Monday, August 21, 2017

அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு: தமிழிசை அறிக்கை

அசாமில் பெரும் வெள்ளம், காசிரங்கோ சரணாலயத்தில் புலி உட்பட 300 விலங்குகள் உயிரிழப்பு


இப்பொழுதெல்லாம் இந்த "பீட்டா" எங்கிருக்கின்றது என்றே தெரியாது, ஆனால் தமிழகத்து காளைமாடுகளை விளையாட தொட்டால் மட்டும் அதற்கு "விலங்கு நேயம் " பொத்துகொண்டுவரும்.






தீவிரவாதிகளை ஸ்தம்பிக்க வைத்துள்ள பணமதிப்பு இழப்பு நடவடிக்கை!: அருண் ஜேட்லி பெருமிதம்


அதனால் சிறையில் இருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் திறந்துவிட்டு விடலாமா அமைச்சரே?


தீவிரவாதிகளுக்கு இதனால் என்ன பெரும் நஷ்டம்? அவர்கள் உழைத்து சம்பாதித்த பணமா போனது?




அந்நிய நாட்டு பணம் மூலம் அவர்கள் புத்துயிர் பெறத்தான் செய்வார்கள்.


இதெல்லாம் ஒரு பெருமிதம் என சொல்லிகொண்டிருக்கின்றார் அமைச்சர்.


அம்மா சமாதிக்கு வந்து சென்றதில் இருந்தே ஒரு மாதிரிதான் தள்ளாடுகின்றார் ஜெட்லி, சமாதி ராசி அப்படி.






பல கூட்டங்கள் இருப்பதால் அமித் ஷாவின் தமிழக வருகை ஒத்திவைப்பு: தமிழிசை அறிக்கை


அதாவது அவருக்கு பல கூட்டம் இருப்பது அம்மணிக்கு தெரியாது, இன்று கூட்டத்திற்கு வரவேண்டிய அமித்ஷா வராததால் அவசரமாக அவரை தமிழிசை தேடியபொழுது அவர் இன்னொரு கூட்டத்தில் இருப்பது தமிழிசைக்கு தெரிந்தது.


இனி இன்னொருநாளில் ஏற்பாடு ஒன்றும் செய்யாமலிருக்கும் பொழுது திடீரென வந்து நிற்பார் அமித்ஷா, அப்படித்தானே மேடம்




ஏம்மா, அதிமுகவில் பூகம்பம் நடக்கும் நேரத்தில் அமித்ஷா தமிழகம் வருவது நல்லதல்ல என பகிரங்கமாக சொன்னால்தான் என்ன?


கேரளத்தில் த்ன்னை விட சன்னிலியோனுக்கு அதிக கூட்டம் கூடியதை கண்ட கடும் அப்செட்டில் அமித்ஷா இருக்கின்றார், இப்பொழுதெல்லாம் சன்னி லியோன் சுற்றுபயணத்தை சரிபார்த்துவிட்டுத்தான் அமித்ஷா கிளம்புகின்றாராம்


அதனால் சன்னி இங்கு வரவில்லை, நீங்கள் வந்து கூட்டத்தில் தலமையேற்கலாம் என தமிழக பாஜக சொன்னால்தான் அமித்ஷா வருவார்.







 


No comments:

Post a Comment