Friday, August 18, 2017

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி

பார்சிலோனாவில் மர்ம நபர்கள் தாக்குதல், 13 பேர் பலி


இப்பொழுதெல்லாம் ஐரோப்பாவில் தீவிரவாதிகள் தாக்குதல் மாறிவிட்டது. கடும் பாதுகாப்புகள் காரணமாக அவர்களால் பெரும் ஆயுதங்களோடு தாக்கமுடியவில்லை. அதனால் கிடைத்த வாகனத்தில் ஏறி கூட்டத்தில் பாய்ந்துவிடுகின்றார்கள்.


மொத்தமாக முடிந்தவரை நசுக்குவதுதான் திட்டம் ஆனால் காவல்துறை உடனே வாகனத்தை முடக்கிவிடுவதாலும், இன்னும் பல காரணங்களாலும் பலத்த சேதமில்லை.




சில இடங்களில் நடந்த இந்த தாக்குதல் ஸ்பெயினிலும் தொடங்கியிருக்கின்றது. நிச்சயம் இந்தியா இம்மாதிரி சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுகொள்ளவேண்டும். இங்கு மக்கள் கூடுமிடம் மிக அதிகம். இங்கும் அப்படி தாக்குதல் நடத்த வாய்ப்பு அதிகம், இந்திய பாதுகாப்பு துறை இதனை கவனத்தில் எடுத்துகொண்டிருக்கும் என நம்புவோம்


இதே பார்சிலோனாவில் கொஞ்சநாளைக்கு முன்பு சுற்றுலா சென்றிருந்தார் குஷ்பூ. அப்பொழுது இம்மாதிரி தாக்குதல்கள் நடக்காதது பெரும் ஆறுதல்,


கடவுளுக்கு நன்றி.அப்பொழுது பொறுமைகாத்த அந்த தீவிரவாதிகளுக்கும் நன்றி.



No comments:

Post a Comment