Wednesday, August 16, 2017

வெல்ல பிறந்தவன் : 09



Image may contain: one or more peopleபாபிலோனை நோக்கி வந்தான் அலெக்ஸாண்டர், பாபிலோன் எனும் பெருமைமிகு நகரத்தை கைபற்றும் வேகம் அவனிடம் இருந்தது.


டார்சியசோ மிகபெரும் படையினை திரட்டிவைத்திருந்தான், கடந்த முறைபோல் அல்ல, இம்முறை அவனின் தயாரிப்பு கடுமையாக இருந்தது


முதலில் திறந்த களத்தினை தேர்ந்தெடுத்தான், அதில் தன் தேர்படை நகர புல் எல்லாம் வெட்டி, கற்களை எல்லாம் அகற்றி ஒரு மைதானம் போல ஆக்கியிருந்தான், அந்த களமிருந்த‌ டைக்கிரீஸ் ஆற்று கரையில் அவன் படை ஆர்பரித்து நின்றது


முண்ணணியில் தேர்படை அதனை அடுத்து குதிரைபடை, காலாட்படை , அடுத்து மெய்காவல் படை என மிக பிரமாண்ட படையோடு களத்தில் நின்றான் டேரியஸ், கிட்டதட்ட 2 லட்சம் பேர் கொண்ட கடல் அது.


அலெக்ஸாண்டர் பக்கம் 60 ஆயிரம் பேர் இருந்தார்கள், அவனோடு சேர்த்த்து 60 ஆயிரத்து 1.


நேரம் நெருங்கிற்று, களத்தை கண்டான் அலெக்ஸாண்டர். அவனுக்கும் மற்ற மன்னர்களுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான். படை அமைப்பினை கண்டவுடன் எதிரியின் வியூகத்தினை மனதில் ஓடவிடுவான் அலெக்ஸாண்டர். அதன் பின் தன் வியூகங்களை நொடிபொழுதில் அறிவிப்பான் அவன் படை தயாராக வேண்டும் அது தளபதி பொறுப்பு


மற்ற மன்னர்கள் அப்படி அல்ல, அரசவையில் இருந்து ஆலோசிப்பார்கள் அப்படியே மோதவருவார்கள், கடைசி வரை அதே வியூகம்தான், இடையில் பெரிதாக மாற்றமாட்டார்கள்


தார்சியஸின் படையினை கண்ட அலெக்ஸாண்டருக்கு புரிந்தது, தன்னை சுற்றிவளைத்து அடிக்கும் முடிவுக்கு தார்சியஸ் வந்துவிட்டான் அவன் தேர்படையினை இருபக்கமும் நிறுத்தியிருக்கும் விஷயம் அதுதான், ம்ம் சரி வியூகத்தை மாற்றவேண்டும், அந்த பெரும் படையினை கலைக்க வேண்டும் கலைத்தால் சிதறுவார்கள் டார்சியஸை நெருங்கலாம், அதுதான் வியூகம். முடிவு செய்துவிட்டான்


இம்முறை யுத்ததை டார்சியஸ் தொடங்கினான்


பாரசீக படை நகர ஆரம்பித்தது, சட்டென கட்டளை பிறப்பித்தான் அலெக்ஸாண்டர், இரு பிரிவாக பிரிகின்றோம் ஒரு பக்கம் நான் தலைவன் இன்னொரு பக்கம் பார்மீனியோ


இரண்டாக பிரிந்து உள்ளே தள்ளி கொஞ்சம் வீரர்களை நிறுத்தி வடிவில் நின்றது கிரேக்கபடை.


கொஞ்சம் கவனியுங்கள் எங்கோ ஒரு யுத்தம் நினைவுக்கு வருகின்றதா? எங்கும் இல்லை பாகுபலி 1ல் காளகேயரை வீழ்த்த பிரபாசும் ராணாவும் ஆளுக்கொரு பக்கம் நிற்பார்கள் அல்லவா? அதே காட்சி


அந்த சுவாரஸ்யமான யுத்தகாட்சிதான் அலெக்ஸாண்டர் டார்சியஸை எதிர்கொண்ட யுத்தத்தின் அப்பட்டமான காப்பி


பாய்ந்து வந்தது பாரசீக படை, தேர்படை வெகு வேகமாக வந்தது, அலெக்ஸாண்டரின் வடிவ வியூகத்தில் அது உட்புகுந்தது, கொஞ்ச தூரம் அவர்கள் வரவிட்டான் அலெக்ஸாண்டர் காரணம் அவர்கள் கிரேக்க ஈட்டிபடையின் ஈட்டி பாயும் தூரம் வரை வரவேண்டும்


வந்தவுடன் உத்தரவிட்டான், அந்த தேர்படையின் தேரோட்டிகளை மட்டும் தாக்குங்கள் போதும். கிரேக்க படையின் துல்லியமான ஈட்டி வீச்சில் பாரசீக தேரோட்டிகள் கொல்லபட அப்படியே நின்றது தேர்படை.


Image may contain: one or more people and outdoorதேர்படைக்கு தேரோட்டித்தான் முக்கியம். அர்ஜூனனை காத்ததும் தேரோட்டி கண்ணன், கர்ணனை வீழ்த்த முதல் காரணமே கர்ணனின் தேரைவிட்டு ஓடிய சல்லியன்.


இந்த தந்திரத்தைத்தான் அலெக்ஸாண்டரும் செய்தான். பலமிக்க தேர்படை நகராமல் நின்றுகொள்ள அந்த தேர்வீரர்களை இழுத்து போட்டு அடித்தது அலெக்ஸாண்டரின் படை


கடும் அதிர்ச்சி அடைந்த டாரியஸ் திகைப்பதற்குள் இப்பக்கம் பார்மீனியோவும், அப்பக்கம் அலெக்ஸாண்டரும் முன்னேறி வந்தனர், பாரசீக படை இரு பக்கம் பிரிந்தது


கடும் யுத்தம் ஆரம்பித்தது, 2 லட்சம் பேரை திரட்டினாலும் டாரியஸ் அனுபவமில்லா வீரர்களையும் அவசரத்தில் சேர்த்திருந்தான்,இதனை எளிதாக கண்டுகொண்டான் அலெக்ஸாண்டர்


அதன் பின் மூர்க்கமான யுத்தத்தை அவன் தொடுக்க , பாரசீக படைகள் கலைந்தன, கடும் தயாரிப்பில் இருந்த அலெக்ஸாண்டரின் படைகள் அந்த ஆச்சரியத்தை செய்தன‌


2 லட்சம் பேரினை அலெக்ஸாண்டரின் 60 ஆயிரம் பேர் தோற்கடித்தனர். டாரியஸை தேடினான், கூட்டத்தின் நடுவில் செத்து கிடந்தார் டாரியஸ்


அவர் அருகில் சென்ற அலெக்ஸாண்டர், தன் மேல் அங்கியினை கழற்றி அவரை மூடி பணிந்தான். கிரேக்க உச்சமரியாதை அதுதான்


இப்பொழுது பாரசீகம் அலெக்ஸாண்டர் வசம், 200 ஆண்டுகாலம் ஆண்ட அந்த பெருமை மிக்க பாரசீக அரசின் பாபிலோன் மாளிகைக்குள் கம்பீரமாக நுழைந்தான் அலெக்ஸாண்டர்


அங்கு டாரியசின் மனைவியும் மகளும் இருந்தனர்.


பொதுவாக ஒரு மன்னன் எதிரி நாட்டை கைபற்றும் பொழுது அந்நகரை விட்டுவைப்பதில்லை, கொள்ளை எரிப்பு கொடுமை என பல நடக்கும், அரச குடும்பத்தையே அழித்துவிடுவான்


ஆனால் அலெக்ஸாண்டர் மாறுபட்டவன். வென்ற நாட்டையும் தன் நாடாகவே நடத்தினான். டாரியஸின் மனைவி மகளை அதே ராஜ வாழ்க்கைக்கு அனுமதித்தான்


அடுத்து அவன் செய்த விஷயம்,பாரசீகத்தின் அறிஞர்களை, ஞானிகளை அழைத்து உரையாடினான். அதிலே அவன் முகம் வாடியது


ஆம், அதுவரை கிரேக்கர்கள் மட்டுமே உயர்ந்த நாகரீகம் கொண்டோர் என்றும், மற்ற நாட்டுக்காரர் எல்லாம் காட்டு மிராண்டிகள் என்பதே அவனின் கருத்தாக இருந்தது. ஆனால் எகிப்து, இப்பொழுது பாபிலோன் என எல்லாம் சுற்றிபார்க்க பார்க்க அவனுக்கு அந்த எண்ணம் மாறியது.


அந்த தொங்கும் தோட்டம் அப்பொழுது இருந்தது, மகா அழகிய கட்டங்கள் இருந்தன, பாரசீகத்தில் உணவு முதல் உடை வரை ரசனையாக இருந்தது.


கிரேக்கர்களை விட உயர்ந்த கலையும், அழகும் உலகில் உண்டு என அன்றுதான் அவனுக்கு விளங்கிற்று, மனதளவில் நொறுங்கினான், ஆனால் அவற்றை எல்லாம் அழிக்க அவன் எண்ணவில்லை மாறாக மதித்தான்.


அதுவும் பாபிலோனியரின் நாகரீகமும், உயர்ந்த சிந்தனையும், அவர்களின் தத்துவமும் மிக உயர்ந்தாகவே அவனுக்கு பட்டது.


அவற்றை எல்லாம் பாதுகாக்க ஒரு நூலகம் அமைக்க உத்தரவிட்டான், சிலவற்றை தன் நாட்டிற்கு அனுப்பவும் உத்தரவிட்டான்.


வானிலை ஆராய்ச்சி முதல் மருத்துவம் வரை பல நல்ல நூல்கள் இக்காலத்தில்தான் ஐரோப்பாவிற்கு சென்றன, உபயம் அலெக்ஸாண்டர்.


ஒரு நாட்டை கைபற்றுவது கடினம், அதனை விட மிக கடினமானது அங்கே தன் அதிகாரத்தை தக்க வைப்பது. வெற்றிதான் இல்லையென்றில்லை ஆனால் மன்னனை கொன்றவெற்றி என்ன இருந்தாலும் பாரசீகர்கள் திருப்பி அடிப்பார்கள்


என்ன செய்யலாம்?


அற்புதமாக திட்டமிட்டான் அலெக்ஸாண்டர், டேரியசின் மகளை திருமணம் செய்துவிட்டான். இப்பொழுது அவன் பாரசீக மருமகன், இனி யார் கொல்வார்கள்?


அதோடு இன்னொரு கதையினையும் கிரேக்கர் பரப்பினர். அதாவது அலெக்ஸாண்டர் டயர் மன்னனிடம் யுத்தம் செய்யும்பொழுதே டார்சியஸ் சமாதானத்திற்கு வந்ததாகவும், அரசனின் உறவினர் தடுத்துவிட்டதாகவும் எல்லாம் கதைபரப்பினர்


அது இன்றுவரை வரலாற்றில் உண்டு. அரசு நடத்த இம்மாதிரி சில விஷயங்களை அரசே பரப்பவேண்டும் என்பது ஒரு ராஜதந்திரம், இன்றும் இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசும் இம்மாதிரி சில விஷயங்களை அவர்களே கசியவிடுவார்கள், கலைஞர் அதில் கில்லாடி


இந்த தந்திரத்தில் அன்றே ஊறியிருந்தான் அலெக்ஸாண்டர்.


பாரசீக மன்னனாக அவன் முடிசூட்டும்பொழுதே டேரியசின் மகளை மனைவியாக அவன் அருகே அமர்த்தியிருந்ததுதான் அவனின் தந்திரமான வெற்றி, ஒரு எதிர்ப்புமில்லை மாமன்னன் அலெக்ஸாண்டர் வாழ்க எனும் குரல் மட்டும்தான் கேட்டது.


முதல் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தானியேல் தீர்க்கதரிசியின் கனவு, மேற்கிலிருந்து ஒரு ஆட்டு கடா வந்து கிழக்கில் இருந்த கடாவினை முட்டிற்றே, வானதூதர் கூட வந்து விளக்கம் கொடுத்தாரே, அந்த கனவு இப்பொழுதுதான் நிறைவேறிற்று


அலெக்ஸாண்டர் யூதர்களை பெரிதும் கண்டுகொள்ளவில்லை என்பதால் அவர்கள் பாலஸ்தீனுக்கு திரும்ப தடையேதுமில்லை


தானியேலின் கனவு அப்படியே பலித்தது, ஆனால் அலெக்ஸாண்டரின் கனவு பலிக்கும் நேரம் இன்னும் வரவில்லை


ஆம் அவனின் கனவு இந்தியாவினை கைபற்றுவது, பாரசீகம் வந்தாயிற்று இனி அப்படியே சென்றால் இந்தியாதான், சென்றுவிடலாமா?


சாதரண மன்னன் என்றால் உடனே கிளம்புவான், ஆனால் இது வீரமும் தந்திரமும் கலந்து பிறந்த அலெக்ஸாண்டர் அல்லவா?


தன் உளவுபடையினை இந்தியாவிற்குள் அனுப்பியிருந்தான். அது வந்து சேருமட்டும் அவன் இந்தியாவுக்குள் புக தயங்கினான்.


ஆனால் அதனை வெளிகாட்ட முடியாது, மன்னனின் மனதில் என்ன இருக்கின்றது என்பது யாருக்கும் தெரிய கூடாது என்பது ராஜநீதி.


அந்த உளவு தகவல் வருமட்டும் அவன் உலாவ ஒரு இடம் வேண்டியிருந்தது, சும்மா விட்டால் படை சுகம் கண்டுவிடும், விட கூடாது.


கிடைத்த தகவல்படி ஆப்கானிஸ்தானுக்கு படையினை கிளப்பினான், வழக்கம் போல வெற்றி. காபூலை அடைந்தான்


அது என்ன ராசியோ தெரியவில்லை காபூலை பிடிக்கும் அரசுகள் எல்லாம் அங்கு தளம் அமைத்துகொள்ளும், இன்றுவரை அமெரிக்க தளம் அங்கு உண்டு


முதலில் அங்கு தளம் அமைத்தவன் அலெக்ஸாண்டர்தான். பெரும் முகாமினை அமைத்தான். அங்கிருந்து வடக்கு செல்வது அவன் திட்டமாக இருக்கலாம், ஆனால் இப்பொழுது இந்தியா அல்லவா முக்கியம்.


ஆப்கனில் சில கிரேக்க அமைப்புகளை உருவாக்கினான், அந்த அடையாளங்கள் காந்தகாரில் கூட இன்றும் உண்டு.


ஆப்கனில் அவன் சந்தித்த பெரும் சவால் இன்று அமெரிக்க செயற்கை கோளே தோற்ற பகுதியான ஸ்வாட் பள்ளதாக்கு, இன்று தாலிபான்களின் சொர்க்கம், பின்லேடன் கூட அங்குதான் இருந்தார். இன்றைய பாகிஸ்தான் ஆப்கன் எல்லையது


அந்த மலைஜாதி அன்றே முரட்டு கூட்டம், இன்றும் அப்படித்த்தான், அவர்களுடன் மோதும்பொழுதுதான் சாவின் விளிம்பிற்கு சென்றான் அலெக்ஸாண்டர்


இரு அம்புகள் அவனை தாக்கின, ஆனாலும் அதன் பின் அடிபட்ட புலியாக மாறி அந்த முரட்டு கூட்டத்தை ஒழித்துகட்டினான். அலெக்ஸாண்டரின் கொடூரமுகம் அந்த பகுதியில்தான் தெரிந்தது.


அதில் அவன் ஒரு தந்திரத்தை மறைமுகமாக செய்தான், அன்று அது இந்திய எல்ல்லைக்கு அருகான பகுதி, பாகிஸ்தான் எல்லாம் இல்லவே இல்லை, அதிலிருந்து இந்தியா என வெளிநாட்டவர் நம்பினர்.


இதில் வெறியாட்டம் ஆடினால் இந்தியருக்கு பயம் வரும் என்ற மிரட்டல் தந்திரமும் அதில் இருந்தது.


காயம்பட்ட அலெக்ஸாண்டருக்கு ஓய்வு தேவைபட்டது, அங்கு பணிசெய்ய வந்தவள் ரக்சனா எனும் ஆப்கன் அழகி, அதுவரை பெண்ணாசை என்றால் அறவே இல்லாமல் , ஒப்புக்கு டேரியஸ் மகளை திருமணம் செய்திருந்த அலெக்ஸாண்டரின் மீது ரக்சனா வடிவில் பானம் செலுத்தினான் மன்மதன்


காதலில் விழுந்தான் அலெக்ஸாண்டர், காதல் ஒரு மகனையும் கொடுத்தது.


எத்தனையோ அழகிகளை அசால்ட்டாக கடந்த அலெக்ஸாண்டர் எப்படி ரக்சனாவிடம் மாட்டினான் என்பதுதான் வரலாற்று அதிசயம், அவள் அப்படி அழகில் மிளிர்ந்திருக்கின்றாள்.


ஆப்கன் , காயம், ஓய்வு, ரக்சனா என்றிருந்த அலெக்ஸாண்டரின் முன்பு இந்தியாவில் தகவல் திரட்டிய உளவாளிகள் வந்து நின்றனர்


சொல்லுங்கள் என்றான் அலெக்ஸாண்டர்


தயங்கினர் உளவாளிகள்


குறிப்பறிந்து கண்களை உருட்டினான் அலெக்ஸாண்டர்


குனிந்தபடி சொன்னார்கள் உளவாளிகள்


"மன்னா, இந்தியாவிலும் பல மன்னர்கள் ஆள்கின்றார்கள் சிந்து நதிபக்கம் சில அரசுகள் உண்டு, அதில் புருஷோத்தமன் மகா பலமானவர், அவர் தான் உங்கள் முதல் எதிரி


என்னால் அவனை வெல்லமுடியாது என நினைக்கின்றீர்களா?


மன்னா அவரிடம் படைபலம் பெரிது, அதுவும் யானைபடை பலம் வாய்ந்தது, நமக்கோ யானைபடை என்றால் என்னவென்று கூட தெரியாது.


யானையும் ஒரு மிருகம், மிருகங்களுக்குள்ள பலகீனம் அதற்கும் உண்டு, வழி கண்டுபிடிக்கலாம், அது மட்டும்தான் சவாலா?


சிந்துவினை நீர் கடந்தாலும், கங்கை நதிகரையில் மவுரிய சாம்ராஜ்யம் இருக்கின்றது


அதற்கென்ன?


அதன் வரவாறு வேறுமாதிரியானது, நீர் வெற்றிபெறும் இடமெல்லாம் நான் அரிஸ்டாட்டிலின் மாணவன் என முழங்குகின்றீர் அல்லவா?


ஆம் அதிலென்ன சந்தேகம், அரிஸ்டாட்டிலை விட சிறந்த ஆசிரியன் எவன் உண்டு?


ஒருவன் அங்கு உண்டு, அவன் பெயர் சாணக்கியன்


அப்படி என்ன கிழித்தான் சாணக்கியன்?


நீங்கள் மன்னரின் மகன், உங்களை அரிஸ்டாட்டில் பெரும் மன்னராக்கியதில் ஆச்சரியமில்லை, ஆனால் காட்டில் வேட்டையாடிய ஒரு சிறுவனை கண்டெடுத்து அவனை வீரனாக்கி பின் மன்னனாக்கி இன்று பெரும் சாம்ராஜ்யம் அங்கு அமைத்த்திருக்கின்றான் அவன்


அலெக்ஸாண்டரின் மனம் அப்பொழுது படபடத்தது, அவன் முகம் கறுத்தது


அவர்களொ சொல்லிகொண்டே இருந்தார்கள், அப்படி பெரும் அறிவாளி, அந்நாட்டின் ஆசான் அவன் தான், அங்கு அவன் ஆட்சியில் பொற்கால ஆட்சி நடக்கின்றது, நல்லாட்சி நடக்கும் நாட்டு மக்கள் அரசுக்கு ஆபத்து என்றால் என்ன விலை கொடுத்தாலும் அரசை காக்க கிளம்புவார்கள் என்பது அரசியல் பாடம்


சாணக்கியன் வாழும் நாட்டில் நீங்கள் படையெடுத்து செல்லும்பொழுது அவர்கள் தயாரிப்பு எப்படி இருக்கும் என சொல்ல தெரியவில்லை மன்னா


அதிர்ந்து உட்கார்ந்தான் அலெக்ஸாண்டர், ஆனாலும் அச்சத்தை வெளிகாட்டவில்லை, அவர்களை கிளம்ப சொல்லி உத்தரவிட்டான்.


இன்னும் சில உளவாளிகளை கங்கைகரைக்கு அனுப்பிவிட்டு தன் படைகளுக்கு உத்தரவிட்டான்


நாம் இந்தியா மீது படையெடுக்கின்றோம், கிளம்புங்கள்


தொடரும்...














 


 

No comments:

Post a Comment