இந்தியாவிற்கு கிளம்ப திட்டமிட்டு அலெக்ஸாண்டர் தன் தெய்வத்தை வணங்கிய நேரங்களில் அவனுக்கு சகுனம் சரியில்லாமல் பட்டது. அதுவரை அவனுக்கு ஒத்துழைத்த விதி இம்முறை அவனுக்கு மாறிற்று.
பெரும் பேரரசை அமைத்துவிட்டான், கிட்டதட்ட 50 நாடுகள் பெரும் கோட்டைகள் அமைந்த, கிரீஸிலிருந்து இந்திய எல்லைவரை பூதமாக பரவிவிட்டது அவன் பேரரசு, 30 வயதிற்குள் அவன் அந்த சாகசத்தை செய்திருந்தான்.
இத்தனை அரசுகளையும் அடக்கி வைப்பதுதான் அடுத்த சாகசம் என்பது அவனுக்கு புரிந்தது, பல இடங்களில் கலவரம் வெடித்தன அவற்றை எல்லாம் அடக்கி நிலைகொள்ள தன் ராணுவத்தின் பல பிரிவுகளை அனுப்பவேண்டிய நிலை.
அப்படி ஒரு ராணுவபிரிவு ஒரு கலககாரனை அடக்க சென்றது, கலககாரன் யாருமல்ல, கட்டப்பா பார்மினியோவின் மகன். என் தந்தையும் போரிட்டார், இக்கோட்டையில் நான் அதிகாரம் செலுத்தகூடாதா? என்பது போன்ற உரிமை குரலை அவன் எழுப்பிகொண்டிருந்தான்.
கலவரத்தை அடக்க சென்ற படை அவனை கொன்றுவிட்டது, விஷயம் அலெக்ஸாண்டர் காதிற்கு சென்றபொழுது அவன் பெரும் அதிர்ச்ச்சி காட்டவில்லை. இங்கு நடப்பது கிரேக்கத்திற்கான பெரும் போர், யாருக்கும் சாவு எப்போதும் வரலாம் என்ற அலட்சியம் அவனிடம் வெளிபட்டது.
ஆனால் பார்மீனியோ? பிலிப்பிற்கு தோழனாய் இருந்து அலெக்ஸாண்டருக்கு தாய்மாமன் போல இருந்த பார்மீனியோவின் உள்ளத்தை அது பாதித்தது, என்ன இருந்தாலும் ஒருவார்த்தை தன்னிடம் சொல்ல கூடாதா? என்ற ஏக்கம் அவனுக்கு வெறியாய் மாறிற்று.
பிரச்சினை வெடித்தது பார்மீனியோ அலெக்ஸாண்டரை விட்டு விலகி சென்று தூரமாய் சென்றான், அவனோடும் பலர் சென்றனர், இனி அலெக்ஸாண்டருக்காக போரிடுவதில்லை என முடிவெடுத்தனர்.
இதுதான் வரலாற்றில் சொல்லபட்ட அலெக்ஸாண்டரின் வீரர்கள் நாடு திரும்ப கலகம் என வரலாற்றில் சொல்லபட்ட வரிகள்.
பிலிப் போல அலெக்ஸாண்டருக்கும் முன்கோபம் இருந்தது, பார்மீனியோ விலகிபோன நேரத்தில் பலர் அவனுக்கு தூபமிட்டனர். மாமன்னா பார்மீனியோ பெரும் வீரன், அவனை விட்டுவைத்திருப்பது ஆபத்து.
செருக்கின் உச்சத்தில், இனி தன்னை எதிர்ப்பவன் யாருமில்லை என்ற மமதையில் அலெக்ஸாண்டர் பார்மீனியோவினை கொல்ல உத்தரவிட்டான்.வஞ்சகமாக பார்மீனியோவினை சாய்த்தார்கள் அலெக்ஸாண்டர் வீரர்கள்.
பாகுபலியில் கட்டப்பாவினை பாகுபலி கொன்றால் எப்படி இருந்திருக்கும்? அதே கொடூரம் உண்மையில் அன்று நடந்தது.
உத்தரவிட்டானே அன்றி, பார்மீனியோ கொல்லபட்டபின் நடைபிணமானான் அலெக்ஸாண்டர். அவரின்றி அவர் எந்த யுத்தமும் அதுவரை செய்ததில்லை. ஆத்திரமும் செருக்கும் தன்னிலை மறக்க செய்ததில் அவனுக்கே அவன் மேல் வெறுப்பு.
ஆயினும் மனதை தேற்றிகொண்டு இந்தியா மீது படையெடுத்த்தான், முதலில் தட்ச சீலம் வந்தான். அங்கு அம்பி என்றொரு அரசன் ஆண்டுகொண்டிருந்தான். அலெக்ஸாண்டர்ர் வருகின்றான் என்றவுடன் வெள்ளைகொடி காட்டி சரண்டைந்தான்.
அங்கு அன்றே ஒரு பல்கலைகழகம் இருந்தது, அலெக்ஸாண்டர் கல்வி கூடங்களை மதிப்பவன் என்பதால் அங்கிருந்த பெரும் ஆசிரியர்களோடு உரையாடினான்.
அவர்கள் இந்திய தத்துவம், ஞான மரபினை விளக்க விளக்க அலெக்ஸாண்டருக்கு விளக்க விளக்க தலைசுற்றியது அவனுக்கு.
ஆம் அலெக்ஸாண்டர் என்பது நீயா? உன் ஆன்மாவா? எது உண்மையான அலெக்ஸாண்டர் என அந்த ஞானிகேட்ட கேள்வி அவனை புரட்டிபோட்டது, அதுவரை அப்படி ஒரு கேள்வியினை அவன் எங்கும் கேள்விபடவில்லை
அவன் பல சிறுதெய்வ வழிபாடு நிரம்பிய கிரேக்கமே பெரும் நாகரீகம் என நினைத்து வளர்ந்தவன், பாரசீகத்தில் அது நொறுங்கினாலும், இந்த தட்சசீல ஞானி அவனை அடித்து வீழ்த்தியிருந்தார்.
அவருடன் பேச பேச இவர் பெரும் ஞானி என அவனுக்கு விளங்கிற்று,மெதுவாக கேட்டான் உங்கள் குரு யார்?
ஞானி சொன்னான் " அது சாணக்கியன், கங்கைகரையில் ராஜகுருவாக வீற்றிருக்கின்றார் அவர், நாங்கள் அவரின் சீடர்கள்"
இவரே இப்படி என்றால், சாணக்கியன் ஆயிரம் அரிஸ்டாட்டிலுக்கு சமம் அல்லவா? அவன் அஞ்சினான்.
ஆனாலும் பயத்தை வெளிகாட்டாமல் அடுத்த நாட்டு மன்னனுக்கு ஓலை அனுப்பினான், "மாமன்னன் அலெக்ஸாண்டருக்கு கப்பம் கட்டி, அவன் ஆளுமையினை ஏற்று வரவேற்க தயாராகுங்கள்"
அந்த மன்னன் போரஸ் எனும் புருஷோத்தமன். இன்றைய பெஷாவர் எனப்படும் அன்றைய புருஷபுரத்தை ஆண்டுகொண்டிருந்தார், பதில் ஓலை அனுப்பினார் "இந்நாட்டின் மரம் கூட அவனுக்கு பணியாது, ஆனதை பார்த்துகொள்ளுங்கள்"
இவ்வளவு பெரும் வெற்றிபெற்ற , சர்வ சக்திவாய்ந்த அலெக்ஸாண்டரை ஒருவன் எதிரிக்கின்றானா? என சீறிவிட்டு கிளம்பினான்
ஜீலம் நதிக்கரை அருகே போரஸ் தயாராக நின்றான்
முதலில் பலமான யானைபடை, அடுத்து காலாட்படை, பக்கவாட்டில் குதிரைபடை, அடுத்து தேர்படை, அடுத்து மெய்காவல் படை சூழ யானையில் கம்பீரமாக போரஸ்.
அதுவரை அலெக்ஸாண்டர் யானைபடையுடன் மோதியதில்லை, அதன் யுத்தம் எப்படி இருக்கும் என்பதே அவனுக்கு தெரியாது, சிந்தித்தான்.
யுத்தம் தொடங்கபட்டது, பாய்ந்து வந்த யானைபடை அலெக்ஸாண்டர் படையினை காலில் போட்டு மிதித்தது, சட்டென உத்தரவிட்டான் அலெக்ஸாண்டர், தீபந்துகளை செய்து யானை படைக்குள் எறியுங்கள்.
அது பலனளித்தது, யானை படை மிரள அலெக்ஸாண்டர் கை ஓங்கும்பொழுது பெரும் மழை கொட்ட தொடங்கியபின் அது பலனளிக்கவில்லை ,மறுபடி யுத்தம் போரஸ் பக்கம் வந்தது.
யுத்தம் நீண்டது, போரஸ் மிக அசால்ட்டாக அலெக்ஸாண்டரை எதிர்கொண்டான். கலவரத்தை அடக்க அனுப்பபட்ட ராணுவம், பார்மீனியோ போன்ற அனுபவஸ்தன் இல்லாமல் சிரமபட்டான் அலெக்ஸாண்டர்.
மனதால் அவன் பெரிதும் குழம்பியிருந்தான், அவன் விதி மாறிகொண்டிருப்பதை அவனால் நம்ப முடியவில்லை. பலகீனமான மனதுடன் அவன் இட்ட போர் அவனுக்கு அனுகூலமகா இல்லை.
போரஸின் யானைபடையும், அம்புபடையும் அலெக்ஸாண்டருக்கு பெரும் சவால் கொடுத்தன, அலெக்ஸாண்டரின் ஈட்டிபடைகளை எல்லாம் முறித்துபோட்டது போரசின் படைகள்.
பல்வேறு துயர செய்திகள் அவனுக்கு வர தொடங்கின, பல அரசுகள் தாங்கள் விடுதலை பெற்றதாக சொல்ல தொடங்கின, இனி அலெக்ஸாண்டர் வராமல் அவர்களை அடக்க முடியாது எனும் நிலை.
பார்மீனியோ இல்லாமல் அலெக்ஸாண்டர் நடத்திய யுத்தம் அவனுக்கு வெற்றி கொடுக்கும் நிலையில் இல்லை, இந்நிலையில் அவன் குதிரையும் மரித்தது.
வரலாற்றில் இரண்டாம் முறையாக ஓங்கி அழுதான் அலெக்ஸாண்டர். புக்கிபிலேஸ் நீயுமா என்னை விட்டு போய்விட்டாய் என அவன் அலறிய அலறலில் போரஸ் மன்னனுக்கே ஒரு மாதிரியாய் ஆயிற்று.
புக்கிலேஸ் என்றால் எருது முகம் என பொருள். அலெக்ஸாண்டருக்கு 12 வயதான பொழுது அது அவனிடம் சேர்ந்தது, கிட்டதட்ட 20 ஆண்டுகள் அவனை சுமந்து துருக்கி, எகிப்து, பாபிலோன், ஆப்கன் என சென்றது. அவனுக்கும் அக்குதிரைக்கும் ஆத்மார்த்தமான நட்பு இருந்தது.
அக்குதிரையினை புதைத்து அதன் நினைவாக புக்கிலேஸ் எனும் நகரத்தை எழுப்பினான் அலெக்ஸாண்டர், அது இன்றளவும் பாகிஸ்தானில் உண்டு.
பார்மினியோவும், புக்கிலேசும் இல்லாத யுத்தத்தை அவன் தொடர விரும்பவில்லை. அப்படியே திரும்பினால் போரஸ் தன்னை தொடர்ந்துவந்து கொல்வான் என்பதும், அப்படி நடப்பது தன் அரசுக்கு அவமானம் என்றும் உணர்ந்தான்
போரஸை அவனால் வெல்லமுடியவில்லை, அதுவரை பார்க்காத மிக பிரமாண்டமான யுத்தத்தை அவர் நடத்தினார், இவரே இப்படி என்றால் மவுரிய சாம்ராஜ்யம் எப்படி இருக்கும் என நினைக்கும்பொழுதே கிரேக்கர்களுக்கு வயிறு கலங்கியது.
வெல்லமுடியா இடத்தில் சமாதானம் என்பது ராஜதந்திரம், அதனைத்தான் செய்தான் அலெக்ஸாண்டர், அதனால் போரஸ் நாடு போரசுக்கே கிடைத்தது
அது அவனின் மாவீரத்தை மெச்சி அலெக்ஸாண்டர் திரும்ப வழங்கியதாக வரலாறு எழுதபட்டது.
யார் அலெக்ஸாண்டரா மெச்சுவான்? அப்படி மெச்சியிருந்தால் டயர் மன்னனை விட்டிருப்பான், டார்சியஸை விட்டிருப்பான் இன்னும் எராளமான மன்னர்களை உயிரோடு விட்டிருப்பான்
ஆனால் அவர்களை எல்லாம் கொன்றுவிட்டு போரஸை மட்டும் விட்டுவைத்தான் என சொல்வதில்தான் வரலாறு படித்தவருக்கு சிரிப்பு வருகின்றது
யாராலும் வெல்லமுடியா கிரேக்க மாவீரனை ஒரு இந்திய அரசன் வென்றான் என்பதை அழகாக மறைத்தார்கள்.
போரஸ் அவனை விரட்டியடித்தார் என்பதுதான் உண்மை, பாரசீகத்தை வென்ற அளவு அலெக்ஸாண்டரால் இந்தியாவினை வெல்ல முடியவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.
மனம் வெறுத்து கிட்டதட்ட துறவி நிலைக்கு வந்திருந்தான் அலெக்ஸாண்டர், அதன் பின் அவன் குதிரையேறவில்லை, பல்லக்கில் தான் சுமந்தார்கள்
கலவரத்தை அடக்க தன் நண்பர்களுக்கு அதிகாரம் அளித்துவிட்டு பாபிலோன் நோக்கி செல்ல தொடங்கினான்
வாழ்க்கை எப்பொழுதும் ஒரே போல் செல்லாது, கோபுரத்தில் அமர ஒரு காலம் உண்டென்றால், அதிலிருந்து இறங்கவும் ஒரு காலமுண்டு என்பது அவனுக்கு புரிந்தது.
பாபிலோனை அடைந்தான் அலெக்ஸாண்டர், அவனின் உடல்நிலை நாளுக்குநாள் மோசமானது, எப்படியும் மாசிடோனியா செல்ல துடியாய் துடித்தது அந்த மாவீரனின் மனது.
தொடரும் ...
No comments:
Post a Comment