன் நாற்காலிக்கு ஆபத்து வந்திருசிம்மா வந்திருச்சி....."
No comments:
Post a Comment