ஐ.எஸ் இயக்கத்திற்கு அணுகுண்டு கொடுக்க வடகொரியா ரெடி : சர்வதேச பரபரப்பு
இப்படி ஒரு விஷயத்தை சி.ஐ.ஏ பரவவிட்டுள்ளது. இதன் மூலம் உலக நாடுகள் வடகொரியாவினை காரிதுப்பியோ அல்லது அஞ்சியோ தன் பக்கம் வரலாம் என அது திட்டமிடலாம்.
ஆனால் அதே நேரம் இதனை முழுக்க மறுக்கவும் முடியாது, அமெரிக்காவினை பழிவாங்க எந்த எல்லை வரையும் வடகொரியா செல்லும்
ஐ.எஸ் இயக்கதிடம் அணு ஆயுதம் கிடைத்தால் அதன் இலக்கு அமெரிக்கார், ஈரான் மற்றும் ரஷ்யா என்பதாகத்தான் இருக்க முடியும்.
இந்த உலகில் அமெரிக்காவினை சுத்தமாக நம்ப முடியாது, அதன் உளவாளிகளில் சிலருக்கு சிறிய ரக அணுஆயுதங்களை கொடுத்து பழியினை வடகொரியா மேல் போட்டால் முடிந்தது விஷயம்
வடகொரியாவும் நம்ப முடியாத நாடு, கொடுத்தாலும் கொடுப்பார்கள்
இதில் பாதி உண்மையும், பாதி பொய்யும் இருக்கலாம்
இது இருக்கட்டும்.
டிரம்ப் கொஞ்சநாளாக பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்கின்றார், தேவைபட்டால் வான் வழி தாக்குதல் தீவிரவாதிகள் மேல் நடத்தபடும் எனவும் எச்சரிக்கின்றார்.
உடனே இந்தியாவில் சிலர் டிரம்ப் இந்திய ஆதரவு , மோடி மாஜிக் என தொடங்கிவிட்டனர்.
விஷயம் அதுவல்ல, பாகிஸ்தான் அவர்களின் நட்பு நாடு அது மாறாது.
அப்படி கண்டிக்கும் டிரம்ப் பாகிஸ்தானுக்கு நவீன விமானம் கொடுக்கமாட்டோம் என்றோ, காஷ்மீர் இந்தியாவின் பகுதி என்றோ சொல்லுமா என்றால் சொல்லாது
பின் ஏன் பாகிஸ்தானை சீண்டுகின்றார் டிரம்ப்
அதாகபட்டது சோவியத்துடன் அடிவாங்கிவிட்டு மாவோ நிக்சனின் காலில் விழுந்ததில் இருந்து சீனா அமெரிக்க அடிமை
அந்த அடிமை இப்பொழுது முறுக்குகின்றது, வடகொரியாவினை சீனா நினைத்தால் முடக்கலாம், அதோடு எல்லையினை பகிரும் நாடு அது. ஆனால் செய்யாது மாறாக ரசிக்கின்றது
இந்நிலையில் இந்தியாவினை சீனாவிற்கு எதிராக கொம்பு சீவும் செயலை அமெரிக்கா செய்கின்றது
இப்படி எல்லாம் பேசி இந்திய ஆதரவு போல் காட்டி முடிந்தால் சீனாவோடு மோதவிட்டு விட்டு வேடிக்கை பார்ப்பார்கள்
இந்தியாவிற்கு இதெல்லாம் தெரியும், அது அமைதியாக டிரம்பினை நோக்கி புன்சிரிப்பு சிரிக்கின்றது.
அவ்வளவு எளிதில் அமெரிக்க தந்திரத்தில் சிக்காது இந்தியா
No comments:
Post a Comment